Web Analytics Made Easy -
StatCounter

சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு!

சிபிஎஸ்சி 10ம் வகுப்பு தேர்வுகள் 2026 பிப்ரவரி 17 முதல் மார்ச் 10 வரை, 12ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெறும். முழு அட்டவணை cbse.gov.in-ல் கிடைக்கும்.

ஐப்பசி மாத கிரிவலம்!

ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம், 04ம் தேதி (செவ்வாய்) இரவு 9:37 மணிக்கு தொடங்கி, 05ம் தேதி (புதன்) இரவு 7:20 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி…

தரவரிசை பட்டியல் வெளியீடு!

ஜூலை மாதத்தில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு முடிவுகள், மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் நவம்பர் 7க்குள் ஓடிஆர் (One Time Registration) மூலம் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை!!

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை நவம்பர் 10 முதல் 30 வரை நடைபெறும். வீட்டு பட்டியல் மற்றும் சுய கணக்கெடுப்பு நவம்பர் 1 முதல் 7 வரை நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சபரிமலை தரிசன முன்பதிவு நவம்பர் 1 முதல் தொடக்கம்!

சபரிமலை மகரவிளக்கு பூஜை காலத்தில் தினமும் 90,000 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி. நவம்பர் 1 முதல் முன்பதிவு தொடக்கம். 70,000 பேர் ஆன்லைனிலும், 20,000 பேர் ஸ்பாட் புக்கிங்கிலும் முன்பதிவு செய்யலாம்.

சாட்ஜிபிடி ஓராண்டு இலவசம் – ஓபன் ஏ.ஐ. அறிவிப்பு!

நவம்பர் 4 முதல், சாட்ஜிபிடி செயலி இந்தியர்களுக்கு ஓராண்டு இலவசமாக வழங்கப்படும் என்று ஓபன் ஏ.ஐ. நிறுவனம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் திருக்கல்யாண வைபவம்!

கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் நேற்று (28.10.2025) வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர்.

கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 87 ஆம் ஆண்டு திருவிழா!

கலசபாக்கத்தில் அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருவிழா நேற்று (27.10.2025) சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி திருவீதிஉலா நடைபெற்ற…

ஆதார் பயனர்களுக்கே முதல் முன்பதிவு!

இன்று (அக். 28) முதல், ரயில் முன்பதிவின் முதல் நாளில் காலை 8 மணி முதல் 10 மணி வரை ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதி என ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்துள்ளது.

வெள்ளிக்கும் கடன் – ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு!

ஏப்ரல் 1 முதல் வெள்ளியையும் அடமானம் வைக்கலாம். தங்கம், வெள்ளிக்கு இணையாக கடன் பெறுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தங்கம், வெள்ளிக் கட்டிகள் இடிஎப் ஆகியவற்றை அடமானமாக வைத்து கடன்…

கலசபாக்கம் ஏரி நிரம்பி வழிகிறது!

கலசபாக்கம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், கலசபாக்கம் ஏரி தற்போது முழுமையாக நிரம்பி உள்ளது. ஏரியின் நீர்மட்டம் அதிகரித்ததால், உபரி நீர் வெளியேறி வருகிறது.