Web Analytics Made Easy -
StatCounter

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் குறைகேள் அதிகாரியாக பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: குறைகேள் அதிகாரி(Ombudsman)( மக்களுக்கு அல்லது நுகர்வோருக்கு இருக்க கூடிய குறைகளைக் கேட்டு அதை நிவர்த்தி செய்ய முற்படும் அதிகாரி )

வயது : 68 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரம் : நாள்தோறும் ரூ.1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அனுபவம் இந்த பணியில் சேர விரும்புவோர், 10 ஆண்டுகளாவது மக்கள் தொடர்புடைய பணிகளில் அனுபவ பெற்றிருக்க வேண்டும்.

கல்வி தகுதி : ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : Direct of Rural Devolpment and panjat raj, Saidapet, Panagal building, Chennai-600015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 31.08.2021

வேலை வகை : தமிழக அரசு வேலைதேர்வு செய்யப்படுபவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *