Web Analytics Made Easy -
StatCounter

திருக்கார்த்திகை தீப விழா: தேரோட்டம் பாதுகாப்பு பணிக்கு காவலர்கள் குவிப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நாளை (10.12.2024) நடைபெற உள்ள திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் பஞ்சமூர்த்திகள் மகாரதங்கள் தேரோட்டத்தை முன்னிட்டு, பாதுகாப்பு பணிக்காக திருவண்ணாமலையில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – ஆறாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஆறாம் நாளான நேற்று (10.12.2024) இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரதத்திலும், வெள்ளி விமானங்களிலும் மாடவீதி உலா நடைபெற்றது. 

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – நான்காம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாளான நேற்று (07.12.2024) இரவு பஞ்ச மூர்த்திகளான விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் வெள்ளி மயில் வாகனத்திலும், உண்ணாமலை அம்மன்…

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் டிசம்பர் 8 முதல் 16 ஆம் தேதி வரை 156 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவுவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா: 9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைப்பு!

கார்த்திகை தீப விழாவுக்காக 9 தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் 15 பஸ் நிறுத்துமிடங்கள் அமைக்கப்படுகின்றன. பஸ் நிலையங்களிலிருந்து கிரிவல பாதை மற்றும் நகரின் முக்கிய இடங்களுக்கு பொதுமக்கள் கட்டணமின்றி பயணிக்க 22 தனியார்…

கலசபாக்கம் அருகில் அமைந்துள்ள பருவதமலையில் வருடத்திற்கு ஒருமுறை நிகழும் அற்புத கிரிவலம்!

கலசபாக்கம் அருகில் அமைந்துள்ள பருவதமலையில் வருடத்திற்கு ஒருமுறை நிகழும் அற்புத கிரிவலம் வரும் இன்று மார்கழி 1 (16.12.2024) திங்கட்கிழமை உள்ளூர்,வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பருவதமலை கிரிவலம் வருகின்றார்கள்.…

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: மத்திய குழு ஆய்வு!

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மத்தியக்குழு இன்று ஆய்வு செய்கிறது. ராகேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட மத்தியக் குழு இன்று ஆய்வு செய்கிறது.

12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

தெற்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் டிச.10க்குப் பின் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – நான்காம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாளான இன்று (07.12.2024) காலை விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் உண்ணாமுலை அம்மன் நாக வாகனத்திலும், பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம்…

NH-45A பாண்டிச்சேரி-விழுப்புரம் சாலையில் கிடங்கு குத்தகைக்கு!

பாண்டிச்சேரி-விழுப்புரம் சாலையில் NH-45A  இல் 100,000 சதுர அடியில் கிடங்கு குத்தகைக்கு உள்ளது. கிடங்கு விவரங்கள்: – நிலம்: 3.7 ஏக்கர் – அருகாமையில்: FCI குடோன்கள் & ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்குள்…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – மூன்றாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாளான நேற்று (06.12.2024) இரவு சிம்ம மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டத்தில் நுகர்வோர் குறைதீர் கூட்டம்!

திருவண்ணாமலை மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் கோட்ட அளவில் டிசம்பர் மாத நுகர்வோர் குறைதீர் கூட்டம். டிசம்பர்.10 – போளூர் டிசம்பர்.12 – சேத்துப்பட்டு டிசம்பர்.17 – செய்யாறு டிசம்பர்.19 – திருவண்ணாமலை…

10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு – தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். டிச.17-ம் தேதிக்குள் கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை தேர்வு கட்டணம் செலுத்தி பதிவு செய்ய…

கலசபாக்கம் வாரச் சந்தையில் அகல் விளக்குகள் விற்பனை!

கலசபாக்கம் பகுதியில் வாரந்தோறும் நடைபெறும் வெள்ளிக்கிழமை வாரச் சந்தையில், இன்று (06.12.2024) அதிக எண்ணிக்கையில் அகல் விளக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அடுத்த வாரம் நடைபெறவுள்ள திருக்கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு, மக்கள் தீவிரமாக…

கலசபாக்கம் ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வழிகிறது!

கடந்த வாரம் (01.12.2024) பெய்த கனமழையால் கலசபாக்கம் மற்றும் விண்ணுவாம்பட்டு ஏரிகள் உட்பட அனைத்து ஏரி, குளங்களும் முழுமையாக நிரம்பி வழிகின்றன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு. அடுத்தாண்டு ஜனவரி 2இல் தொடங்கி 10ஆம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க உத்தரவு; மற்ற மாவட்டங்களைப் போல அரையாண்டு விடுமுறை 3…

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு!

தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் வரும் 7ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – மூன்றாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாளான இன்று (06.12.2024) காலை விநாயகர், சந்திரசேகரர் பூத வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2024 – இரண்டாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாளான நேற்று (05.12.2024) இரவு வெள்ளி இந்திர வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகள் மாதாந்திர கூட்டம்!

கலசபாக்கத்தில் இயற்கை விவசாய ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இன்று (05.12.2024) விண்ணுவாம்பட்டு ஏரிக்கரையில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் அருகில் நடைபெற்றது. இதில் மழையால் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து,…

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி59 ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி59 ராக்கெட் இன்று மாலை 4.04 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. ‘புரோபா-3’ திட்டத்தின் கீழ் சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்ய இருக்கும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வடிவமைத்துள்ள கரோனாகிராஃப் மற்றும்…

கலசபாக்கத்தில் 12 சென்டிமீட்டர் பதிவு!

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது…