Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் தாலுக்கா, காப்பலூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு!

திருவண்ணாமலை மாவட்டம், தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரவிந்தர் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள்,கிராம வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் காப்பலூர் கிராம மக்களுக்கு கிராமப்புற மதிப்பீட்டு நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் சமூக வரைபடம், வளங்களின் வரைபடம், காலக் கோடு, மக்கள் தொகை சதவீதம், நிலங்களின் சதவீதம், நோய் மற்றும் பூச்சி தாக்குதல் வரைபடம், பிரச்சினை மரம் போன்ற பல்வேறு கிராம நுட்பங்களை பயன்படுத்தி விளக்கமளிக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி போளூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயா அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் நிலா, சந்நியா, நந்திதா, நந்திதாஸ்ரீ, நவஸ்ரீ, நிர்மலா, ரோகிணி, புனிதா, ரத்னா ஆகிய ஒன்பது மாணவிகள் அடங்கிய குழு கிராம மக்களுக்கு விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *