Web Analytics Made Easy -
StatCounter

சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்கும் வகையில் சைபர் க்ரைம் போலீசார் சார்பில் ‘1930’ என்ற புதிய எண்!

தமிழகத்தில் வங்கி மோசடி, இணையதள குற்றங்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வகையில் சைபர் க்ரைமில் ஏற்கனவே இயங்கி வரும் ‘155260’ என்ற எண்ணிற்கு மாற்றாக ‘1930’ என்ற புதிய சைபர் க்ரைம் உதவி…

அருள்மிகு சந்திரசேகரர் சூலத்திற்கு சிறப்பு அபிஷேகம்!

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை பள்ளிகொண்டாபட்டு கமண்டல நாக நதியில் நடைபெற்ற மாசி மக தீர்த்தவாரி. அருள்மிகு சந்திரசேகரர் சூலத்திற்கு  சிறப்பு அபிஷேகம்.

திருவண்ணாமலைக்கு வந்த குடியரசு தின அலங்கார ஊர்திக்கு பொதுமக்கள் உற்சாகமாக மலர்தூவி வரவேற்றனர்!

‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற தலைப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை பறைசாற்றும் வகையில் குடியரசு தின ஊர்வலத்தில் பங்கேற்ற அலங்கார ஊர்தி நமது திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்தது, அதை பொதுமக்கள்…

நகைக்கடன் தள்ளுபடி 25ம் தேதி முதல் நகைகளைப் பெற்றுக் கொள்ளலாம்!

5 சவரன் வரையிலான நகைகளுக்கு கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, பரிசீலனைக்குப் பின்னர், நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாகவும், இம்மாதம் 25ம் தேதி முதல் அடகு வைக்கப்பட்டிருக்கும் நகைகளைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்…

4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போது, 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும் , 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் போது, 40 கி.மீ…

பிப்.,19-ல் தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை!

வாக்குப் பதிவு நாளான பிப்ரவரி 19-ம் தேதி பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. 50% மேல் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் இருப்பின் அப்பள்ளிகளுக்கு 18-02-2022 அன்றும் விடுமுறை அளிக்கப்படுகிறது. – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.

திருவண்ணாமலையில் அருள்மிகு சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை!

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் 15.02.2022 இரவு திருக்கோயில் இரண்டாம் பிரகாரத்தில். மாசி மாதம் சதுர்த்தசி திதியில் அருள்மிகு சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது

நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் MBBS பயில்வதற்கான வாய்ப்பைப் பெற்ற நமது கலசபாக்கத்தை சேர்ந்த மாணவி!

நமது கலசபாக்கத்தை சார்ந்த மாணவி செல்வி. கீர்த்தனா நாராயணன் அவர்களுக்கு நீட் தேர்வு மூலமாக மருத்துவம் படிக்க MBBS சீட் கிடைத்துள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளார். கலசபாக்கம்…

ஷீரடி மற்றும் காசிக்கு விமான சுற்றுலா – பொதுமக்களுக்கு IRCTC யின் ஏற்பாடு!

இந்திய அளவில் பொதுமக்களுக்கு IRCTC, ரயில் சேவையுடன் விமான சுற்றுலா சேவையையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் IRCTC சென்னையில் இருந்து ஷீரடி மற்றும் காசிக்கு விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆன்மீக…

திருவண்ணாமலையில் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்த கலெக்டர் முருகேஷ்!

திருவண்ணாமலை அரசு கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு பணிகளையும், நகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்படும் பொருட்கள் வாக்குச்சாவடி மையத்திற்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் உள்ளதையும் பார்வையிட்டு கலெக்டர் முருகேஷ் ஆய்வு…

TNPSC சார்நிலை பணிகள் தேர்வு தரவரிசை முக்கிய அறிவிப்பு!

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகள் தேர்வுக்கான மதிப்பெண்கள் மற்றும் தரவரிசையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 545 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்வை 15,490 பேர் எழுதிய நிலையில், 15,012 பேருக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியலை டிஎன்பிஎஸ்சி…

திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் நேரடி விநியோகம்!

கொரோனா குறைந்து வரும் நிலையில் மீண்டும் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை மக்களுக்கு நேரடியாக வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தினமும் 15 ஆயிரம் இலவச தரிசன டோக்கன் பக்தர்களுக்கு வழங்கப்படும் என்றும் ஆதார்…

45-வது புத்தகக் கண்காட்சி பிப்.16-இல் தொடக்கம்!

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 45 ஆவது புத்தகக் காட்சியை பிப்ரவரி 16 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஜனவரியில் 1000 அரங்குகள் வரை அமைக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 800…

விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க மானியம் – மத்திய அரசு அறிவிப்பு!

விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு pm-kisan டிராக்டர் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மானியம் வழங்கிவருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பாதி விலையில் டிராக்டர்கள் கிடைக்கின்றன முக்கியமான நிபந்தனை : •…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தவிர) என 648 நகர்ப்புற…

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களின் விவரம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. நகராட்சிகள் – வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் திருவண்ணாமலை – அரசு கலைக்கல்லூரி, செங்கம் ரோடு, திருவண்ணாமலை ஆரணி -…

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மாசி மாத பௌர்ணமி பிரதோஷம். கொடி மரம் நந்திக்கும் பிரதோஷ நாயகருக்கும் சிறப்பு அபிஷேகம்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வரும் பிப்ரவரி 19ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை!

தேர்தல் நடைபெறும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள வங்கிகள் செயல்படும். – தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம்.

இலவச பயிற்சி வகுப்பில் கல்வியின் அருமையும் கற்றலின் சிறப்பும்!

நமது கலசபாக்கம் மாணவர்களின் இந்த வார இலவச பயிற்சி வகுப்பில் கல்வியின் அருமையும் கற்றலின் சிறப்பும் என்ற தலைப்பில் திரு கலியமூர்த்தி IPS அவர்களின் சிறப்பு காணொளி வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

பௌர்ணமி கிரிவலத்திற்கு பொதுமக்கள் வர வேண்டாம்: கலெக்டர் வேண்டுகோள்!

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு பக்தர்கள், பொதுமக்கள் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த்…

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவினை புதுப்பிக்க மார்ச் 1 வரை அவகாசம்!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவு தாரர்கள், தங்களது பதிவுகளை புதுப்பிக்க தவறியவர்கள் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் லோ.யோகலட்சுமி தெரிவித்துள்ளார். வரும் 1ம் தேதிக்குள் https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதளம்…

ரயில் டிக்கெட் இயந்திரங்களில் க்யூஆர் கோடு – இனி எளிய முறையில் கட்டணம் செலுத்தலாம்!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் புதிய தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன இந்த தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணிகள் டிக்கெட் எடுத்து கொள்ளும் வசதியினால் இனி டிக்கெட்…

இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு ஆதார் முகாம் வரும் பிப்.22 முதல் பிப் 27-ம் தேதி வரை !

இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு ஆதார் முகாம் வரும் பிப்.22 முதல் பிப் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் புதிதாக ஆதார் எடுக்க கட்டணம் கிடையாது. ஆதார்…

வாக்காளர்களே ! உங்கள் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய வேண்டுமா!

வாக்காளர்கள் தங்களது மின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய ஹெல்ப்லைன் செயலி மற்றும் https://voterportal.eci.gov.in/ மற்றும் https://www.nvsp.in/ ஆகிய இணையதளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.…