திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் இருந்து, பூண்டி செல்லும் சாலையை அகலப்படுத்தி ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதனை மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து கலசபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் முருகேஷ் ஆய்வு செய்தார். அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கிருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.