Web Analytics Made Easy -
StatCounter

ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் – புதிய வசதி அறிமுகம்!

சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் புதிய வசதியை அறிமுகம் செய்யும் தேர்தல் ஆணையம் – முதல் முறையாக வேட்பாளர்கள் https://suvidha.eci.gov.in என்ற இணையதளத்தில் மூலம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (16-03-2026)  பங்குனி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள். 

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை!!

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை. எரிபொருள் விநியோகத்தில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கலசபாக்கம் தாலுகாவிற்கு புதிய வட்டாட்சியாளர் பொறுப்பேற்பு!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தாலுகாவிற்கு புதிய வருவாய் வட்டாட்சியாளராக கே. துரைராஜ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (11.03.2026) நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. க. தர்ப்பகராஜ் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடக்கம்!!

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 4,219 தேர்வு மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.