கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பர்வதமலை உச்சியில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. நட்சத்திர கோயில் குருக்கள் , சந்தோஷ் தலைமையில், மல்லிகார்ஜுனர் சுவாமிக்கு விசேஷ முறையில் யாகங்கள் நடைபெற்றது. 4500 அடி உயர முள்ள மலையில் ஏறிச்சென்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.