Web Analytics Made Easy -
StatCounter

அடுத்த 3 மணி நேரத்துக்கு 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் – 4 தேர்வு: கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்ப்பு..!!

குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வில் 7,301 பணியிடங்கள் அறிவித்த நிலையில், தற்போது கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.…

பொங்கல் பரிசுத்தொகுப்பு: தமிழகம் முழுவதும் நாளை முதல் டோக்கன்கள் விநியோகம்..!!

தமிழகம் முழுவதும் நாளை (27.12.2022) முதல் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்கள் வீடு வீடாக ரேஷன் கடை ஊழியர்களால் விநியோகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆண்டுதோறும் ஏழை-எளிய மக்களுக்கு பொங்கல்…

ஆன்லைனில் பட்டா, சிட்டா போன்றவை விண்ணப்பித்தல் மற்றும் சரிபார்க்கும் விவரங்கள்!

ஆன்லைனில் பட்டா, சிட்டா, கிராம வரைபடம், வட்டார வரைபடம், விண்ணப்பித்த விண்ணப்பங்களை சரிபார்த்தல் போன்ற விவரங்களை https://tnlandsurvey.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பட்டா மாற்றுதல் போன்ற பல்வேறு செயல்களுக்கு…

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜனவரி 2 முதல் நேரடி கொள்முதல் நிலையங்கள் இயக்கம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகின்ற ஜனவரி 2-ஆம் தேதி முதல் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளது. நெல் விற்பனை செய்யும் விவசாயிகள் இன்று முதல் முன்பதிவு செய்து செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.…

கலசபாக்கம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் இன்று அனுமன் ஜெயந்தி !

 கலசபாக்கத்தில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இன்று (23.12.2022) அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரமும் அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர் பிறகு பக்தர்கள்…

2023 ஏப்ரலில் கூட்டுறவு சங்க தேர்தல்

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20 ஆயிரம் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடத்த முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டு கூட்டுறவுத்துறை அனைத்து மண்டல பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைத் திருவிழா போட்டியில் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட ஒன்றிய அளவிலான பள்ளிகள் விவரம்!

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை மூலம் கலைத்திருவிழா அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கலைத்திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது. இதில்…

கலசபாக்கம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் திருக்கோயிலில் மார்கழி மாத பிரதோஷம்!

கலசபாக்கம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் திருக்கோயிலில் மார்கழி  மாத  பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று  (21.12.2022) நந்தி பகவானுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

கலசபாக்கம் ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் கலைத் திருவிழா போட்டியில் மாநில போட்டிக்கு தேர்ச்சி!

பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக, மாணவர்களின் கலைத் திறன்களை ஊக்கப்படுத்தும் விதமாக நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளார்கள். மாவட்ட போட்டியில்…

வாரந்தோறும் புதன்கிழமை அன்று குறை தீர்ப்பு முகாம் நடத்த டி.ஜி.பி உத்தரவு!

வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமையும் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டி.ஜி.பி திரு. சைலேந்திரபாபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் மகா தீபக் கொப்பரைக்கு சிறப்பு பூஜை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாத தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் 2668 மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 12 நாட்களாக மகா தீபம் மலையில் இருந்து…

கலசபாக்கம் அருகில் அமைந்துள்ள பருவதமலையில் வருடத்திற்கு ஒருமுறை நிகழும் அற்புத கிரிவலம்!

இன்று மார்கழி 1 (16.12.2022) வெள்ளிக்கிழமை உள்ளூர்,வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பருவதமலை கிரிவலம் வருகின்றார்கள். இன்று மார்கழி முதல் நாள் அதிகாலை முதல் பக்தர்கள் பருவதமலை கிரிவலப் பாதையில்…

மார்கழி 1ஆம் நாள் பருவதமலை கிரிவலம் : அன்னதானம் செய்ய ஏற்பாடு!

மார்கழி 1ஆம் நாள் பருவதமலை கிரிவலம் பிரசித்தி பெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இதில்…

உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தினை உயர்த்தி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

கிராம ஊராட்சிகளுக்கு ₹5 லட்சம் வரையிலும், வட்டார ஊராட்சிகளுக்கு ₹25 லட்சம் வரையிலும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ₹50 லட்சம் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது!

கலசபாக்கம் செய்யாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு -பொதுமக்கள் எச்சரிக்கை!

கலசபாக்கம் அடுத்த மிருகண்டா அணையிலிருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டதால் செய்யாற்றில் நீர் வரத்து அதிகரித்து வருகின்றது. பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம். குழந்தைகளை ஆற்றுக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்பதை…