Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சர்வதேச சிறுதானிய விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் நேற்று (27.02.2023)  நடைபெற்ற சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023 விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா. முருகேஷ் அவர்கள் துவக்கி வைத்து காட்சிக்கு வைக்கப்பட்ட சிறுதானிய உணவினையும் பார்வையிட்டார் மற்றும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் வைக்கப்பட்ட கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு. பிரியதர்ஷினி உதவி ஆட்சியர் செல்வி. ரஷ்மி ராணி நியமன அலுவலர் உணவு பாதுகாப்புத் துறை திரு. ராமகிருஷ்ணன், வேளாண்மை இணை இயக்குனர் திரு. அரக்குமார் திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) திரு.சையித் கலைமான், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ஆர்.மந்தாகினி மற்றும்  துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *