Web Analytics Made Easy -
StatCounter

கால்நடை பல்கலை. பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்!!

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. இளநிலை பட்டப்படிப்புக்கு இன்று முதல் மாணவர் சேர்க்கை பல்கலை. இணையதளம் மூலம் இன்று காலை 10 மணி முதல் ஜூன் 20 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். www.adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில்…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (24-05-2025) வைகாசி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு பிரதோஷ நாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள்.   

செய்யாறு ஆலையில் கரும்பு பதிவு அனுமதி – ஆட்சியர் அறிவிப்பு!!

போளூர்-தரணி சர்க்கரை ஆலைய கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பயிரிட்டுள்ள கரும்பு, 2025-26 அரவைக்காக செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் செய்யாறு ஆலையில் பதிவு செய்து கொள்ளலாம் என -மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.    

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு!

பள்ளி திறப்பில் மாற்றம் இல்லை, வரும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், பள்ளிகளை திறப்பதற்கு தயாராக வேண்டும் என தொடக்க கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மே 24-ம் தேதி (சனிக்கிழமை)கடைசி நாள் . விஏஓ, வனக்காப்பாளர், தட்டச்சர் உள்ளிட்ட 3,935 காலி பணியிடங்களுக்கு ஜூலை 12-ல் தேர்வு நடைபெறுகிறது.    

இயற்கை ஆரோக்கிய உணவுப் பொருட்கள் விரும்புகிறீர்களா? பூங்குயலி Food Products இப்போது உங்கள் வீட்டிற்கு டெலிவரி!

வேலூர், ஓசூர், பெங்களூர், திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் “பூங்குயலி Food Products”, இயற்கை மற்றும் பாரம்பரிய உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. • இங்கு கிடைக்கும் முக்கியமான…

10, பிளஸ் 1 துணைத் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இன்று முதல் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு!

10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் நாளை (மே 23) முதல் 10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்…

குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க மே 24 கடைசி!!

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 24-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

யுபிஎஸ்சி தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் சாதனை!

மத்திய அரசின் இந்திய வனப்பணியில் (IFS) தமிழ்நாட்டிலேயே முதலிடம் பிடித்து, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்த மு.வெ. நிலாபாரதி சிறப்பாக தேர்வாகியுள்ளார். அவரது சகோதரி மு.வெ. கவின்மொழி சமீபத்தில் இந்திய காவல் பணியில் (IPS)…

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம்!

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் திரு. சுபாஷ் சந்தர் தலைமையில், தமிழில் பெயர் பலகை வைப்பது சம்மந்தமாக அனைத்து வியாபாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. உடன் வட்டார…

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான போர்ட்டல் திறப்பதில் சிக்கல்!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான போர்ட்டல் திறக்கப்படாததால் லட்சக்கணக்கானோர் அவதி. வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் பல மாற்றங்கள் செய்யப்படுவதால் போர்ட்டல் திறப்பதில் சிக்கல் என தகவல்.

அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை விஐடி வளாகம், வேலூர் – பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்!!

வேலூர்: பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை வழங்குகிறது.  முக்கிய விவரங்கள்: – தகுதி: வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட மாணவர்கள் – விண்ணப்ப காலம்: 21.05.2025 முதல் 30.05.2025 வரை – நேரம்: காலை 10:00 மணி…