Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவில் இருந்து தொடர் மழை பெய்து கொண்டு இருப்பதால் இன்று (08.01.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வார வகுப்பில் AID India அமைப்பின் மூலம் அறிவியல் பயிற்சி!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வார பயிற்சி வகுப்பில் AID India அமைப்பின் மூலம் இன்று (06.01.2024) சனிக்கிழமை அறிவியல் திருவிழா நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அண்ணாமலையார் கோவிலில் இன்று உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயில் இன்று (06.01.2024) சனிக்கிழமை அதிகாலை 5:30 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் உத்ராயண புண்ணிய கால கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு…

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் நாளை சிறப்பு அறிவியல் சோதனை வகுப்பு!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் நாளை (06.01.2024 ) சனிக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் AID India அமைப்பின் மூலம் மாணவர்களுக்காக அறிவியல் சோதனை வகுப்புகள் நடைபெற உள்ளன. இதில் ஆர்வம் உள்ள குழந்தைகள் கலந்து…

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ₹1000 வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்புடன் ₹1000 ரொக்கமும் ரேஷன் கடைகளில் வழங்கப்படவுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அமர்வு தரிசனம் நிரந்தரமாக ரத்து: கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், அமர்வு தரிசனம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், கோயில் நிர்வாகம் அதிரடி முடிவு செய்துள்ளனர்.

கலசபாக்கத்தில் நாளை மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல்!

கலசபாக்கத்தில் மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் நாளை (05.01.2024) விண்ணுவாம்பட்டு ஏரிக்கரையில் நடைபெறுகின்றது. நேரம்: காலை 10 மணி முதல் 1 வரை கலந்துரையாடல், பிற்பகல் 1 மணி முதல் 2 வரை விவசாயிகளின் சந்தை…

திருவண்ணாமலையில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் விழா வரும் ஜன – 7 ஆம் நாள் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் தை மாத பிறப்பை வரவேற்கும் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் வரும் (07.01.2024 ) சனிக்கிழமை காலை 5:30 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து தினசரி காலை,…

கடலூரில் நாளை (04.01.2024) ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் தொடக்கம்!

கடலூரில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நாளை 4 – ஆம் தேதி தொடங்கி 13 – ஆம் தேதி சனிக்கிழமை வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த தேர்வில் எழுத்து தேர்வில் தேர்ச்சி…

சபரிமலையில் முன்பதிவை உடனடியாக நிறுத்த தேவசம் போர்டு முடிவு!

சபரிமலையில் நெரிசலை குறைப்பதற்காக மகர விளக்கு தினமான ஜனவரி 14 – ம் தேதி 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி. வரும் ஜனவரி 10 – ம் தேதி முதல் 15…

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு!

தமிழக அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்தது தமிழ்நாடு அரசு. 2.19 கோடி குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும்…

கலசபாக்கம் பகுதியில் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் மக்கள் வழிபாடு!

கலசபாக்கம் பகுதியில் புத்தாண்டை முன்னிட்டு வழிபாட்டுத் தலங்களில் மக்கள் வழிபாடு செய்தனர்.

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தன்று 20 குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல்!

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் புத்தாண்டு தினத்தன்று இரவு 12 மணி முதல் நேற்று (01.01.2024) மாலை 5 மணி வரை 20 குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் பக்தர்களுக்கு இன்று முதல் தீப மை பிரசாதம் வழங்க ஏற்பாடு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் மகா தீபத்துக்கு நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு இன்று (02.01.2024 ) முதல் தீப மை பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் கிளி கோபுரம் அருகே…