Web Analytics Made Easy -
StatCounter

இயற்கை வேளாண்மை களப்பணிக்கான பயிற்சிப் பட்டறை!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பாரம்பரிய விதைகள் மையமும் தாளாண்மை இதழும் இணைந்து நடத்தும் இயற்கை வேளாண்மை களப்பணிக்கான பயிற்சிப் பட்டறை. இது தொழில்நுட்பப் பயிற்சி அல்ல, தலைமைப் பண்பு வழிகாட்டல், தமிழகத்தில் இயற்கை வேளாண்மைப்…

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகின்ற நவம்பர் 22-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது.

விவசாயிகள் பயிரினை காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த பயிர்களை காப்பீடு செய்ய, நவம்பர் 15-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அங்கீகாரம்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரேஷன் கடை விற்பனையாளருக்கு விண்ணப்பித்தவர்கள் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரேஷன் கடை விற்பனையாளருக்கு விண்ணப்பித்தவர்கள் www.drbvpm.in என்ற இணையதளத்தின் மூலம் நேர்காணல் விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழக அரசின் SETC பேருந்துகளில் இனி 90 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு!

தமிழக அரசின் SETC பேருந்துகளில் இனி 90 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளது. ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களாக இருந்ததை 90 நாட்களாக உயர்த்தி தமிழக அரசு…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 18 மணி நேர தரிசனம்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலத்தில் சபரிமலையில் தினசரி 18 மணி நேரம் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் 70,000 பேர், ஸ்பாட் புக்கிங் மூலம் 10,000 பேருக்கு அனுமதி…

டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்புகள் – டெலிகிராமிலும் வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை இனி டெலிகிராம் மூலமும் அறியலாம். இணையதளம் மற்றும் எக்ஸ்தளத்தில் அறிவிப்புகள் வெளியான நிலையில் வாட்ஸ் அப் மூலம் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கலசபாக்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் மாவட்ட வருவாய் துறை அலுவலர் ஆய்வு!

கலசபாக்கத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் இன்றும்,நாளையும் நடைபெறுகின்றது. திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர்திரு. இரா.இராம்பிரதீபன் ஆய்வு செய்தார். உடன் கலசபாக்கம் வட்டாட்சியர் திருமதி.ராஜராஜேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தார்கள்.

தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியலில் பெயர்,சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தம் சிறப்பு முகாம்!

தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியலில் பெயர்,சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தங்கள் செய்ய வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. கலசபாக்கத்தில் நடைபெறும் இடங்கள்:- 1. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கலசபாக்கம் 2.…

கலசபாக்கம் நூலகத்தில் 57-வது தேசிய நூலக வார விழா!

கலசபாக்கம் நூலகத்தில் 57-வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு நாளை (17.11.2024) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் தேசிய நூலக வார விழா கொண்டாடப்படுகின்றது. இங்ஙனம்: வாசகர் வட்டம் கலசபாக்கம்.

சபரிமலை மண்டல கால பூஜைக்காக கோவில் நடை இன்று திறப்பு!

சபரிமலையில் மண்டல காலம் நாளை தொடங்குகிறது கோயில் நடை இன்று மாலை திறப்பு இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இவ்வருட மண்டல கால பூஜைகள்…

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் – 2025!

வாக்காளர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் சிறப்பு முகாம் (16.11.2024, 17.11.2024) மற்றும் (23.11.2024, 24.11.2024) ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் ஆனது அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்ற உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்…

கலசபாக்கம் அடுத்த காந்தபாளையம் குங்கும நாயகி சமேத சோமநாத ஈஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம்!

கலசபாக்கம் அடுத்த காந்தபாளையம் குங்கும நாயகி சமேத சோமநாத ஈஸ்வரர் ஆலயத்தின் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விவசாயிகள் பயிரினை காப்பீடு செய்ய இன்று கடைசி நாள்!

விவசாயிகள் தாங்கள் விளைவித்த பயிரினை காப்பீடு செய்ய இன்று (15.11.2024) கடைசி நாளாகும். எனவே, தாமதிக்காமல் உங்களுக்கு அருகிலுள்ள மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற பொது சேவை மையத்தில் உடனடியாக உங்கள் பயிரினை காப்பீடு…

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா!

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி இன்று (14-11-2024) நடைபெற்றது. குழந்தைகளுக்கு ஆசிரியர் சார்பாக இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.