Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் இன்று மின்நிறுத்தம்!

கலசபாக்கம் அரசு மருத்துவமனையின் அருகில் புதிதாக மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் இன்று கலசபாக்கத்தில் மின்நிறுத்தம் செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 1 முதல் புதிய UPI விதிகள் – பயனர்கள் கவனத்திற்கு!

GPay, PhonePe மற்றும் Paytm போன்ற UPI APP-ல் இனி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 முறை மட்டுமே Balance சரிபார்க்க முடியும். நாளை முதல் இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது.    

உங்களைத் தேடி, உங்கள் ஊரில்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. க. தர்பகராஜ் அவர்கள் இன்று (30.07.2025) “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் கலசபாக்கத்தில் அரசு மருத்துவமனை, நியாயவிலை கடை, ஊராட்சி பள்ளி மற்றும் சமையல்கூடத்தை ஆய்வு…

ஆகஸ்ட் 26ம் தேதி சிதம்பரத்திற்கு பிரதமர் மோடி பயணம்!

பிரதமர் மோடி வரும் ஆகஸ்ட் 26ம் தேதி சிதம்பரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பயணம். நடராஜர் கோவிலில் இருந்து மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நேரலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.    

வணிகர் சேர்க்கை கட்டணம் இல்லை – ஜூன் 1 முதல் நவம்பர் 30 வரை!

ஜூன் 1-ம் தேதியிலிருந்து வரும் நவம்பர் 30-ம் தேதி வரை, வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யும் அனைத்து சிறு, குறு வணிகர்களுக்கு சேர்க்கை கட்டணம் ரூ.500 செலுத்துவதிலிருந்து விலக்கு என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.  

மானிய விலையில் இயற்கை மாடித்தோட்ட கிட்கள்!

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முதல் கட்டமாக 300 இயற்கை மாடித்தோட்ட கிட்கள் ஒதுக்கம். ரூ.900 மதிப்புடைய தொகுப்பு, தற்போது மானியத்தில் ரூ.450-க்கு வழங்கப்படுகிறது என தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது.    

தேர்வு அட்டவணை வெளியீடு!!

2025-26 கல்வியாண்டுக்கான காலாண்டு, அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு செப்.18ல் தொடங்கி 26ம் தேதியில் காலாண்டுத் தேர்வு முடிவடைகிறது: டிச.15ம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்கி 23ம் தேதியுடன் நிறைவடைகிறது என அறிவிப்பு.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நேற்று (28.07.2025) காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலை பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும், இரவு அருள்மிகு உண்ணாமுலையம்மன் சன்னதி முன்புறம் தீமிதி விழாவும் அதனை தொடர்ந்து திருவீதி உலாவும் நடைபெற்றது.…

ஆடி பூரம் 10ம் நாள்: சிவகங்கை தீர்த்தத்தில் அருள்மிகு பராசக்தி அம்மன் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று (28.07.2025) பராசக்தி அம்மனுக்கு சிவகங்கை தீர்த்த குளக்கரையில் மகா தீர்த்தவாரி தீப ஆராதனை நடைபெற்றது.  

கலசபாக்கம் மற்றும் வில்வாரணி சார்ந்த பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (29.07.2025) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம்…

காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (29.07.2025) மின் நிறுத்தம்!

காஞ்சி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (29.07.2025) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்படும்.…

உயர்நீதி மன்றத்திற்கான ஆர்டிஐ இணையதள முகவரி !!

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதித்துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு கீழ் தகவல் பெறும் வகையில் http://mhc.tn.gov.in/eservices/rti இணைய வழி தொடங்கப்பட்டுள்ளது.