Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு நாளை வேலை நாள்!

திருவண்ணாமலை கல்வி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு நாளை முழு வேலை நாளாக  மாவட்டக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

சென்னை – அயோத்தி இடையே விமான சேவையை இன்று தொடங்குகிறது ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்!

இன்று முதல் 8 புதிய வழித்தடங்கள் வழியே அயோத்திக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை, டெல்லி, அகமதாபாத், ஜெய்ப்பூர், மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து விமான சேவை இயக்கப்பட உள்ளது. சென்னையில் பகல்…

பிப்.10ம் தேதிக்குள் அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா!

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 37,576 அரசு பள்ளிகளில் பிப்.10ம் தேதிக்குள் ஆண்டு விழா நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. இதற்காக பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ₹14.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வணிக சிலிண்டர் விலை ரூ.12.50 உயர்ந்துள்ளது!

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.12.50 உயர்ந்துள்ளது. ரூ.1924.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ரூ.12.50 உயர்ந்து ரூ.1937க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தை அமாவாசை 2024 எப்போது? தேதி, நல்ல நேரம் குறித்த தகவல்!

தை அமாவாசையானது பிப்ரவரி 09ஆம் தேதி 2024 அன்று வெள்ளிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் அமாவாசை திதியானது காலை 08:05 மணிக்கு துவங்கி, பிப்ரவரி 10, 2024 அன்று அதிகாலை 4:28 மணிக்கு முடிவடைகிறது.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் பிப்ரவரி 1, 2-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். பிப்ரவரி 3 முதல் 5-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தில் இன்று போளூர் தாலுகாவில் ஆய்வு!

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தில் கலெக்டர் திரு. பாஸ்கர பாண்டியன் போளூர் தாலுகாவில் இன்று (31.01.2024) காலை 9 மணி முதல் நாளை காலை 9 மணி வரை மக்களுக்கான சேவைகள் அனைத்தையும்…

திருவண்ணாமலை மாவட்ட அலுவலக கூட்டரங்கில் நேற்று (29.01.2024) மக்கள் குறை தீர்வு நாள்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், நேற்று (29.01.2024) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன், அவர்கள் பெற்றுக்கொண்டார்.

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்”- மக்கள் குறைதீர்வு திட்டம் நாளை முதல் அமல்!

மக்களின் குறைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் எனும் திட்டம்’ சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை அமல்படுத்தப்படுகிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தப்படும் நடைமேடை எண்கள் அறிவிப்பு!

தென் மாவட்ட பேருந்துகள் அனைத்தும் இன்று (30-01-2024) முதல் சென்னை கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் புறநகர் பேருந்து முனையம் ஆகியவற்றில் இருந்து இயக்கப்படும். கன்னியாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம்,…

TNPSC குரூப்4 தேர்வுக்கான விண்ணப்பம் இன்று (30.01.2024) வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2024 – ஆம் ஆண்டு நடக்க இருக்கும் குரூப்4 தேர்வுக்கான விண்ணப்பம் இன்று (30.01.2024) வெளியிட்டது. ஜூன் 9-ம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30…

திருவண்ணாமலை – சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்!

ஆரணி, வந்தவாசி, செய்யாறு, போளூரில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் என திருவண்ணாமலை மண்டல பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

போளூரில் இருந்து மேல்சோழங்குப்பம் வழியாக சென்னை செல்லும் பேருந்து நேர விவரம்!

போளூரில் இருந்து கலசபாக்கம், வில்வாரணி, சோமந்தபுத்தூர், ஆதமங்கலம் புதூர், மேல்சோழங்குப்பம் போன்ற புதிய (148) வழித்தடத்தில் பேருந்து இயக்கப்படுகின்றது. போளூரிலிருந்து காலை 08.00 மணியளவில் இயக்கப்படுகின்றது. மேல்சோழங்குப்பம் இருந்து 9.15 மணியளவில் இயக்கப்படுகின்றது. பிறகு…

தென்மாவட்டங்களுக்கு செல்லும் TNSTC பேருந்துகளும் ஜனவரி 30ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும்!

செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

சென்னை மாநகர பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட் பெறும் வசதி சோதனை முறையில் அறிமுகம்!

சென்னை மாநகர பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட் பெறும் வசதி சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பல்லாவரம் பேருந்து பணிமனையின் கீழ் இயங்கும் பேருந்துகளில் UPI மற்றும் கார்டுகளை பயன்படுத்தி டிக்கெட்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் விவசாயத்துறை இயக்குனராக பணியிடை மாற்றம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த திரு பா.முருகேஷ் அவர்கள் விவசாயத்துறை இயக்குனராக பணியிடை மாற்றம்.