திருவண்ணாமலை மாதம் தோறும் பௌர்ணமி நாட்களில் உள்ளூர்,வெளியூர் & வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்கிறார்கள். நேற்று(25.07.2023) மாவட்ட ஆட்சியர் திரு.முருகேசன் தலைமையில் பௌர்ணமி சிறப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
திருவண்ணாமலையில் ஆகஸ்ட் மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள்:
-
- ஆகஸ்ட் 1 மற்றும் 2 தேதிகளில் வரும் பௌர்ணமி நாளில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
- அதற்காக அதிக அளவில் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
- தனியார் பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்க முடிவு செய்யப்படுகிறது.
-
- ஆகஸ்ட் ஒன்றாம் தேதி காலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரை கோயில் நடை திறந்து இருக்கும்.
-
- அன்று முழுவதும் பக்தர்களுக்கு இலவச தரிசனம் அனுமதிக்கப்படும்.
-
- ஏற்கனவே அன்னதானம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே தற்பொழுது அனுமதி அளிக்கப்படும்.
-
- கிரிவலப் பாதை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
- ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு கண்காணிப்புக்குழு அமைக்கப்படும்.
Recent News:
திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா!
மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு!!
Gold Rate Increased Today Morning (21.04.2025)
Be careful about these side effects of excessive usage of nasal spray!!
Freedom Is Power. Knowing It Is Bliss – In Business and in Life. – J Sampath, Founder and CEO of JB Soft System
Various health issues we can get if we wear tight fitting clothes!!
JEE-2ம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது!!