Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணமலை மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் நேற்று முதல் தங்க பத்திரம் விற்பனை துவக்கம்!

திருவண்ணமலை மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் நேற்று (12.02.2024) தேதி முதல் (16.02.2024) தேதி வரை தங்க பத்திரம் விற்பனை துவங்கியுள்ளது. முதலீடு தொகைக்கு ஆண்டிற்கு 2.5% யும், 8 ஆவது ஆண்டின் முடிவில்…

திருவண்ணாமலையில் பிப்.17 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதை முன்னிட்டு விழிப்புணர்வு!

திருவண்ணாமலையில் வருகின்ற 17.02.2024 அன்று கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதை முன்னிட்டு நேற்று (12.07.2024) பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் திரு.…

பிளஸ் 1,பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று முதல் தொடக்கம்!

+1, +2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அட்டவணைப்படி +2 மாணவர்களுக்கு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது. +1 மாணவர்களுக்கு பிப்ரவரி 19ம் தேதி முதல் பிப்ரவரி 24ஆம் தேதி…

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (13.02.2024) திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜைகள் நாளை (14ம் தேதி) முதல் தொடங்குகின்றன. இதை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது.

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் ரத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் (15.02.2024) தேதி முதல் (17.02.2024) தேதி வரை இலவச தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்படுகிறது. ரத சப்தமி விழாவை முன்னிட்டு 3 நாட்களுக்கு சர்வதர்ஷன் டைம் ஸ்லாட் டோக்கன்கள்…

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம்!

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று முதல் வரும் பிப்ரவரி 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 6 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

2024 – 25ம் கல்வியாண்டில் MBA, MCA படிப்பில் சேர்வதற்கான டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். மார்ச் 9ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

பிப்.14 முதல் இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பிப்.14 முதல் மார்ச் 15 வரை தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

மாசி மாத பூஜைக்காக வரும் பிப்.13ல் சபரிமலை நடை திறப்பு!

மாசி மாத பூஜைக்காக வரும் 13-ந் தேதி சபரிமலை நடை திறக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று (09.02.2024) ஆண்டு விழா!

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று (09.02.2024 ) “அரசுப்பள்ளி மாணவர்களின் ஆளுமை வெளிப்படும்” கலைகளின் சங்கமம் என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

மக்களவைத் தேர்தல் மை தயாரிக்கும் பணி தொடங்கியது!

வாக்களித்தவர்களை அடையாளம் காண வைக்கப்படும் அழியாத மை தயாரிக்கும் பணிகள் தொடங்கியது. மைசூரில் உள்ள நிறுவனம் மக்களவைத் தேர்தலுக்கான மை தயாரிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

டான்செட் நுழைவு தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

டான்செட் நுழைவு தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிக்க  அவகாசம் நேற்று முடிய இருந்த நிலையில் வரும் 12ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கலசபாக்கத்தில் ஆற்று திருவிழாவிற்கான பந்தக்கால் நடப்பட்டது!

கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் தை மாதம் ரதசப்தமியில் நடைபெறும் ஆற்று திருவிழாவிற்கான பந்தக்கால் நடப்பட்டு, செய்யாற்றங்கரை பகுதிகளை சுத்தம் செய்யும் ஆயத்த பணிகள் நடைபெற்றன.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தை மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (07.02.2024) தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.