Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ் கந்தசாமி அவர்களின் மனிதநேய மருத்துவ திட்டத்தால் மக்கள் மகிழ்ச்சி!

மருத்துவமனை வர இயலாதவர்களுக்கு வீட்டிலேயே இலவச மருத்துவ உதவி வழங்கும் திட்டத்தை ஆட்சியர் கே எஸ் கந்தசாமி அறிமுகப்படுத்தியுள்ளார் இதனால் மகிழ்ச்சியடைந்த மாவட்ட மக்கள் இதுவரை யாருமே செய்திராத சாதனை எனக் கூறி அவருக்கு…

கலசப்பாக்கம் அருகே உள்ள கடலாடியில் ஊராட்சி செயலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது

கலசப்பாக்கம் அருகே உள்ள கடலாடியில் ஊராட்சி செயலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. ஊராட்சி செயலாளர்கள் தின எழுச்சி கொண்டாட்டத்தையொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் மக்கள் இனிப்புகள் வழங்கி பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் பேனா…

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு எம்எல்ஏ பன்னீர்செல்வம் 1.66 லட்சம் போனஸ் வழங்கினார்

படவேடு அடுத்த தேவனாங்குளம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்கும் விழா கடந்த 30ம் தேதி நடைபெற்றது. இதில் எம் எல் ஏ வி.பன்னீர்செல்வம் 2017-18 ஆம் ஆண்டிற்கான போனஸ் 1.66…

தூய்மை கலசப்பாக்கம் இயக்கத்தில் இணைந்து பங்காற்ற விருப்பமா?

கலசபாக்கம் அருகே செய்யாற்றினை தூய்மைப்படுத்தும் பணி மாவட்ட ஆட்சியர் கந்தசாமியால் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. போளூரை அடுத்து ஜவ்வாது மலையில் உருவாகும் செய்யாறு, செங்கம், கலசப்பாக்கம் கரையாம்புத்தூர் வழியாக செல்கிறது. இந்த நிலையில் ஆற்றில்…

டிசம்பர் 27, 30 தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல்

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் தேதி திங்கள்கிழமை (டிச. 2) காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும்.…

அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில் 62 லட்சம் மதிப்பீட்டில் அன்னதான கூடம் : மாண்புமிகு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் ஆ.கோ படைவிடு அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயிலில் 62 லட்சம் மதிப்புள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள அன்னதான கூடம் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு…

கலசப்பாக்கம் பகுதியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் : அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

கலசப்பாக்கம் பகுதியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார், இந்த புதிய கட்டிடத்தில் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு புதிய…

செய்யாற்றினை தூய்மைப்படுத்தும் பணி:  மாவட்ட ஆட்சியர் திரு கந்தசாமி தொடங்கிவைத்தார் 

கலசபாக்கம் அருகே செய்யாற்றினை  தூய்மைப்படுத்தும் பணி மாவட்ட ஆட்சியர் கந்தசாமியால் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. போளூரை அடுத்து ஜவ்வாது மலையில் உருவாகும் செய்யாறு, செங்கம், கலசப்பாக்கம் கரையாம்புத்தூர் வழியாக செல்கிறது. இந்த நிலையில் ஆற்றில் வளர்ந்துள்ள…

தூய்மை கலசபாக்கம் இயக்கம்: மாவட்ட ஆட்சியர் K.S கந்தசாமி தொடங்கிவைத்தார்

தூய்மை கலசபாக்கம் என்னும் இயக்கம் மாவட்ட ஆட்சியர் திரு கந்தசாமி அவர்களால் இனிதே துவக்கி வைக்கப்பட்டது. நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கலசபாக்கம் இயக்கத்தின் தலைவர் ஜெ சம்பத்…

கடலாடி மக்களுக்கு உதவித்தொகை: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் கடலாடி விதவை மற்றும் முதியோர் உதவித்தொகை ஆணைகளை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார். உடன் வட்டாச்சியர் ராஜலட்சுமி.

கேட்டவரம்பாளையம் மக்களுக்கு உதவித்தொகை: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் கேட்டவரம்பாளையம் விதவை மற்றும் முதியோர் உதவித்தொகை ஆணைகளை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார். உடன் வட்டாச்சியர் ராஜலட்சுமி.

பல்பொருள் அங்காடி திறப்பு விழா :  சட்டமன்ற உறுப்பினர்  V.பன்னீர்செல்வம் துவக்கிவைத்தார் 

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் . எடப்பாடி K.பழனிசாமி, அவர்கள், துணை முதலமைச்சர் மாண்புமிகு O.பன்னீர்செல்வம் அவர்களின் நல்லாட்சியில்,கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கலசப்பாக்கத்தில்,தமிழக அரசின் சிறப்பு பல்பொருள்…

கலசப்பாக்கத்தில் விளையாட்டு மைதானம்  அமைக்கும் பணி : சட்டமன்ற உறுப்பினர் V.பன்னீர்செல்வம் ஆய்வு

கலசப்பாக்கத்தில் விளையாட்டு மைதானம் அமைய உள்ள இடத்தை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA. MLA மாவட்ட செயலாளர் தி மலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பஞ்ச பூதங்களை பதம் பார்க்கும் கருவேல மரங்கள் – பேராசிரியர் பாலசந்தர் கிருஷ்ணமூர்த்தி

கலசப்பாக்கம் வளர்கிறது ! கலசபாக்கம் வளரவேண்டுமென்று ஆர்வம் கொண்ட மனிதர்களில் சிறந்த மனிதர் நம் மண்ணின் மைந்தர் பாலச்சந்தர் அவர்கள். நெடு நாட்களாகவே இந்த மண்ணிற்கும், இந்த மக்களுக்கும் பல நன்மைகளை செய்ய துடிப்புடன்…

செய்யாற்றினை தூய்மை செய்வோம்: தூய்மை கலசப்பாக்கம்

தூய்மை கலசப்பாக்கம் இயக்கத்தின் சார்பாக செய்யாற்றினை தூய்மை படுத்தும் பணியை துவக்கி வைக்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.K.S. கந்தசாமி IAS மற்றும் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V. பன்னீர்செல்வம் அவர்களும் வருகைதர உள்ளனர்.…

தகவல் தொழில் நுட்பத்துடன் இணைந்து மின்னல் வேகத்தில் இயங்கும் சட்ட மன்ற உறுப்பினர் !

நாம் அனைவரும் முகநூல் மற்றும் WhatsApp ல் கருத்துக்கள் பரிமாறுகிறோம், வரும் பதிவுகளை மற்றவருக்கு அனுப்பி வைக்கிறோம். இங்கு கலசப்பாக்கத்தின் சட்டமன்ற உறுப்பினர் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், தனக்கென இணையத்தளம் மற்றும் முகநூல்…

கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் அவர்கள் மந்தவெளியில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டார்

கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் அவர்கள் மந்தவெளியில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டார், ஜேபி சாப்ட் சிஸ்டம் நிறுவனர் திரு. ஜெ.சம்பத் அவர்களும் உடன் இருந்தார்.

அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத திருமாமுடிஸ்வரர் கோவில் தூய்மை பணியை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் அவர்கள் அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத திருமாமுடிஸ்வரர் கோவில் சுற்றுப்புறம் தூய்மை பணியை துவக்கி வைத்தார், ஜேபி சாப்ட் சிஸ்டம் நிறுவனர் திரு.…

பூண்டி செய்யாற்று பகுதியில் தூய்மை செய்வதற்க்கான இடத்தை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் அவர்கள் பூண்டி செய்யாற்று பகுதியில் தூய்மை செய்வதற்க்கான இடத்தை பார்வையிட்டார். ஜேபி சாப்ட் சிஸ்டம் நிறுவனர் திரு. ஜெ.சம்பத் அவர்களும் உடன்…

கலசப்பாக்கம் தொகுதியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K.பழனிசாமி அவர்கள், துணை முதலமைச்சர் மாண்புமிகு O.பன்னீர்செல்வம் அவர்களின் நல்லாட்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் அடுத்த குருவிமலை, பச்சையம்மன்…

ஜவ்வாது மலை SFRD பள்ளியில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மையம்

ஜவ்வாது மலையில் உள்ள SFRD பள்ளியில் கணித ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம், மற்றும் ஜேபி சாப்ட் சிஸ்டம் நிறுவனர் திரு.…

கலசபாக்கம் அரசு பள்ளியில் சிவில் சர்வீஸ், நீட் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம்

கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 மற்றும் பட்டம் படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கு அரசு சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும் நீட் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம் வாரந்தோறும் சனிக்கிழமை…

ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க நிலம்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க கலசப்பாக்கம் பொது மக்கள் சார்பாக 3 ஏக்கர் நிலம் வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் திரு. கந்தசாமி அவர்களிடம் மனு வழங்கப்பட்டது, கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்…

ஜேபி சாப்ட் சிஸ்டம் மென்பொருள் நிறுவனர் – முதல்வர் பழனிச்சாமி சந்திப்பு

தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை, ஜேபி சாப்ட் சிஸ்டம் மென்பொருள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெ. சம்பத் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்…

படவேடு செண்பகத்தோப்பு அணை சீரமைப்பு

கண்ணமங்கலம் அடுத்த படவேடு செண்பகத்தோப்பு அணை சீரமைப்பு பணிக்கு 34 கோடி ஒதுக்கீடு செய்து ஆணையிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமையில் விவசாயிகள் நேரில் சென்று வாழ்த்து…