Web Analytics Made Easy -
StatCounter

இருமுடி கட்டு இல்லாத பக்தர்களுக்கு தரிசன கட்டுப்பாடு!!

இருமுடி கட்டு இல்லாத பக்தர்களுக்கு காலை 6.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படும். கூட்ட நெரிசல் குறைவான நாட்களில், பக்தர்கள் கொடி மரத்தை சுற்றி நேராக சாமி தரிசனம் செய்ய…

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நாளை நடை திறப்பு!

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது; இரவு அடைக்கப்படும் நடை மீண்டும் நாளை மறுநாள் அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் – சந்திரசேகரர் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில். இன்று 12.03.2025 புதன்கிழமை மாசி 28 பள்ளிகொண்டாப்பட்டு கௌதம நதிக்கரையில் அருள்மிகு சந்திரசேகரர் எழுந்தருள நதியில் தீர்த்தவாரி நடைபெற்றது. ஏராளமான மக்கள் நீராடி தம் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

திருவண்ணாமலைக்கு 350 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பவுர்ணமியையொட்டி சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை (மார்ச் 13) 350 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (12-03-2025) மாசி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்…

திருவண்ணாமலை மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மாசி மாத பவுர்ணமி திதி வருகின்ற வியாழன் 13ம் தேதி காலை 11:40 முதல், நாளை மறுநாள், 14ம் தேதி பிற்பகல் 12:54 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்ததாக கோவில் நிர்வாகம்…

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் மாசி மாத கிருத்திகை விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு நேற்று (06.03.2025) முருகன் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் லிங்கோத்பவருக்கு அபிஷேகம்!

சிவராத்திரியை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மஞ்சள், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வழியில் நின்று சாமி தரிசனம் செய்தனர். 

கலசபாக்கம் அடுத்த பழங்கோயில் கிராமத்தில் 31ஆம் ஆண்டு மகாசிவராத்திரி அலகு குத்தும் திருவிழா!

கலசபாக்கம் அடுத்த பழங்கோயில் கிராமத்தில் அமைத்துள்ள அருள்மிகு ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 31 ஆம் ஆண்டு மகாசிவராத்திரி மாசி மாத அமாவாசை நாளான இன்று (27.02.2025) அலகு குத்தும் திருவிழா…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாசி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (25-02-2025) மாசி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தார்கள். 

சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!!

மகா சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி. நாளை முதல் 28ஆம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.  …

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 26-ம் தேதி மகா சிவராத்திரி விழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 26-ம் தேதி மகா சிவராத்திரி விழா: இரவு 7 மணிக்கு சந்திரசேகர் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடு. இரவு 7:30 மணிக்கு மகாசிவராத்திரியின் முதல் கால பூஜையும், இரவு 11:30 மணிக்கு 2-ம் கால பூஜையும்,…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் – மே மாத ஆன்லைன் டிக்கெட் தொடக்கம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாத அர்ஜித சேவா, சுப்ரபாதம், தோமாலா மற்றும் அர்ச்சனா சேவைகளுக்கான டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். பிப்ரவரி 20 ஆம் தேதி காலை 10…

பூண்டி கிராமத்தில் ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமி தைப்பூச விழா!

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு நேற்று (11.02.2025)  தைப்பூச விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…

சத்திய ஞான சபையில் 154வது ஜோதி தரிசன விழா!

சத்திய ஞான சபையில் 154-வது ஜோதி தரிசன விழா மிகுந்த பக்தி பரவசத்துடன் நடைபெற்று வருகிறது. நேற்று (பிப்.10) அதிகாலை 5 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது. இன்று (பிப்.11) அதிகாலை 6…

அண்ணாமலையார் திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (11.02.2025) தைப்பூசம் முன்னிட்டு ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  

செங்கம் புதூர் மாரியம்மன் கோயில் திருக்குடமுழுக்கு விழா!!

செங்கம் வட்டம், புதூர் செங்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ புதூர் மாரியம்மன் திருக்கோயில் திருக்குடமுழக்கு நன்னீராட்டு பெருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.பக்தர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெற்றனர். பக்தி பரவசத்துடன்…

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தை மாத பவுர்ணமி திதி நாளை 11ம் தேதி இரவு 7:51 முதல், நாளை மறுநாள், 12ம் தேதி இரவு 8:12 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்ததாக கோவில் நிர்வாகம்…

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து!

தைப்பூசத்தை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு பழனி முருகன் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து இன்று திருக்கல்யாணம், நாளை தேரோட்டம் நடைபெறுகிறது.  

திருப்பதியில் வரும் 12-ம் தேதி தை மாத பௌர்ணமியை ஒட்டி கருட சேவை!

திருப்பதியில் வரும் 12-ம் தேதி தை மாத பௌர்ணமியை ஒட்டி கருட சேவை நடக்கிறது. இரவு 7 மணிக்கு மலையப்பசாமி தங்க கருட வாகனத்தில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம்.

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் தை மாத கிருத்திகை விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை மாத கிருத்திகை முன்னிட்டு நேற்று (06.01.2025) முருகன் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை…

சபரிமலை மாசி மாத பூஜைக்கான கோயில் நடை திறப்பு !

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை பிப்.12-ல் திறக்கப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.

கலசபாக்கத்தில் ஆற்று திருவிழாவிற்கான பந்தக்கால் நடப்பட்டது!

கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ரதசப்தமி திருவிழாவை முன்னிட்டு இன்று (29.01.2025) காலை முகூர்த்த பந்தக்கால் நடப்பட்டது. வரும் (04.02.2025) செவ்வாய்க்கிழமை, செய்யாற்றில் ஆற்று திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.  

கலசபாக்கம் ஆற்று திருவிழா – மணல் சமம் செய்யும் பணிகள் விறுவிறுப்பு!

கலசபாக்கத்தில் வருகின்ற செவ்வாய்க்கிழமை (04.02.2025) அன்று ஆற்று திருவிழா நடைபெற இருப்பதால் கலசபாக்கம் செய்யாற்று மணல் சமம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. விளையாட்டு உபகரணங்கள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தை மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (27-01-2025) தை மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (16.01.2025 ) மறுவூடல் உற்சவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் நேற்று இரவு திருக்கோயில் இரண்டாம் பிரகாரத்தில் மறுவூடல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். 

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (15.01.2025) திருவூடல் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கல் முன்னிட்டு(15.01.2025) நேற்று இரவு திருவூடல் வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் திருவூடல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். 

அண்ணாமலையார் கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, பெரிய நந்தி பகவானுக்கு அனைத்து விதமான காய்கறிகள் மற்றும் பழ வகைகளால் அலங்கரித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…

கலசபாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் ஆலயத்தில் இன்று (13.01.2025) ஆருத்ரா தரிசனம்!

கலசபாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் ஆலயத்தில் இன்று (13.01.2025) ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு சிவகாமி அம்மாள் சமேத ஸ்ரீ நடராஜர் பெருமாள் சிறப்பு அபிஷேக மற்றும் தீபாராதனை நடைபெற்றது.இதில் திரளான…

திருவண்ணாமலையில் மார்கழி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் மார்கழி மாதப் பெளா்ணமி கிரிவலம் (ஜனவரி – 13) திங்கட்கிழமை காலை 5.29 மணிக்கு தொடங்கி செவ்வாய்கிழமை (ஜனவரி – 14) காலை 04:46 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம்…

கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ சொர்க்க நாராயண பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா!

கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ சொர்க்க நாராயண பெருமாள் கோயிலில் இன்று (10.01.2025) வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்க வாசல் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் மார்கழி மாத கிருத்திகை விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மார்கழி மாத கிருத்திகை திருநாளான நேற்று (09.01.2025) முருகன் பெருமானுக்கு அபிஷேக சிறப்பு ஆராதனை…

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் ஏகாதாசி நிகழ்வு!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (10.01.2025 ) வெள்ளிக்கிழமை ஏகாதாசி முன்னிட்டு வைகுந்த வாசல் தீபாரதனைக்கு பின் அதிகாலை திறக்கப்பட்டது.

திருவண்ணாமலை பூத நாராயண பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு விழா!

திருவண்ணாமலை அருள்மிகு பூத நாராயண பெருமாள் திருக்கோயிலில் இன்று (10.01.2025) வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பூத நாராயண பெருமாள் கருட வாகனத்தில் மாட வீதி உலா நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை: உத்தராயண புண்ணிய காலம் 3 ஆம் நாள் பவனி!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவத்தின் 3ம் நாளான இன்று காலை விநாயகர், மாணிக்கவாசகர், சந்திரசேகரர் மாட வீதிகளில் பவனி.  

கலசபாக்கம் ஆற்று திருவிழா 2025: தீர்த்தவாரி உற்சவ பத்திரிக்கை!

கலசபாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பழமை வாய்ந்த “அருள்மிகு ஸ்ரீ அபிதா குஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர்” மற்றும் “அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர்” சாமிகளுடன் ஆற்றுத் திருவிழா மற்றும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்வு…

ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு!

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

கலசபாக்கம் அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழா!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று (30-12-2024) அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை சனி மகா பிரதோஷ சிறப்பு வழிபாடு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை மாலை 4:30 மணிக்கு சனி மகா பிரதோஷம் நடைபெறவிருக்கிறது. ராஜகோபுரம் பெரிய நந்தி உள்ளிட்ட அனைத்து நந்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் மற்றும் வழிபாடு நடத்தப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 10-19 சொர்க்கவாசல் தரிசனம்!

ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் தரிசனத்திற்கான 5300 மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் ஆன்லைனில் கிடைக்கும். ஜனவரி 9-ம் தேதி அதிகாலை 5 மணி முதல் ராமச்சந்திரா புஷ்கரணி, பூதேவி காம்ப்ளக்ஸ்…

திருவண்ணாமலை மகா தீப கொப்பரை மலையிலிருந்து கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது!

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்றுடன் முடிவடைந்ததை ஒட்டி மலை உச்சியில் உள்ள மகா தீப கொப்பரை மலையிலிருந்து கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது.

கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு!

கார்த்திகை தீபத் திருவிழா இன்று (23.12.2024) 11-வது நாளாக மலை மீது ஏற்றப்படும் மகா தீபத்துடன் நிறைவு பெறுகிறது. நாளை (24.12.2024) அதிகாலை தீபம் மலையிலிருந்து இறக்கி கோயிலில் வழிபாடு நடத்தப்பட்டு, ஆயிரங்கால் மண்டபத்தில்…

திருப்பதி தேவஸ்தானம்: சிறப்பு தரிசன ஆன்லைன் முன்பதிவு தேதி மாற்றம்!

ஆன்லைன் முன் பதிவு தேதி மாற்றம் 300 ரூபாய் சிறப்பு தரிசன ஆன்லைன் முன் பதிவு, டிசம்பர் 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு துவங்கும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு. டிசம்பர்…

சபரிமலை மண்டல பூஜை: ஆன்லைன் முன்பதிவு அவசியம்!

சபரிமலையில் மண்டல பூஜைக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளன. மண்டல பூஜை, விடுமுறை நாட்கள் வருவதால் நெரிசலுக்கு வாய்ப்புள்ளது. எனவே பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வர வேண்டும் என கேரள காவல்துறை…

தொடர்பு கொள்ள