Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய கற்றல் இனிமைத் தொடக்கப்பள்ளியை திரு.தயாளன் அவர்கள் ஆய்வு செய்தார்!

கலசபாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய கற்றல் இனிமைத் தொடக்கப்பள்ளியில் நேற்று (13-06-2022) மாணவர் சேர்க்கையை ஆய்வு செய்ய மாவட்ட தொடக்கப்பள்ளி அலுவலர் திரு. தயாளன் அவர்கள் மாணவர் சேர்க்கையை ஆய்வு செய்தார். உடன் பள்ளியின்…

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று மாலை திறப்பு!

ஐயப்பனை தரிசிக்க முன்பதிவு செய்திருக்கும் பக்தர்கள் இன்று மாலை முதலே ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு நிலக்கல்லில் முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கலசபாக்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விடுமுறைக்கு பிறகு பள்ளி வந்த மாணவர்களை உற்சாகத்துடன் வரவேற்ற ஆசிரியர்கள்!

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இதையொட்டி மாணவ-மாணவிகளை மகிழ்வுடன் வரவேற்கும் விதமாக கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்…

குழந்தைகளுக்காக இந்த வாரம் Google Search பற்றிய பயிற்சி!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்காக, கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் Google Search பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.

கலசபாக்கம் பழங்கோயில் பலக்ராதீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை அமைக்கும் பணி தொடக்கம்!

கலசபாக்கம் அடுத்த, பழங்கோயில் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலாம்பிகை சமேத பலக்ராதீஸ்வரர் கோயிலில் ஜூன் 23 அன்று நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் சீரமைக்கும் பணி மற்றும் யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.வரும்…

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் 2022-2023 கல்வி ஆண்டிற்கான மாணவர்சேர்க்கை பாடப்புத்தகமும் வழங்கப்பட்டது!

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் 2022-2023 கல்விஆண்டிற்கான புதியமாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மற்றும் விலையில்லா பாடப்புத்தகம் வழங்கப்பட்டது. ஊராட்சிமன்றதலைவர் திருமதி. புவனேஷ்வரிபுகழேந்தி அவர்களும், ஒன்றியதுணைசேர்மன் திரு. பாலசுப்பிரமணியன் அவர்களும், பள்ளிமேலாண்மைக்குழுதலைவர் நதியா…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பெளர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நேற்று (12.06.2022) வைகாசி மாத பெளர்ணமி பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

கோடை விடுமுறைக்குப் பின் தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று முதல் திறப்பு!

கோடை விடுமுறைக்குப் பின் தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று (13.06.2022) முதல் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறக்கப்பட்டதும் முதல் ஐந்து நாட்கள் மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்பட உள்ளன

கலசபாக்கம் பள்ளிகளில் விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நிலையில் தூய்மை பணி !

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய கற்றல் இனிமை தொடக்கப்பள்ளியில் மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிகளில் விடுமுறை முடிந்து வரும் திங்கட்கிழமை பள்ளி திறக்கும் நிலையில் … 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் பள்ளிகள் தூய்மைபடுத்தும்…

தமிழ் நாடு காவல் துறை TNUSRB SI தேர்வுக்கான Hall Ticket வெளியிட்டது!

தமிழ் நாடு காவல் துறை TNUSRB SI வேலைக்கான அறிவிப்பை மார்ச் மாதம் வெளியிட்டது. தற்போது இந்த பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது. தேர்வர்கள் https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து…

கலசபாக்கம் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை நிலவரம்!

கலசபாக்கத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகின்றது. இன்று (10.06.2022) வெள்ளிக்கிழமை, இந்த வாரம் பல காய்கறிகள், கீரை வகைகள், நெல்லிக்காய், தக்காளி, நிலக்கடலை போன்ற பல பொருட்கள் வணிகர்கள் விற்பனை செய்தனர்.  கலசபாக்கம்…

திருவண்ணாமலை மாவட்டத்தின் 26-வது காவல் கண்காணிப்பாளராக திரு.கார்த்திகேயன் அவர்கள் பொறுப்பேற்றார்!

இன்று (10.06.2022) திருவண்ணாமலை மாவட்டத்தின் 26-வது காவல் கண்காணிப்பாளராக Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் பொறுப்பேற்று கொண்டார். இவர் மருத்துவ துறையில் பயின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை பற்றிய விவரம்!

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு (100 நாள் வேலை) மூலம் பயன்பெறும் மக்கள் தங்களுடைய 100 நாள் அட்டையின் முழு விவரங்களை https://nrega.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் தாங்களே தெரிந்து கொள்ளலாம். உங்கள்…

ஜூன் 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மீண்டும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்!

ஜூன் 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மீண்டும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். எனவே இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் தடுப்பூசி…

வங்கி பணியாளர் தேர்வாணயத்தில் 8,106 காலிப்பணியிடங்கள்!

வங்கி பணியாளர் தேர்வாணயத்தில்(Institute of Banking Personnel Selection-IBPS) 8,106 காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. https://ibpsonline.ibps.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி:  CA, B.Sc., MBA வயது வரம்பு (01-06-2022…

கலசபாக்கத்தை சேர்ந்த பள்ளி மாணவி ச.தான்யஸ்ரீ-யை கலசபாக்கம்.காம் வாழ்த்துகிறது!

நமது கலசபாக்கத்தை சேர்ந்த பள்ளி மாணவி ச.தான்யஸ்ரீ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரின் வரைபடம் 06.06.2022 அன்று தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ளது. அவருக்கு நம் கலசபாக்கம்.காம் சார்பாக வாழ்த்துக்களை…

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தொடர்ந்து LKG, UKG வகுப்புகள் செயல்படும் என தகவல்!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தொடர்ந்து LKG, UKG வகுப்புகள் செயல்படும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பாரத்நெட் 2-ம் கட்ட திட்டப்பணிகளை காணொளி மூலம் சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பாரத்நெட் 2-ஆம் கட்ட திட்டப்பணிகளை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ரூ. 1, 627.83 கோடி மதிப்பில் 12,525 கிராம ஊராட்சிகளில் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும்.

கல்வி, விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்திற்கான கடனுதவி பெற புதிய இணையதளத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

இனி கல்வி, விவசாயம், வாழ்வாதாரம் என அனைத்து பிரிவுகளிலும் கடனுதவி பெற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக https://www.jansamarth.in என்ற இணையதளத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் திட்டம்!

மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்கு கொண்டுவரப்பட்டது சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana) திட்டம். இத்திட்டம் தமிழ்நாட்டில் செல்வமகள் திட்டமாக செயல்பட்டு வருகிறது. பத்து வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் பெற்றோர் அல்லது…

தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் கடைகளை திறக்க அனுமதி!

தமிழ்நாட்டில் உள்ள எல்லாவிதமான கடைகளும் 24 மணி நேரமும் திறந்து கொள்வதற்கான அனுமதி வழங்கி அரசிதழில் வெளியீட்டுள்ளது. மேலும் 10 நபர்களுக்கு மேல் பணிபுரியக்கூடிய கடைகளை முழு நேரமும் திறக்கலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உங்கள்…