Web Analytics Made Easy -
StatCounter

கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்!

காய்ச்சல், சளி, உடல் வலி உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

பள்ளி மற்றும் அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை

1 முதல் 9 வகுப்பு பள்ளி மற்றும் அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கு ஜன. 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 20ம் தேதி வரை விடுமுறை அறிக்கப்பட்ட நிலையில் 31ம் தேதி வரை…

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜன.31 வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு:

14-01-2022 முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை. 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு. பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில்…

பொங்கலுக்கு பிறகு முழு ஊரடங்கு அவசியமில்லை!

தமிழ்நாட்டின் முழு ஊடகங்களுக்கு அவசியமில்லை; மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், கொரானா கட்டுப்பாடு விதிமுறைகள் கடைபிடித்து மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நோக்கம். – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நற்செய்தி!…. முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அதிக சிகிச்சை வசதியுடன் மேலும் 5 ஆண்டுக்கு நீட்டித்து, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம், தமிழக அரசு இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலமைச்சரின் விரிவான…

ஊரடங்கு குறித்த சந்தேகங்களுக்குத் தீர்வு காண 24 மணி நேரமும் இயங்கும் அலைபேசி எண்கள் அறிமுகம்!

ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து பொதுமக்களின் சந்தேகங்களுக்குத் தீர்வு காண 4 அலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா பரவல் அதிகரித்ததால் தமிழகத்தில் தினமும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கும் அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்…

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் தேர்வுகளும் ஒத்திவைப்பு!

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் தேர்வுகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திங்கள்கிழமை தெரிவித்தார். இந்நிலையில், அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் தேர்வுகளும் கரோனா பரவல் காரணமாக…

திருவண்ணாமலை மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள் என மக்கள் வசதிக்கேற்ற இடங்களில் சிறப்பு முகாம்கள்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்!

“பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11-ம் தேதி முதல் 13ம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன” – போக்குவரத்துத்துறை அறிவிப்பு

திருவண்ணாமலையில், பூஸ்டர் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் முருகேஷ்

இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி பணி தொடங்கியது. அதனை ஆட்சியர் பா.முருகேஷ் தொடங்கி வைத்தார். இதில் அரசு வழிகாட்டுதலின்படி கொரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி…

அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி கட்டாயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்  வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில்‌…

தமிழகத்தில் நாளை (08.01.2022) முழு ஊரடங்கு அமல்..

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்.. எதற்கெல்லாம் அனுமதி? – மருத்துவமனைகள், மருந்தகங்கள் செயல்படும் – பெட்ரோல் பங்குகள் செயல்படும் – புறநகர் ரயில் சேவை செயல்படும் – திருமண உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்களுக்கு பத்திரிக்கைகளுடன்…

பெயர் மாற்றம் & புல எண் மாற்றம் வழங்கும் சிறப்பு முகாம்

போளூர் கோட்டத்தில் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்கள், விவசாயி மின் இணைப்பு தொடர்பாக பெயர் மற்றம் மற்றும் புல எண் மாற்றம் கோரும் விண்ணப்பதார்கள் வரும் 10ம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணி…

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் வரை காத்திருப்போருக்கு அரசு உதவி தொகை வழங்குகிறது.…

தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்.. எதற்கெல்லாம் தடை..?? அனுமதி..???

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும். உடற்பயிற்சிக்…

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு

தமிழகத்தில் கோவிட் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து ஜன.10ம் தேதி வரை சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ள நிலையில், பாதிப்புகள் அதிகரித்து வருவதால்,…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. மூலவர், உண்ணாமுலை அம்மன் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், மூலவர் சன்னதி…

திருவண்ணாமலையில் கொரோனா விதிகளை மீறினால் அபராதம்: ஆட்சியர் எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தொற்று நடைமுறைகளை பின்பற்றப்படாமல் இருந்தால் அபராதம்…

வழிபாட்டுத்தலங்கள் செயல்பட தடை

ஓமிக்ரான் அதிவேக பரவல் காரணமாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் செயல்பட தடை மற்றும் கடைகளுக்கான நேரக் கட்டுப்பாடு நாளை முதல் அமலுக்கு வர வாய்ப்பு. – சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இல்லம் தேடிக் கல்வித் திட்டதிற்காக சிறப்பு விருது பெற்ற நமது கலசபாக்கத்தை சேர்த்த ஆசிரியர் KV ரமேஷ்!

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற “வீதி விருது விழா” நிகழ்ச்சியில், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்திற்காக, நமது கலசபாக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு KV ரமேஷ் அவர்களுக்கு சிறப்பு விருதினை தமிழக கல்வி அமைச்சர்…

பொங்கல் தொகுப்பு டோக்கன் கிடைக்காதவர்கள் ரேஷன் கடைக்கு எப்போது போகலாம்?

இன்று முதல் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வினியோகிக்க இருப்பதன் காரணமாக பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரேஷன் கடைகளுக்கு தினமும் 150 முதல் 200 பேர் மட்டும் பரிசு பொருட்களை…

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அமாவாசை தேய்பிறை பிரதோஷம் ஐந்தாம் பிரகாரம் பெரிய நந்திக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்கழி மாத அமாவாசை தேய்பிறை பிரதோஷம் முன்னிட்டு (31.12.2021) நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.