Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (28-05-2026)  வைகாசி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள்.

வைகாசி மாத கிரிவல நேரம்!

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல 30.05.2026 பிற்பகல் 12:50 மணி முதல் மறுநாள் 31.05.2026 பிற்பகல் 02:41 மணி வரை உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 தாசில்தார்கள் இடமாற்றம் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தண்டராம்பட்டு தாசில்தாராக பணியாற்றி வந்த ஆ. தேன்மொழி கலசபாக்கம் தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். கலசபாக்கம் தாசில்தார் கே. துரைராஜ் கீழ்பென்னாத்தூருக்கும், கீழ்பென்னாத்தூர் தாசில்தார் வி. ராஜேந்திரன்…

கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.26% தேர்ச்சி!

கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.26% தேர்ச்சி பெற்றுள்ளது.122 மாணவர்களில் 115 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் பேரரசு – 472, ஜெகதீஷ் – 451, கார்த்திகேயன் –…

கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.2% தேர்ச்சி!

கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.2% தேர்ச்சி பெற்றுள்ளது. 118 மாணவிகளில் 110பேர் தேர்ச்சி பெற்றனர். P.கார்த்திகா 488 மதிப்பெண்களுடன் முதல் இடம், P.காவியா 483 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம்,…

கலசபாக்கம் அருகே கிடாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி!

கலசபாக்கம் அருகே கிடாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. 54 மாணவர்கள் தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றனர். சபரிகிரி – 480, சந்தோஷ் – 478, செந்தமிழ்ச்செல்வன்…

பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in என்ற தளங்களில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.

12 நாள் சிறப்பு கோடை பயிற்சி வகுப்பு தொடக்கம்!

வேதாத்திரி மகரிஷி அறிவொளி அறிவகம் சார்பில் 5 முதல் 18 வயது குழந்தைகளுக்கான 12 நாள் சிறப்பு கோடை பயிற்சி வகுப்பு மே 17 முதல் மே 28 வரை நடைபெறுகிறது. யோகா, தியானம்,…

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை (16.05.2026) மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (16.05.2026) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 02:00 மணிவரை மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்படும். மின் வினியோகம்…

ஆன்லைன் மூலம் நீட் தேர்வு!!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் நடைபெறும். OMR முறையைவிட கணினி வழித்தேர்வு முறை ஒப்பீட்டளவில் சிறந்தது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி

திருப்பதியில் குவியும் பக்தர்கள்..!

கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இலவச தரிசன வரிசையில் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நம்பிக்கை தீர்மானத்தில் முதல்வர் விஜய் வெற்றி!

அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் முதல்வர் விஜய் பெரும்பான்மையை நிரூபித்தார். நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவானது. மேலும், 5 உறுப்பினர்கள் நடுநிலையாக இருந்தனர்.

வைகாசி பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

வைகாசி மாத சிறப்பு பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. மே 19-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. அதன்பின் அன்று இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.  

தங்கத்தின் சுங்க வரி உயர்வு!

தங்கம், வெள்ளி பொருட்கள் மீதான சுங்க வரி 15% உயர்ந்துள்ளது புதிய வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் வேலைவாய்ப்பு உதவித்தொகை விண்ணப்பம் தொடக்கம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மாதாந்திர உதவித்தொகை பெற மே 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்கலாம். அல்லது, தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறையின் www.tnvelaivaippu.gov.in என்ற…

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு!

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் தற்காலிக மதிப்பெண் பட்டியலை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

விபி ஜி ராம் ஜி திட்டம்!!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு பதிலாக விபி ஜி ராம் ஜி திட்டம் ஜூலை- 1 முதல் அமல். 100 நாள் வேலை திட்டம் 125 நாட்களாக உயர்வு என…

கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 98% தேர்ச்சி!

கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 98% தேர்ச்சி பெற்றுள்ளது. 148 மாணவிகளில் 145 பேர் தேர்ச்சி பெற்றனர். ச. தமிழரசி 562 மதிப்பெண்களுடன் முதல் இடம், அ. லோகேஸ்வரி 544…

கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு தேர்வில் 91.2% தேர்ச்சி!

கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் சிறப்பான தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 147 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 134 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 91.2 சதவீத தேர்ச்சி…

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி அறிவிப்பு!

பிளஸ் 2 மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 13ஆம் தேதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் தங்களது பள்ளிகள் மூலம் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.        

12-ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் 92.87% தேர்ச்சி!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 11,583 பேரும், மாணவிகள் 13,280 பேரும், மொத்தமாக 24,863 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 92.87% பெற்று 32 வது இடத்தை பெற்றுள்ளது.  

பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம்!

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 95.20% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.1% மற்றும் மாணவிகள் 97% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in என்ற இணையதளங்களில் பார்த்துக்கொள்ளலாம். மேலும், தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு 1441 என்ற உதவி எண்ணை அழைக்கலாம்.

வணிகர் தினம் 2026

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் வணிகர்களை கௌரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே 5ஆம் தேதி வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை முன்னிட்டு, மாநிலத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களித்து வரும் அனைத்து…