கலசபாக்கம் அடுத்த பத்தியவாடி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை விழா நடைபெற்றது. முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு எழுது பொருள் வழங்கி மாலையிட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். விழாவில் வட்டார கல்வி அலுவலர் ஜோதி அவர்களும், தலைமையாசிரியர் சுப்பிரமணியன் அவர்களும் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி சரவணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.