கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 மற்றும் பட்டம் படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கு அரசு சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும் நீட் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம் வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்கப்பட்டு உள்ளன.
பயிற்சி முகாம் தொடக்க விழாவிற்கு வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்.
பயிற்சிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் கையேடுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலசபாக்கம் தாசில்தார் ராஜராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா, ஜேபி சாப்ட் சிஸ்டம் நிறுவனர் திரு. ஜெ. சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Recent News:
கிராம சபை கூட்டம்!!
சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு!
Anna Productions announces the grand trailer and audio launch of A.S. Mukundans "Madras Mafia Company"
ஐப்பசி மாத கிரிவலம்!
These essential oils can help us to manage psoriasis issue effectively!!
தரவரிசை பட்டியல் வெளியீடு!
மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை!!
