Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் ஆலயத்தில் இன்று அன்னாபிஷேகம்!

கலசபாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் ஆலயத்தில் இன்று (04.11.2025) மாலை 7 மணி அளவில் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. மேலும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.

கலசபாக்கம் இந்தியன் வங்கி புதிய கட்டிடம்!

நமது கலசபாக்கத்தில் செயல்பட்டு வந்த இந்தியன் வங்கி தற்போது புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இடம்: அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில்,கலசபாக்கம்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் நாளை தொடக்கம்!

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நாளை தொடக்கம் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள தொகுதிகளில் நாளை முதல் டிச.4 வரை வாக்காளர் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.

திருவண்ணாமலை மகாதீபம்: 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

டிசம்பர் 3-ம் தேதி நடைபெறவுள்ள திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மொத்தம் 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.    

கிராம சபை கூட்டம்!!

கலசபாக்கம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தையொட்டி நவம்பர் 1, 2025 (சனிக்கிழமை) காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறும். இடம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கலசபாக்கம். பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்!

சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு!

சிபிஎஸ்சி 10ம் வகுப்பு தேர்வுகள் 2026 பிப்ரவரி 17 முதல் மார்ச் 10 வரை, 12ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெறும். முழு அட்டவணை cbse.gov.in-ல் கிடைக்கும்.

ஐப்பசி மாத கிரிவலம்!

ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம், 04ம் தேதி (செவ்வாய்) இரவு 9:37 மணிக்கு தொடங்கி, 05ம் தேதி (புதன்) இரவு 7:20 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி…

தரவரிசை பட்டியல் வெளியீடு!

ஜூலை மாதத்தில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு முடிவுகள், மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் நவம்பர் 7க்குள் ஓடிஆர் (One Time Registration) மூலம் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை!!

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை நவம்பர் 10 முதல் 30 வரை நடைபெறும். வீட்டு பட்டியல் மற்றும் சுய கணக்கெடுப்பு நவம்பர் 1 முதல் 7 வரை நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சபரிமலை தரிசன முன்பதிவு நவம்பர் 1 முதல் தொடக்கம்!

சபரிமலை மகரவிளக்கு பூஜை காலத்தில் தினமும் 90,000 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி. நவம்பர் 1 முதல் முன்பதிவு தொடக்கம். 70,000 பேர் ஆன்லைனிலும், 20,000 பேர் ஸ்பாட் புக்கிங்கிலும் முன்பதிவு செய்யலாம்.