Web Analytics Made Easy -
StatCounter

காப்பலூர் ஏரியில் நீர் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது

கலசப்பாக்கம் அடுத்த காப்பலூர் கிராமத்தில் உள்ள ஏரி தற்போது நீர் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா முதல் நாள் இரவு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி முதல் நாள் நேற்று இரவு (10-11-2021) அண்ணாமலையார் சமேத அருணாசலேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளும் மங்கள வாத்தியம் முழங்க சிறப்பு அலங்காரத்தில் உலா நடைபெற்றது.

கலசபாக்கம்.காம் மூலமாக வைக்கப்பட்ட விழிப்புணர்வு டிஜிட்டல் பதாகைகள்!

கலசபாக்கம் மின்சாரவாரியம் சார்பாக, பொதுமக்களுக்கு மழைக்கால மின்சாதன உபயோகம் மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு டிஜிட்டல் பதாகைகள் நமது கலசபாக்கம்.காம் மூலமாக வைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார் காலை 6.40 மணிக்கு கொடியேற்றினார்.

திருவண்ணாமலை சூரசம்ஹாரம் திருவிழா

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று இரவு (09.11.2021) சூரசம்ஹாரம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

திருவண்ணாமலை கந்தசஷ்டி உற்சவம் ஐந்தாம் நாள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கந்தசஷ்டி உற்சவம் ஐந்தாம் நாள்ஸ்ரீ சுப்ரமணியர் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை ஐந்தாம் பிரகாரம் வீதி உலா

கலசபாக்கத்தில் 83 ஆம் ஆண்டு சூரசம்ஹாரம் திருவிழா

கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 83 ஆம் ஆண்டு திருவிழா, இன்று (08.11.2021) காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. நாளை செவ்வாய் (09.11.2021) அருள்மிகு திரிபுரசுந்தரி உடன் திருமாமுனீஸ்வரர் ஆலயத்தில் சூரசம்ஹார…

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப திருவிழா 2021

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்– 2021 தேதி தமிழ் தேதி நாள் காலை / இரவு உற்சவம் வீதி உலா விவரம் 7.11.2021 ஐப்பசி 21 ஞாயிற்றுக்கிழமை அருள்மிகு துர்க்கை அம்மன் திருவிழா 8.11.2021 ஐப்பசி…

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இணையதளத்தில் இன்று முதல் முன்பதிவு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்  கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணி முதல் 7.30 மணிக்கு கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்ற…

மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு சொல்லுங்கள்

மழைக்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கு மின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து நமது கலசபாக்கம் மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. தெருக்கள் மற்றும் சாலைகளில் செல்லும் போது மின் கம்பம் அருகில் செல்லக்கூடாது. மின் கம்பத்தை தொடக்கூடாது. தண்ணீர் தேங்கிய…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினர்

கலசபாக்கம் அடுத்த பில்லூர் கிராமத்தில் நேற்று (04.11.2021) கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகைபொருட்களை சமூக தன்னார்வலர் திரு. ஆர். தரணி இராஜாராமுடன் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. ஷண்முகபிரியாமூர்த்தி ஆகியோர் வழங்கினார்.

மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் – கலசபாக்கம்

இம்மாத தலைப்பு: வேளாண் சமுதாயம் இன்று: • புறத்தில் அடைந்துள்ளதும் இழந்துள்ளவையும். • அகத்தில் இழந்துள்ளதும் அடைந்துள்ளவையும். • வரும் நாட்களில் வேளாண் சமுதாயம் பற்றிக்கொள்ள வேண்டியவை எவை? நேரம்: 10 முதல் 1…

திருவண்ணாமலையில் மின்விளக்குளால் ஜொலிக்கும் கோபுரங்கள்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும் ஐப்பசி மாதம் 24ம்நாள் (10.11.2021) அன்று கொடியேற்றத்துடன் தீப திருவிழா தொடங்குகிறது. வரும் கார்த்திகை மாதம் 3ம்நாள் (19.11.2021)அன்று 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இந்த வருடம் பரணி மற்றும் மகாதீபத்திற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 10.11.2021 புதன்கிழமை விடியற் காலை 06.30 மணிக்கு மேல் 07.25 மணிக்குள் விருச்சக லக்னத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 16.11.2021 செவ்வாய்கிழமை காலை அன்று 7-ம்…

வாட்ஸ் அப்பில் வந்தது

இன்னும் 10 வருடத்தில் எந்த தொழிலும் இருக்காது கூர்ந்து கவனித்துப் படியுங்கள்புரியும் எதிர்காலம் எப்படி இருக்கும் தவறாமல் படியுங்கள்…. GOLDEN AGE COMING SOON? 2025ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்? என்னென்ன தொழில்கள் இருக்காது…

கலசபாக்கம் ருத்ரா பட்டாசு கடையில் தரமான பட்டாசுகள் விற்பனைக்கு தயார்

தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நிலையில், நமது கலசபாக்கம் பஜார் வீதியில் ருத்ரா பட்டாசு கடையில் தரமான பட்டாசுகள், கிப்ட் பாக்ஸ் பட்டாசு ரகங்கள் நேரடி விற்பனை தயாராக உள்ளது. தொடர்புக்கு: ருத்ரா பட்டாசு கடை…

விண்ணுவாம்பட்டு பகுதியில் உயர் அழுத்த மின் கம்பியை ஒட்டிய மரகிளைகளை அகற்றி நடவடிக்கை!

கலசபாக்கம் அருகே உள்ள விண்ணுவாம்பட்டு பகுதியில் தாழ்வழுத்த மின் பாதை மின் கம்பியை ஒட்டி மரகிளைகள் செல்வதால், மழைக் காலங்களில் அசம்பாவிதம் தவிர்க்கும் வகையில், தேவையற்ற கிளைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற…

கலசபாக்கம் மற்றும் கலசபாக்கம் தாலுகாவில் உள்ள பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம்

கலசபாக்கம் பகுதியில் மின் நிறுத்தம்: பராமரிப்பு பணிக்கான வியாழக்கிழமை (28.10.2021) காலை 9மணி முதல் 2 மணி வரை கலசபாக்கம், பூண்டி,காப்பலூர் மற்றும் பிரயாம்பட்டு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. கலசபாக்கம் தாலுகா மின்…

Started monsoon, how to escape from an electrical accident electricity
தொடங்கியது பருவமழை; மின் விபத்திலிருந்து தப்பிப்பது எப்படி? – மின்சாரத்துறை!

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மழை காலங்களில் மின் விபத்துகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது. காற்று மற்றும் மழைக் காலங்களில் மின் கம்பங்கள், மின்…

கலசபாக்கம் பிரிவிற்குட்பட்ட சாலையனூர் கிராம புதிய மின்மாற்றி மின்னோட்டம் செய்யப்பட்டது!

போளூர் கோட்டம், கலசபாக்கம் பிரிவிற்குட்பட்ட கீழ்பென்னாத்தூர் தொகுதியில் சாலையனூர் கிராம மின்மாற்றி ஒன்றிலிருந்து மிகை மின் பளு குறைத்து புதியதாக எஸ் எஸ் 16 / 63 kva DT மின்னோட்டம் நேற்று (22.10.2021…

செங்கம் செய்யாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது!

தமிழகத்தில் தொடர்மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. செங்கம் அருகே செல்லும் செய்யாற்றில் வெள்ளம் இருகரைகளையும் தொட்டு கரை புரண்டு செல்கிறது. இதனால், அந்தப் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கலசபாக்கம் அன்றும் இன்றும் : கலசபாக்கம் நூலகத்தின் மாதாந்திர வாசகர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி!

கடந்த ஞாயிற்றுக்கிழமை(17.10.2021) காலை நடைபெற்ற, கலசபாக்கம் நூலகத்தின் மாதாந்திர வாசகர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் “கலசபாக்கம் அன்றும் இன்றும்” என்ற தலைப்பில் மூத்தவர் திரு.பரசுராமன் அவர்கள் நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார்!

கலசபாக்கம் ஊராட்சியின் ஒன்பதாவது வார்டு உறுப்பினராக திருமதி கீதா சுந்தரம் தேர்வு

கலசபாக்கம் ஊராட்சியின் ஒன்பதாவது வார்டு உறுப்பினராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி.கீதா சுந்தரம் அவர்கள் பதவியேற்ற உடன் அங்குள்ள தூய்மை பணியாளர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். உடன் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர்…

அண்ணாமலையார் திருக்கோயிலில் ஐந்தாம் பிரகாரத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர்க்கு அன்னாபிஷேகம்

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று திருக்கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர்க்கு அன்னாபிஷேகம்

கேட்டவரம்பாளையம், அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை சிம்மேஸ்வரர் ஆலய அன்னாபிஷேகம்!

கலசபாக்கம் வட்டம் கேட்டவரம்பாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை சிம்மேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக அன்னாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்