Web Analytics Made Easy -
StatCounter

PIN தேவையில்லை.. கைரேகை போதும்!

UPI பரிவர்த்தனை செய்வதற்கு PIN நம்பருக்குப் பதிலாக, Finger Print அல்லது முக அங்கீகாரம் முறையில் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் இந்த முறை மூலம் பயனர்களின் பரிவர்த்தனைகள் வேகமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் எனத்…

அக்டோபர் 11 -ல் இலக்கிய திறனறி தேர்வு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த தேர்வில் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். காலை 10 மணிக்கு தொடங்கி 12 மணி வரை நடைபெறும் தேர்வை கண்காணிக்க 560 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதம் ரூ.500…

இந்தியாவில் டிஜிட்டல் நாணயங்கள்!

ரிசர்வ் வங்கியின் நேரடி கண்காணிப்பில் இந்தியாவில் விரைவில் டிஜிட்டல் நாணயங்கள் புழக்கத்தில் விடப்படும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

மின்கம்பியாள் உதவியாளர் தேர்வு அறிவிப்பு!

தமிழக திறன் பயிற்சி துறை சார்பில் மின்கம்பியாள் உதவியாளர் (Wireman Helper Competency Examination) திறனறி தேர்வு டிசம்பர் 13 மற்றும் 14, 2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. தகுதி: விண்ணப்பதாரர் மின் ஒயரிங் தொழிலில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம்…

18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, திண்டுக்கல், கோயம்புத்தூர்  ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான…

இன்று இரவு வானில் சூப்பர் மூன்!

இந்தாண்டின் முதல் சூப்பர் மூன் இன்று இரவு வானில் தென்படவுள்ளது. இந்த பௌர்ணமியின்போது சந்திரன் வழக்கத்தை விட 14% பெரியதாகவும், 30% பிரகாசமாகவும் தெரியும். நேற்று வானில் தென்பட்ட நிலையில், இன்றும் அதனை காணலாம்.…

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் (08.10.2025) நாளை மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் (08.10.2025) புதன்கிழமை அன்று காலை…

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று (அக்டோபர் 6, 2025) திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.    

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி சனிபிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள்.

கலசபாக்கத்தில் நேற்று இரவு பெய்த மழையின் அளவு!

கலசபாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழையின் அளவு 74.2 மில்லி மீட்டராக ஆக பதிவு ஆகியுள்ளது.

காசோலை டிபாசிட் – உடனடி பணம் வரவு நடைமுறை!

வங்கியில் காசோலை டிபாசிட் செய்த சில மணி நேரத்தில், உரியவரின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதற்கான புதிய நடைமுறை, அக்டோபர் 4-ம் தேதி (இன்று) முதல் அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.