Web Analytics Made Easy -
StatCounter

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

திருவண்ணாமலை, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிபேட்டை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.    

வார இறுதி விடுமுறைக்கான சிறப்பு பேருந்துகள்!

ஜூலை 18, 19 ஆகிய நாட்களில் சென்னை கிளம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு 1,035 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு.    

ஓட்டுநர்-நடத்துநர் தேர்வு!

போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு ஜூலை 27 அன்று நடைபெறுகிறது. 22,000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். ஜூலை 21 முதல் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.    

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ விழா!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம் கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் திருத்தேர் ஆடி பிரமோற்சவ விழா செவ்வாய்க்கிழமை (29.07.2025) கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழா ஆடி மாதம் 16 ஆம் தேதி (08.08.2025) வெள்ளிக்கிழமை…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி பிரம்மோற்சவ நிறைவு விழா!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா நிறைவையொட்டி நேற்று (16.07.2025) காலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவிலில் சுவாமி சன்னதியில் இருந்து அம்பாளுடன் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி…

திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (17.07.2025) கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.    

அனுமதி இல்லாத கட்டடங்களுக்கு சீல் வைக்க அதிகாரம்!!

கிராம ஊராட்சிகளில் அனுமதி இல்லா கட்டடங்களுக்கு சீல் வைக்க, ஊராட்சி நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவு.    

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம் – பெண்களுக்கு உரிமை தொகை!

முதல்வர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். அரசு சேவைகள் வீடு தேடி செல்லும் இந்த திட்டத்தின் மூலம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள, விடுபட்ட பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.…

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு!

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு வழங்க பள்ளிக் கல்வித் துறையின் மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இந்த உயர்வு ஜூன் 1, 2025 முதல்…

மருத்துவக் கல்விக் கட்டணம் உயர்வு!

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., மேளாண்மை ஒதுக்கீட்டிற்கான கல்விக் கட்டணம் ரூ.13.5 லட்சத்தில் இருந்து, ரூ.15 லட்சமாக உயர்வு. 21 சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.4.5 லட்சம் வரை கட்டணம் நிர்ணயம்.    

சபரிமலை கோயில் நடை திறப்பு!!

ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை மாலை (16-ம் தேதி) திறப்பு. மறுநாள் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். 21-ம் தேதி இரவு 10 மணி அளவில் கோயில் நடை சாத்தப்படும்.    

குரூப் 2 தேர்வு தேதி அறிவிப்பு!

குரூப் 2, 2 ஏ பணியிடங்களுக்கான தேர்வு செப்., 28ல் நடைபெறுகிறது; தேர்வுக்கு இன்று முதல் ஆக., 13 வரை விண்ணப்பிக்கலாம்; சார் பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், வனவர் உள்ளிட்ட 645 பணியிடங்களுக்கு தேர்வு.