Web Analytics Made Easy -
StatCounter

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை!!

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை. எரிபொருள் விநியோகத்தில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கலசபாக்கம் தாலுகாவிற்கு புதிய வட்டாட்சியாளர் பொறுப்பேற்பு!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தாலுகாவிற்கு புதிய வருவாய் வட்டாட்சியாளராக கே. துரைராஜ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (11.03.2026) நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. க. தர்ப்பகராஜ் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடக்கம்!!

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 4,219 தேர்வு மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

திருவண்ணாமலையில் சந்திர கிரகணம்: அண்ணாமலையார் கோயிலில் தீர்த்தவாரி..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு மார்ச் 3 நேற்று இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோயிலின் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் கிரகணம் முடியும் நேரத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடத்தப்பட்டது. சிவாச்சாரியார்கள்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் – சந்திரசேகரர் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில். இன்று 02.03.2026 புதன்கிழமை மாசி 18 பள்ளிகொண்டாப்பட்டு கௌதம நதிக்கரையில் அருள்மிகு சந்திரசேகரர் எழுந்தருள நதியில் தீர்த்தவாரி நடைபெற்றது. ஏராளமான மக்கள் நீராடி தம் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். 

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (01-03-2026)  மாசி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள்.  

தமிழகத்தில் இன்று முதல் பிளஸ்2 பொதுத்தேர்வு தொடக்கம்!!

தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்குகிறது மொத்தம் 3,412 மையங்களில், 8.27 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.