Web Analytics Made Easy -
StatCounter

குரூப் -1 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

கடந்த மாதம் மார்ச் 28-ஆம் தேதி நடைபெற்ற குரூப் -1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஜூலை மாத முக்கிய சேவை.. இன்று முன்பதிவு தொடக்கம்!

திருப்பதி கோயிலில் ஜூலை மாத கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கு இன்று காலை 10 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது.  ஜூலை மாத சிறப்பு தரிசனம், 300…

சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள்!

சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகளை இயக்கப்படும். கிரிவலப் பாதை முழுவதும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளப்பபட்டுள்ளது. சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு தரிசனம் ரத்து என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்…

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா!

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்ட டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு ரூ.34 கோடி செலவில், 4 தளங்களுடன் இந்த டைடல்  பூங்கா அமைக்கப்பட உள்ளது. ஓராண்டில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டம்.

மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு!!

அனைத்து தாலுகாக்களிலும், ஜமாபந்தி நடத்தும் பணியை, மே 31க்குள் முடிக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் – திரு சாய்குமார் அறிவிப்பு.    

சர்வே எண், பட்டா விபரம் அறிய புதிய செயலி!

நிலத்தின் சர்வே எண் மற்றும் பட்டா விபரங்களை, மொபைல் போன் வாயிலாக அறிவதற்காக, புதிய செயலியை வருவாய் துறை உருவாக்கி வருகிறது.

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் (ஏப்ரல் 21) அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.    

JEE-2ம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது!!

பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கான JEE-2ம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது. 24 மாணவர்கள் 100% மதிப்பெண், தமிழக அளவில் பிரதீஷ் காந்தி என்ற மாணவர் முதலிடம்.    

மொபைல் ரீசார்ஜ் கட்டணம் மீண்டும் உயர வாய்ப்பு!!

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு. 5ஜி திட்டங்களுக்கான கட்டணங்களையும் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்.    

தங்கம் விலையில் மாற்றம் இல்லை!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இன்றி சவரன் ரூ.71,560க்கு விற்பனை ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் விலை மாற்றமின்றி ரூ.8,945க்கு விற்பனை செய்யப்படுகிறது.    

போளூர் பேரூராட்சி உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

போளூர் பேரூராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் உழவர் சந்தையில் செயல்பாடுகளை குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் ஆசிரியர்கள் தேவை!

• அபாகஸ் (Abacus) • கை எழுத்துப் பயிற்சி (Handwriting) • கலிகிராஃபி (Calligraphy) • வேதிக் கணிதம் (Vedic Maths) ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை. இடம் :-   திருவண்ணாமலை, போளூர், தேவிகாபுரம், செங்கம்…

திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் ரத்து!

கோயில்களில் முக்கிய திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மாத பௌர்ணமி, பழனி கோயில் தைப்பூசம் உள்ளிட்ட நாட்களில் கட்டண தரிசனம் ரத்து அமைச்சர் சேகர்பாபு.    

அண்ணாமலையார் கோயிலில் புனித தாமரை குளத்தில் பாலி கைவிடல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு தாமரை குளத்தில் பாலி கைவிடுதல் நடைபெற்று, அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.    

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் ஊஞ்சல் உற்சவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கல்யாணம் உற்சவம் சுவாமி பெரியநாயகர், அம்மனுக்கு நலங்கு மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.