Web Analytics Made Easy -
StatCounter

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (09.11.2024) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் நாளை (09.11.2024) சனிக்கிழமை காலை 9.00 மணி…

கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 86 ஆம் ஆண்டு திருவிழா!

கலசபாக்கத்தில் அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருவிழா நேற்று (07.11.2024) சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி திருவீதிஉலா…

சபரிமலைக்கு இருமுடி கட்டுகளில் சாம்பிராணி, கற்பூரம், பன்னீர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து செல்ல தடை!

சபரிமலைக்கு இருமுடி கட்டுகளில் சாம்பிராணி, கற்பூரம், பன்னீர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வர பக்தர்களுக்கு தடை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ரேஷன் கடை விற்பனையாளர், கட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

ரேஷன் கடை விற்பனையாளர், கட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறையின் கீழ் 34 ஆயிரத்து 726 ரேஷன் கடைகள் இயங்கி…

போளூர் அடுத்த எட்டிவாடி ரயில்வே கேட் மேம்பால பணி நடைபெற உள்ளதால் மாற்று வழியில் செல்ல ஏற்பாடு!

போளூர் அடுத்த எட்டிவாடி ரயில்வே கேட் மேம்பால பணி நடைபெற உள்ளதால், வரும் 11 ஆம் தேதியில் இருந்து போளூரிலிருந்து வேலூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் ஆரணி சாலையில் சென்று வடமாதிமங்கலம் – கேளூர் சந்தை மேடு…

கலசபாக்கம் செங்குந்தர் தெருவில் கால்வாய் அமைக்கும் பணி!

கலசபாக்கம் செங்குந்தர் தெருவில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட மகா ரதம் (08.11.2024 ) அன்று வெள்ளோட்டம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட மகா ரதம் வெள்ளோட்டம் ஆனது ஐப்பசி மாதம் 22 ஆம் தேதி (08.11.2024) காலை 7:00 மணிக்கு மேல் 08:30 மணிக்குள் நடைபெற உள்ளது.

கலசபாக்கம் வட்டார அளவில் இன்று கலைத் திருவிழா 2024!

கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகின்றது. இன்று (06.11.2024) ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.

கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 86 ஆம் ஆண்டு திருவிழாவில் இன்று (06.11.2024) காலை காப்பு கட்டுதல் நிகழ்வு!

கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 86 ஆம் ஆண்டு திருவிழாவில் இன்று (06.11.2024) காலை காப்பு கட்டுதல் நிகழ்வு தொடங்கியது. நாளை (07.11.2024) வியாழக்கிழமை அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர்…

போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (06.11.2024) புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி,…

மகா தீபத்திற்கு 11,500 பேருக்கு அனுமதி!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குள் மகா தீபத்திற்கு 11,500 பேருக்கும், பரணி தீபத்திற்கு 7,500 பேருக்கும் அனுமதி 2668 அடி உயரத்தில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண்பதற்காக 2,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் – மாவட்ட ஆட்சியர்…

முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்புவோர் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக B-pharam & D-pharam சான்று பெற்றவர்கள் விண்ணப்பிக்க அரசு அழைப்பு.

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு இன்று 46 ஆம் ஆண்டு குருபூஜை விழா!

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு இன்று (03.11.2024) 46 ஆம் ஆண்டு குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் வெளிமாவட்டங்களில் இருந்தும் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் மற்றும்…

மிருகண்டாநதி அணையில் 61.61 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைப்பு!!

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ளது மிருகண்டாநதி அணை. இந்த அணையின் முழு கொள்ளளவு 22.97 அடியாகும். தற்போது அணையில் 18.20 அடி தண்ணீர் உள்ளது. அணையில் 87 மில்லியன் கன அடிவரை தேக்கி…

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்.இன்று முதல் நான்காம் தேதி வரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழகம் தகவல்.