Web Analytics Made Easy -
StatCounter

சபரிமலை ஐயப்பன் கோவிலில் செப்டம்பர் மாதத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் செப்டம்பர் மாதத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. sabarimalaonline.org என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து பக்தர்கள் சாமியை தரிசனம் செய்யலாம்.

திருச்செந்தூர் ஆவணித் திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று (04.09.2023) தொடக்கம்!

திருச்செந்தூர் ஆவணித் திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று (04.09.2023) அரோகரா முழக்கத்துடன் தொடங்கியது. இவ்விழா 12 நாட்கள் நடைபெறும், இந்த விழாவில் தினந்தோறும் காலை, மாலை என சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி…

விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி மாற்றம் – தமிழ்நாடு அரசு தகவல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி செப்டம்பர் 17-ஆம் நாள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு செப்டம்பர் 18 – ஆம் தேதி (திங்கட்கிழமை) விடுமுறை நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி மாதம் சிறப்பு அபிஷேகம்!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி மாதம் (29.08.2023) செவ்வாய்கிழமையான நேற்று சதுர்த்தசி திதியில் சிவகாம சுந்தரி உடனுறை ஸ்ரீ நடராஜர் சுவாமி சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை…

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு 130 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருவண்ணாமலையில் ஆவணி மாத பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வேலூரில் இருந்து 50, சென்னையிலிருந்து 30, திருப்பத்தூரில் இருந்து 30, ஆற்காட்டில் இருந்து 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என வேலூர் போக்குவரத்து மண்டலம்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பௌர்ணமி முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நாளை (30.08.2023) பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு அனைத்து துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், அவர்கள்…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் திங்கட்கிழமை (28.08.2023) ஆவணி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தங்க ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் பவனி நடைபெற்றது. இதில் திரளான…

திருவண்ணாமலையில் ஆவணி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஆவணி மாதப் பெளா்ணமி கிரிவலம் புதன்கிழமை (ஆகஸ்ட்-30) காலை 10:58 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை (ஆகஸ்ட்-31) காலை 07:05 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

திருவண்ணாமலை – விழுப்புரம் சிறப்பு ரயிலானது 30ம் தேதி திருவண்ணாமலையிலிருந்து பிற்பகல் 12:40 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரத்திற்கு பிற்பகல் 02:45 மணிக்கு வந்தடையும். விழுப்புரம்-திருவண்ணாமலை சிறப்பு விரைவு ரயிலானது 30-08-23 தேதி விழுப்புரத்திலிருந்து இரவு…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாத தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும் தேதி, நேரம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்துக்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதளபாத பத்மாராதனை சேவைகளுக்கான ஆன்லைன் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. பக்தர்கள் இன்று (21.08.2023) காலை 10 மணி வரை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

கலசபாக்கத்தில் ஆடி மாத ஐந்தாம் வெள்ளியில் மாரியம்மன் திருவீதி உலா!

கலசபாக்கத்தில் ஆடி மாத ஐந்தாம் வெள்ளியை முன்னிட்டு நேற்று (18.08.2023) கலசபாக்கம் புதுப்பேட்டை மாரியம்மன் கோவில் அலங்கார திருவீதி உலா நடைபெற்றது.

சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை நடை திறப்பு!

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை நிறைப்புத்தரிசி பூஜை நடைபெற உள்ளது.

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் ஆடி மாத கிருத்திகை விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி மாத கிருத்திகை திருநாளான இன்று(09.08.2023) முருகன் பெருமானுக்கு அபிஷேக சிறப்பு ஆராதனை நடைபெற்றது.…

ஆடி அமாவாசை எப்போது? பித்ரு தோஷ பரிகாரம் செய்ய உகந்த நேரம்..

ஆகஸ்ட் 16 அன்று, ஆடி அமாவாசை வருகிறது. அன்று காலை ஸ்நானம் மற்றும் தானம் செய்வதற்கான நேரம் காலையிலேயே தொடங்குகிறது. காலை 05.51 மணி முதல் 09.08 மணி வரை நீராடி தானம் செய்யலாம்.…

ஆடி கிருத்திகையை முன்னிட்டு 133 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஆடி கிருத்திகையை முன்னிட்டு நாளை (09.08.2023) திருவண்ணாமலை, செங்கம், போளூர், ஆரணி, வந்தவாசி, சேத்துப்பட்டு மற்றும் செய்யாறு பகுதிகளில் இருந்து திருத்தணி கோயிலுக்கு 106 சிறப்பு பேருந்துகளையும் , வில்வாரணி, காஞ்சி கோயில்களுக்கு 47…

ஆடி பூரம் 10ம் நாள்: சிவகங்கை தீர்த்தத்தில் அருள்மிகு பராசக்தி அம்மன் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று (01.08.2023) பராசக்தி அம்மனுக்கு சிவகங்கை தீர்த்த குளக்கரையில் மகா தீர்த்தவாரி தீப ஆராதனை நடைபெற்றது.

திருவண்ணாமலையில் ஆடி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஆடி மாதப் பெளா்ணமி கிரிவலம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட்-1) அதிகாலை 03:25 மணிக்கு தொடங்கி புதன்கிழமை (ஆகஸ்ட்-2) அதிகாலை 01:05 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பௌர்ணமி சிறப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை!

திருவண்ணாமலை மாதம் தோறும் பௌர்ணமி நாட்களில் உள்ளூர்,வெளியூர் & வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்கிறார்கள். நேற்று(25.07.2023) மாவட்ட ஆட்சியர் திரு.முருகேசன் தலைமையில் பௌர்ணமி சிறப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.…

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ விழா!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம் கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் திருத்தேர் ஆடி பிரமோற்சவ விழா சனிக்கிழமை (22.07.2023) கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழா ஆடி மாதம் 16…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சனிக்கிழமை (22.07.2023) காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலை பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும், இரவு அருள்மிகு உண்ணாமுலையம்மன் சன்னதி முன்புறம் தீமிதி விழாவும் அதனை தொடர்ந்து திருவீதி உலாவும் நடைபெற்றது.…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடிப்பூர உற்சவம் !

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆடிப்பூர உற்சவ விழா நேற்று (22.07.2023) காலை அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆடி பிரம்மோற்சவ விழா நாளை தொடக்கம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா நாளை (ஆடி – 06) முதல் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் தொடக்கமாக நாளை காலை தங்க கொடிமரத்தில்…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி பிரம்மோற்சவ நிறைவு விழா!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா நிறைவையொட்டி நேற்று (17.07.2023) காலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவிலில் சுவாமி சன்னதியில் இருந்து அம்பாளுடன் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆனி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சனிக்கிழமை (15.07.2023) ஆனி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் ஆனி மாத கிருத்திகை விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனி மாத கிருத்திகை திருநாளான இன்று(13.07.2023) திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்…