கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயரத்தில் ஸ்ரீ பிரம்பராம்பிகை உடனுறை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு பௌர்ணமி நாட்களிலும் பிற நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காலை 06:00 மணி முதல் மாலை 03:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற கடலாடி போலீசார் அனுமதிக்கின்றனர். மேலும் அவர்களிடம் கட்டாயமாக வரும்போது ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், மலையின் அடிவாரத்திலிருந்து உச்சி வரை காவல்துறை சார்பில் 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்கள் கண்காணிப்படுகிறார்கள்.
Recent News:
How Often Should You Really Wash Your Hair? Experts Explain
Chennai Gold Rate Today: 22Kt Gold Price Rises by ₹30, Silver Remains Steady - May 30, 2026
Auspicious (Nalla Neram) time today (May 30th)
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!
Chennai Gold Rate Today: 22K Gold Rises ₹100, Silver Price Gains on May 29, 2026
Why Your Scalp Feels Itchy: Common Causes of Dandruff and Flaking
Auspicious (Nalla Neram) time today (May 29th)

