உத்தராயண புண்ணிய கால கொடியேற்றம்!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில், இன்று 06.01.2026 (செவ்வாய்க்கிழமை) காலை, உத்தராயண புண்ணிய காலத்தை முன்னிட்டு கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில், இன்று 06.01.2026 (செவ்வாய்க்கிழமை) காலை, உத்தராயண புண்ணிய காலத்தை முன்னிட்டு கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் இன்று (03.01.2026) சனிக்கிழமை ஆருத்ரா தரிசனம். திருக்கோயிலில் ஐந்தாம் பிரகாரம் ஆயிரம் கால் மண்டபத்தில் அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. இதில்…
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (01-01-2026) மார்கழி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள்.
கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் கோவிலில் நாளை (03.01.2026) ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம், 02.01.2026 (வெள்ளிக்கிழமை) மாலை 6:45 மணிக்கு தொடங்கி, 03.01.2026 (சனிக்கிழமை) மாலை 4:43 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி கிரிவலம் செய்யலாம்.…
கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் நாளை (30.12.2025) காலை 7.00 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கும் விழா நடைபெறுகின்றது.
கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று (19-12-2025) அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் திரளான…
திருவண்ணாமலை தீபத்திருவிழா நிறைவடைந்ததையொட்டி அண்ணாமலையார் கோயிலில் புனித நீருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயில் ஊழியர்களால் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தீப மலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்தில் பிராயச்சித்த பரிகார பூஜை நடைபெற்றது.
கலசபாக்கம் அருகில் அமைந்துள்ள பருவதமலையில் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் அற்புதமான கிரிவலம், நேற்று (16.12.2025) மார்கழி 1 (தனூர்) மாதப் பிறப்பு முன்னிட்டு நடைபெற்றது.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் பக்தர்கள்…
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (17-12-2025) மார்கழி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டத்தின் அமைந்துள்ள பர்வதமலை மார்கழி 1 (தனூர்) மாத பிறப்பு (16.12.2025) செவ்வாய்க்கிழமை உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்ள வருவார்கள். 4660…
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2025, இன்று (07.12.2025) சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் சிறப்பாக நிறைவு பெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீப விழாவில் நேற்று (06.12.2025) இரவு தெப்பல் உற்சவத்தில் முருகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உண்ணாமுலை சமேத அண்ணாமலையார் இன்று (05.12.2025) கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் மகாதீபம் கடந்த 03 – ஆம் தேதி ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து நேற்று (04.12.2025) இரவு சந்திரசேகரர் அலங்காரம் செய்யப்பட்டு அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பத்தாம் நாள் இரவு நேற்று (05.12.2025) பஞ்சமூர்த்திகள்- தங்க ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் (03.12.2025 ) மாலை 06.00 மணியளவில் மகாதீபம் ஏற்றப்பட்டது. “அரோகரா” முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான நேற்று (02.12.2025) இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் தேவஸ்தானத்தில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் கோவிலில் கொடிக்கம்ப எதிரில் தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த, 24 ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 03ம் தேதி, பஞ்ச பூதங்கள்,என்பதை விளக்கும் வகையில், அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமி கருவறை…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று (02.12.2025) காலை விநாயகர், சந்திரசேகரர் புருஷா முனி வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை மகா தீபத்திருவிழா 2025 முன்னிட்டு, அண்ணாமலையார் மகா தீபத்திற்காக பக்தர்கள் பெரிய அளவிலான கொப்பரையும் நெய்யையும் மலையில் ஏற்றும் காட்சி.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாளான இன்று (1.12.2025) காலை விநாயகர் மற்றும் சந்திர சேகர் குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஏழாம் நாள் பஞ்ச மூர்த்திகள் நாள் மகா தேரோட்டம் நடைபெற்றது. இதில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டே தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். பத்தாம்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசனம் காண annamalaiyar.hrce.tn.gov.in இணையதளத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.