Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (19-09-2025)  புரட்டாசி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள். 

கலசபாக்கம் வார சந்தையில் புரட்டாசி சிறப்பு விற்பனை!

கலசபாக்கம் வார சந்தையில் புரட்டாசி சிறப்பு விற்பனை புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை நாளை (20.09.2025) கொண்டாடப்படுவதையொட்டி, கலசபாக்கம் வார சந்தையில் பூஜை பொருட்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

மஞ்சள் அலெர்ட்!

வங்கக்கடலில் செப்டம்பர் 23 மற்றும் 26-ம் தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகவுள்ளதால், செப்டம்பர் 19 மற்றும் 21-ம் தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு மஞ்சள் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

கலசபாக்கம் செய்யாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – பொதுமக்கள் எச்சரிக்கை!

கலசபாக்கம் மற்றும் பருவதமலை பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கலசப்பாக்கம் செய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் ஆற்றைக் கடக்க, குளிக்கவோ, குழந்தைகளை அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.

UPSC-யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC), மருத்துவ அலுவலர், விரிவுரையாளர் உள்ளிட்ட 213 பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 2 ஆகும். தகுதியுடையவர்கள் UPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.upsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.  

டிசம்பர் மாத தரிசன டிக்கெட் இன்று வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் டிசம்பர் மாத தரிசனம், தங்குமிடம் டிக்கெட்டுகள் இன்று முதல் 20ம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். குலுக்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 22ம் தேதி மதியம்…

பனை மரம் வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம் – புதிய வழிகாட்டி வெளியீடு!

பனை மரங்களை வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்: தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம். பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும்.…

சிறப்பு ரயில் முன்பதிவு!

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.    

ஆதார் கட்டணம் உயர்வு!

அக்டோபர்-01 முதல் ஆதாரில் புகைப்படத்தை மாற்ற கட்டணம் ரூ.100- லிருந்து ரூ.125-ஆகவும், மற்ற தகவல்களை மாற்றுவதற்கான கட்டணம் ரூ.50-லிருந்து ரூ.75-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக ஆதாருக்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் கிடையாது.