Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக வளாகத்தில்‌ பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக வளாகத்தில்‌ பொது சுகாதாரம்‌ மற்றும்‌ நோய்‌ தடுப்பு மருந்துத்துறை சார்பில்‌ பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 13.10.2022 அன்று சுகாதார அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களுக்கு நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப்‌ போட்டிகளில்‌ வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று (17.10.2022) மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு. பா.முருகேஷ்‌ அவர்கள்‌ பாராட்டு சான்று வழங்கினார்‌ மற்றும் ஓய்வு பெற்ற சுகாரத்துறை அலுவலர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

இவ்விழாவில் தீபச்சுடரினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா.முருகேஷ்‌ அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி. மு.பிரியதர்ஷினி அவர்கள், துணை இயக்குநர்கள்‌ (சுகாதார பணிகள்‌) மரு. செல்வகுமார்‌ (திருவண்ணாமலை), திரு, சதிஷ் (செய்யாறு) மற்றும்‌ பொது சுகாதார துறை அலுவலகள்‌ உடனிருந்தனர்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *