Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை துர்க்கை அம்மன் கோயிலில் அக்.15 முதல் நவராத்திரி விழா தொடக்கம்!

திருவண்ணாமலை துர்க்கை அம்மன் கோயிலில் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 23-ஆம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெறும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நுழைவு வாயில் அருகே தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 வாரவிழாவை முன்னிட்டு இன்று (12.10.2023) பொதுமக்கள் அறியும் வகையில் பள்ளி மாணவர்கள், அரசு துறை அனைத்து நிலை…

கலசபாக்கம் அடுத்த மிருகண்டா அணையில் 16 அடி நீர் இருப்பு!

கலசபாக்கம் அடுத்த ஜவ்வாது மலைத்தொடரில் அமைந்துள்ள மிருகண்டா அணையில் 16 அடி நீர் இருப்பு உள்ளது.

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறப்பு!

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை அக்டோபர் 17-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அக்டோபர் 22-ம் தேதி இரவு 10 மணியளவில் கோயிலின் நடை அடைக்கப்படும். வழக்கமாக ஆன்லைன்…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கன மழையின் காரணமாக கே.ஆர்.பி அணை நீர் திறப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கன மழையின் காரணமாக கே.ஆர்.பி அணையில் வரும் நீரானது அதிகரித்து உள்ளதால் அணையை பாதுகாப்பு கருதி அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் கடலூர் ஆகிய ஐந்து…

தமிழக அரசு பேருந்துகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்பதிவு இன்று முதல் தொடக்கம்!

தமிழக அரசு பேருந்துகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி முன்பதிவு செய்வோர் இன்று (அக்டோபர் -11) முதல் இருக்கைகளை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 11 ஆம்…

திருவண்ணாமலையில் உலக மனநல தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி!

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தின் “உலக மனநல தினத்தை ” முன்னிட்டு மனநலம் என்பது உலகளாவிய மனித உரிமை ஆகும் என்ற கருப்பொருளை கொண்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள்,…

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 10, 11-ம் தேதிகளில்…

தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை கடந்த 2022-23ம் நிதியாண்டில் ரூ.1,253 கோடி வருவாய் ஈட்டியுள்ளது – அஞ்சல்துறை தலைவர் தகவல்!

தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை கடந்த 2022-23-ம் நிதியாண்டில் ரூ.1,253.62 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என அதன் முதன்மை அஞ்சல்துறை தலைவர் ஜெ.சாருகேசி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்திய அஞ்சல்துறை, ஐக்கியஅஞ்சல் ஒன்றியம் 1874-ல்…

மகாளய அமாவாசையை முன்னிட்டு இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மகாளய அமாவாசையை முன்னிட்டு வரும் 13ம் தேதி இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை கழகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (09.10.2023) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது பொதுமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா. முருகேஷ் அவர்கள்…

கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள சுற்று சுவரில் வண்ண ஓவியம்!

கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் இணைந்து பள்ளி வளாகத்தில் உள்ள சுற்று சுவர் வண்ண ஓவியம் வரைதல் பணி நடைபெற்று வருகின்றது.

கலசபாக்கம் மேல் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி!

கலசபாக்கம் மேல் தெரு பகுதி மற்றும் மருத்துவமனை செல்லும் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெறுகின்றது. தற்பொழுது மேல் தெரு பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

கலசபாக்கத்தில் தற்போது மிதமான மழை!

கலசபாக்கத்தில் இன்று காலை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது மிதமான மழை பெய்து வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலையை அடைந்தது.

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு!

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிவடைந்து, 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.