Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மகா தீப மலையில் தெளிக்க உள்ள புனித நீருக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை!

திருவண்ணாமலை மகா தீப மலை மீது தீபத் திருவிழா நடைபெற்று முடிந்ததை அடுத்து, இன்று மலையின் மீது தெளிக்க உள்ள புனித நீருக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு யாகத்துடன், சிறப்பு பூஜை நடைபெற்றது.

கலசபாக்கம் அடுத்த பருவதமலை கிரிவலப்பாதையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

கலசபாக்கம் அடுத்த பருவதமலை கிரிவலப்பாதையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து இன்று (14.12.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் மற்றும் எம்.எல்.ஏ திரு. பெ.சு.தி.சரவணன் தலைமையில் ஆய்வு.

ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 அதிகரிப்பு!

ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35ல் இருந்து ரூ.38ஆகவும், எருமைப்பால் விலை லிட்டருக்கு ரூ.44ல் இருந்து ரூ.47ஆகவும் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆவின்…

சபரிமலையில் இன்று (14.12.2023) அதிகாலை முதல் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

சபரிமலையில் இன்று (14.12.2023) அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று (13.12.2023) 81,600 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இன்று முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 79,996 ஆக உள்ளது.

திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதையில் மண்சரிவு காரணமாக பக்தர்கள் நடந்து செல்ல அனுமதி இல்லை!

திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதையில் மண்சரிவு காரணமாக பக்தர்கள் நடந்து செல்ல அனுமதி இல்லை. 14.12.2023 தேதி முதல் 20.12.2023 தேதி வரை கோயிலுக்கு செல்ல பக்தர்கள் படிவழியினை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என…

முகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று (14.12.2023 ) சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்!

முகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று (14.12.2023 ) சார்பதிவாளர் அலுவலகங்களில் வழக்கமாக வழங்கப்படும் 100 டோக்கன்களுக்கு பதிலாக கூடுதலாக 150 டோக்கன்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு பதிவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அரசு விரைவுப் பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்!

போகி பண்டிகைக்கு முதல் நாளான ஜனவரி 13ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் நேரிலும், டிக்கெட் முன்பதிவு மையத்திலும், www.tnstc.in மற்றும் tnstc செயலி வாயிலாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம்!

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று (13.12.2023 ) சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகின்றது.

தமிழகம் முழுவதும் இன்று அரையாண்டு தேர்வு தொடக்கம்!

தமிழகம் முழுவதும் இன்று (13.12.2023 ) 1 முதல் 12 – ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வானது நடைபெற்று வருகின்றது.

திருவண்ணாமலை தபால் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்!

திருவண்ணாமலை அஞ்சல் கோட்டத்தின் 2023 – ஆம் ஆண்டின் 4 – ஆம் காலாண்டிற்கான பொதுமக்களின் அஞ்சல்துறை சம்பந்தப்பட்ட குறைதீர்க்கும் கூட்டம் திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகிற 16 – ஆம்…

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நாளை சிறப்பு கிராம சபைக் கூட்டம்!

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நாளை (13.12.2023 ) காலை 11.00 மணியளவில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் (VPDP) 2024 – 2025…

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வார வகுப்பில் குழந்தைகள் தமக்கு தெரிந்த பயிற்சிகளை கணினி மூலம் தாமாக செய்து காண்பித்தனர்!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வார வகுப்பில் குழந்தைகள் தமக்கு தெரிந்த கணினி வகுப்பு பயிற்சிகளை தாமாக செய்து காண்பித்தனர் மற்றும் கணினி மூலம் குழந்தைகள் தாமாகவே கணினியை பயன்படுத்தி ஆங்கிலம் குறுக்கெழுத்து புதிர்களை நிரப்பி…

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் (13.12.2023) அன்று மின் நிறுத்தம்!

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட  ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய…

பக்தர்கள் வருகை அதிகரிப்பால் சபரிமலையில் தரிசன நேரம் இன்று முதல் நீட்டிப்பு!

பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் சபரிமலையில் தரிசன நேரம் இன்று முதல் 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு பதில் மதியம் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை…

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு மங்களநாயகி சமேத மங்களேஸ்வரர் ஆலயத்தில் 108 சங்கு அபிஷேகம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு மங்களநாயகி சமேத மங்களேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சிவனுக்கு 108 சங்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (10.12.2023) கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.