Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் – செய்யாற்றில் நீர் வரத்து அதிகரித்துக் கொண்டிருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கிராம நிர்வாக அலுவலர் வேண்டுகோள்!

கலசபாக்கம் – செய்யாற்றில், தொடர் மழையினால் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம். குழந்தைகளை ஆற்றுக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.…

கலசபாக்கம் செய்யாற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு… விவசாயிகள் மகிழ்ச்சி!!!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் கலசபாக்கம் செய்யாற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கலசபாக்கம் சுற்றியுள்ள பகுதிகளில் பல ஏரிகளில் உபரிநீர் வெளியேறி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.…

தொடர் மழையின் காரணமாக குப்பநத்தம் அணை மற்றும் மிருகண்டா அணையிலிருந்து நீர் திறப்பு!

தொடர் மழையின் காரணமாக குப்பநத்தம் அணை மற்றும் மிருகண்டா அணையிலிருந்து 320 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கலசபாக்கம் செய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம்,கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை…

கலசபாக்கம் பீடரில் பராமரிப்பு பணி இருப்பதால் சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பீடரில் பராமரிப்பு பணிக்காக மேற்கொள்ள இருப்பதால் நாளை (06.09.2022) செவ்வாய்க்கிழமை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர்,அணியாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி…

கலசபாக்கம் பகுதியில் நேற்று செய்யாற்றங்கரையில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது!

கலசபாக்கம் பகுதியில் விநாயக சதுர்த்தியன்று விநாயகர் சிலை வைத்து வழிபட்ட நிலையில் ஐந்து நாட்களுக்கு பிறகு நேற்று (04.09.2022) செய்யாற்றங்கரை மற்றும் குளக்கரைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.

குழந்தைகளுக்காக இந்த வாரம் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு கடிதம் வரைதலுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டது!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அவர்களின் விருப்பமான ஆசிரியர்களுக்கு கடிதம் வரைந்து அதை வாசித்து காட்டினார்.

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் செய்தி சேகரிப்பதில் ஆர்வமுள்ள நபர்கள் தேவை!

உங்கள் பகுதியில் இருந்து தினசரி செய்திகள் தகவல்கள் மற்றும் கோயில்களை பற்றிய சிறப்புகளை WhatsApp வாயிலாக டைப் செய்து செய்து சேகரிப்பதில் ஆர்வம் உள்ள நபர்கள் தேவை செல்போனிலேயே புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தால்…

மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் – கலசபாக்கம்

மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் மற்றும் விவசாயிகள் சந்தை இம்மாத தலைப்பு: சந்தைபடுத்தலில் விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் நாள்: 5-09-2022 நேரம்: 10 முதல் 1 வரை கலந்துரையாடல், 1 முதல் 2…

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான தொழில் முனைவோர் பயிற்சி!

திருவண்ணாமலை மாவட்ட வேளாண் உழவா் நலத்துறையின் கீழ் செயல்படும் உழவா் பயிற்சி நிலையம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து ஊரக இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி 2022-23 ஆம் ஆண்டில் நடத்த உள்ளது.…

திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு சொர்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் கரிக்கலாம்பாடி, செங்கம் தாலுகாவில் மேல்செங்கம் ஆகிய இடங்களுக்கு மாற்றாக ஆரணி தாலுகாவில் குன்னத்தூர் மற்றும் செங்கம்…

கலசபாக்கம் பகுதியில் பரவலாக மழை!

கலசபாக்கம் பகுதியில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடனும் லேசான மழையுடனும் காணப்பட்ட நிலையில், பிற்பகல் 12 மணிக்கு பிறகு வானிலை மாற துவங்கி, தற்போது வரை பரவலாக தொடர் மழை பெய்து வருகின்றது.

கலசபாக்கத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை!

கலசபாக்கத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று(31.08.2022) ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தார்கள். கலசப்பாக்கம் பகுதியில் விநாயக பெருமானை அவரவர் வீட்டில் வைத்து பூஜை…

25 ஆண்டுகளுக்கு பின்னர் நிரம்பிய காரப்பட்டு ஏரி பொதுமக்கள் சிறப்பு வழிபாடு!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரப்பட்டு பெரிய ஏரியானது 25 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாவது முறையாக நிரம்பி வழிகிறது. மேலும் காரப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சீனிவாசன் என்கிற…

அண்ணாமலையார் திருக்கோயிலில் பிள்ளையார் சதுர்த்தி முன்னிட்டு மூன்றாம் பிரகாரத்திலுள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (30.08.2022) மாலை மூன்றாம் பிரகாரத்திலுள்ள சம்பந்த விநாயகருக்கு பிள்ளையார் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேக தீபாராதனை மற்றும் மாட வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள்…

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பிற மாவட்டத்திற்கு செல்ல 350 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகத்தின் முக்கிய பண்டியாக விநாயக சதுர்த்தி நாளை கொண்டாடப்படும் நிலையில் சென்னையிலிருந்து வெளியூர், பிற மாவட்டங்களுக்கு செல்ல 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவிப்பு.

கலசபாக்கத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் தீவிரம்!

விநாயகர் சதுர்த்தி நாளை 31-ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், வீடுகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். அதற்காக கலசபாக்கத்தில் விநாயகர் சிலைகள் செய்யும்…

கலசபாக்கம் அடுத்த கரையம்பாடி தடுப்பணையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது!

செங்கம் மற்றும் ஜமுனமரத்தூர் மலைத்தொடரில் தொடர் மழையின் காரணமாக கலசபாக்கம் செய்யாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், கலசபாக்கம் அடுத்த கரையம்பாடி தடுப்பணை நிரம்பியதால் நீர் வழிந்து அருவி போல் காட்சியளிக்கிறது.

கலசப்பாக்கத்தில் 11ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா!

கலசப்பாக்கத்தில் உள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் கோவில் தெருவில் விநாயகர் சிலை அமைத்து வெகு விமர்சையாக விநாயகர் சதுர்த்தி விழா. நிகழும் சுபகிருது வருடம் ஆவணி மாதம் 15 ஆம் தேதி (31.08.2022) புதன்கிழமை 6…