கொரோனா தொற்று பரவலால் இந்த தை பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலையில் இருந்து, போலீசார் கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் கிரிவலப்பாதையில் செல்லாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் கிரிவலம் செல்ல வந்த பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். கிரிவலப்பாதையில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள், தங்களது அடையாள அட்டையை போலீசாரிடம் காண்பித்து சென்றனர். பக்தர்கள் கூட்டமின்றி கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. போலீசார் தொடர்ந்து கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
Recent News:
மஞ்சள் அலெர்ட்!
கலசபாக்கம் செய்யாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – பொதுமக்கள் எச்சரிக்கை!
Gold Rate Increased Today Morning (19.09.2025)
How to Apply for Unemployment Certificate in Tamil Nadu Easily!!
Unbelievable!! Fractures can be fixed in just 3 minutes with the help of this latest Bone Glue!!
Auspicious (Nalla Neram) time today (Sep 19th)
UPSC-யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!