Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் திருக்கல்யாண வைபவம்!

கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் நேற்று (28.10.2025) வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர்.

கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 87 ஆம் ஆண்டு திருவிழா!

கலசபாக்கத்தில் அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருவிழா நேற்று (27.10.2025) சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி திருவீதிஉலா நடைபெற்ற…

கலசபாக்கம் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் – 87ஆம் ஆண்டு விழா!

கலசபாக்கத்தில் நடைபெறும் 87ஆம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா நாளை (26.10.2025) காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. (27.10.2025) திங்கட்கிழமை திருப்புரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் இரவு சூரசம்ஹார விழா நடைபெறுகின்றது.

ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு நேற்று  47 ஆம் ஆண்டு குருபூஜை விழா!

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு நேற்று (25.10.2025) 47 ஆம் ஆண்டு குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் வெளிமாவட்டங்களில் இருந்தும் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் மற்றும் யோகிகள்,…

ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 47-ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா!!

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 47-ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா வருகின்ற ஐப்பசி மாதம் 7-ம் தேதி (24.10.2025) வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.

திருக்கார்த்திகை தீபத் திருவிழா – 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை மாதம் 08-ம் தேதி (24.11.2025) திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது. கார்த்திகை 17-ம் தேதி (03.12.2025) புதன்கிழமை அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி சனிபிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள்.

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!

புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம், 06ம் தேதி (திங்கட்கிழமை) காலை 11:49 மணிக்கு தொடங்கி, 09ம் தேதி (செவ்வாய்) காலை 09:53 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள் விழாவில் லிங்கபூஜை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு ஒத்திவைப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு நிர்வாக காரணங்களால் ஒத்திவைப்பு. டிக்கெட் வெளியீட்டுக்கான புதிய அட்டவணை அறிவிக்கப்படும் என தகவல்

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி முதல் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி முதல் நாள் விழாவில் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று பந்தக்கால் முகூர்த்தம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று (24.09.2025) காலை 6:00 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் ராஐகோபுரம் அருகில் பந்தக்கால் நடப்பட்டது. டிசம்பர் 3-ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (19-09-2025)  புரட்டாசி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள். 

டிசம்பர் மாத தரிசன டிக்கெட் இன்று வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் டிசம்பர் மாத தரிசனம், தங்குமிடம் டிக்கெட்டுகள் இன்று முதல் 20ம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். குலுக்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 22ம் தேதி மதியம்…

பந்தக்கால் முகூர்த்தம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா பணிகள், வரும் 24.09.2025 (புதன்கிழமை) காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறும் பந்தக்கால் முகூர்த்தம் மூலம் தொடங்குகின்றன. இந்த முகூர்த்தம் சம்பந்த விநாயகர் சன்னதியில் நடைபெறும்.

புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு!

21-ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும் பம்பையில் 20ம் தேதி சர்வதேச அய்யப்ப பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. 19,20 தேதிகளில் ஆன்லைன் முன்பதிவு குறைப்பு.

திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!

ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம், 07ம் தேதி (ஞாயிறு) அதிகாலை 01:41 மணிக்கு தொடங்கி, 08ம் தேதி (திங்கள்) இரவு 11:38 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி…

திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!!

ஆடி மாத பவுர்ணமி கிரிவலம், 08ம் தேதி (வெள்ளி) பிற்பகல் 02:12 மணிக்கு தொடங்கி, 09ம் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 01:24 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி கிரிவலம் செய்யலாம்.    

சபரிமலை நடை திறப்பு – ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

சபரிமலை அய்யப்பன் கோயில், ஆகஸ்ட் 17-ம் தேதி நடை திறக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பக்தர்களுக்கான ஆன்லைன் தரிசன முன்பதிவு தொடங்கியுள்ளது. மாதாந்திர பூஜைக்காக, ஆகஸ்ட் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டு 21-ம் தேதி வரை வழிபாடு நடைபெறும்.  

திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!

ஆடி மாத பவுர்ணமி கிரிவலம், 08ம் தேதி (வெள்ளி) பிற்பகல் 02:12 மணிக்கு தொடங்கி, 09ம் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 01:24 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நேற்று (28.07.2025) காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலை பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும், இரவு அருள்மிகு உண்ணாமுலையம்மன் சன்னதி முன்புறம் தீமிதி விழாவும் அதனை தொடர்ந்து திருவீதி உலாவும் நடைபெற்றது.…

ஆடி பூரம் 10ம் நாள்: சிவகங்கை தீர்த்தத்தில் அருள்மிகு பராசக்தி அம்மன் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று (28.07.2025) பராசக்தி அம்மனுக்கு சிவகங்கை தீர்த்த குளக்கரையில் மகா தீர்த்தவாரி தீப ஆராதனை நடைபெற்றது.