Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் வெள்ளப்பெருக்கு!

கலசபாக்கம் பகுதியில் இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக செய்யாற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே பொதுமக்கள் யாரும் ஆற்றைக் கடக்க, குளிக்கவோ, குழந்தைகளை அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.

கிராம சபை கூட்டம்!

கலசபாக்கம் ஊராட்சியில் ஆக் 11.10 2025 (சனிக்கிழமை) காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் “காந்தி ஜெயந்தி தின” கிராம சபை கூட்டம் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளவும். இடம் : கிராம…

உலக தபால் தினம்!

1874-ம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் உலக தபால் அமைப்பு தொடங்கப்பட்டது. உலக தபால் அமைப்பை நினைவுபடுத்தும் விதமாக 1969 அக்டோபர் 9-ம் தேதி உலக தபால் தினம் அறிவிக்கப்பட்டது. இந்தத் துறையின் சேவைகளைப்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம்!

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் அக்டோபர் 10, 2025 அன்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. வேலையிழந்த இளைஞர்கள் தங்களின் கல்வித்…

PIN தேவையில்லை.. கைரேகை போதும்!

UPI பரிவர்த்தனை செய்வதற்கு PIN நம்பருக்குப் பதிலாக, Finger Print அல்லது முக அங்கீகாரம் முறையில் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் இந்த முறை மூலம் பயனர்களின் பரிவர்த்தனைகள் வேகமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் எனத்…

அக்டோபர் 11 -ல் இலக்கிய திறனறி தேர்வு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த தேர்வில் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். காலை 10 மணிக்கு தொடங்கி 12 மணி வரை நடைபெறும் தேர்வை கண்காணிக்க 560 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதம் ரூ.500…

இந்தியாவில் டிஜிட்டல் நாணயங்கள்!

ரிசர்வ் வங்கியின் நேரடி கண்காணிப்பில் இந்தியாவில் விரைவில் டிஜிட்டல் நாணயங்கள் புழக்கத்தில் விடப்படும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

மின்கம்பியாள் உதவியாளர் தேர்வு அறிவிப்பு!

தமிழக திறன் பயிற்சி துறை சார்பில் மின்கம்பியாள் உதவியாளர் (Wireman Helper Competency Examination) திறனறி தேர்வு டிசம்பர் 13 மற்றும் 14, 2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. தகுதி: விண்ணப்பதாரர் மின் ஒயரிங் தொழிலில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம்…

18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, திண்டுக்கல், கோயம்புத்தூர்  ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான…

இன்று இரவு வானில் சூப்பர் மூன்!

இந்தாண்டின் முதல் சூப்பர் மூன் இன்று இரவு வானில் தென்படவுள்ளது. இந்த பௌர்ணமியின்போது சந்திரன் வழக்கத்தை விட 14% பெரியதாகவும், 30% பிரகாசமாகவும் தெரியும். நேற்று வானில் தென்பட்ட நிலையில், இன்றும் அதனை காணலாம்.…

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் (08.10.2025) நாளை மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் (08.10.2025) புதன்கிழமை அன்று காலை…

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று (அக்டோபர் 6, 2025) திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.    

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி சனிபிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள்.

கலசபாக்கத்தில் நேற்று இரவு பெய்த மழையின் அளவு!

கலசபாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழையின் அளவு 74.2 மில்லி மீட்டராக ஆக பதிவு ஆகியுள்ளது.

காசோலை டிபாசிட் – உடனடி பணம் வரவு நடைமுறை!

வங்கியில் காசோலை டிபாசிட் செய்த சில மணி நேரத்தில், உரியவரின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதற்கான புதிய நடைமுறை, அக்டோபர் 4-ம் தேதி (இன்று) முதல் அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்!

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு முன்பதிவில்லா மெமு ரயில் இயக்கம்: தேதி ரயில் எண் புறப்படும் நேரம் சென்றடையும் நேரம் இடைநிலையங்கள் அக்.6 06130 விழுப்புரம் — காலை 10:10 திருவண்ணாமலை — காலை…

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!

புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம், 06ம் தேதி (திங்கட்கிழமை) காலை 11:49 மணிக்கு தொடங்கி, 09ம் தேதி (செவ்வாய்) காலை 09:53 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி…

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம செயலாளர்கள் பணியிட மாற்றம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் 860 ஊராட்சிகளில் கிராம செயலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வந்த 400-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்களை வட்டாரத்துக்குள் பணியிட…

திருவண்ணாமலை திரிசூல பர்வதமலை ஆய்வு நூல்!

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு மையம் புத்தகம்: திரிசூல பர்வதமலை தமிழ்நாட்டின் சிறந்த மலையேற்றத் தலங்களில் ஒன்றாகவும், ஜவ்வாதுமலைத் தொடரின் பகுதியாகவும் உயர்ந்து நிற்கும் அழகிய பர்வதமலையின் வரலாறு, தொல்லியல், கல்வெட்டுகள், சுற்றுச்சூழல், ஆன்மிகம்…

B.Ed மற்றும் M.Ed படிப்புகள் – விண்ணப்பிக்க கடைசி நாள்!

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் B.Ed மற்றும் M.Ed படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். B.Ed, M.Ed படிப்புகளுக்கு காலியாக உள்ள 579 இடங்களுக்கு www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.  

சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்ற வேளாண் வணிகத் திருவிழா 2025 – 1.57 லட்சம் பேர் பங்கேற்பு!

சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்ற வேளாண் வணிகத் திருவிழா 2025-ல் 1.57 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.வேளாண் வணிகத் திருவிழா 2025 செப்டம்பர் 27–28ஆம் தேதி நந்தம்பாக்கம், சென்னை டிரேட் சென்டர் இல் நடைபெற்றது,…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள் விழாவில் லிங்கபூஜை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு – ஹால் டிக்கெட் வெளியீடு!

தமிழகத்தில் வரும் 11-ம் தேதி நடக்கும் தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வுக்கான ஹால் டிக்கெட் தேர்வு மையம் வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியீடு.  

பத்திரப்பதிவுத் துறை சேவை முடக்கம்!

தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவுத் துறையின் இணையதள சேவை முடங்கியது. பத்திரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதி.  

SI தேர்வு தேதி அறிவிப்பு!

ஒத்திவைக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் (SI) தேர்வு டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. முன்னதாக ஜூன் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த எஸ்.ஐ. தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.    

தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு!!

வருமான வரி தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை, அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவுவிட்டுள்ளது.    

மொழிபெயர்ப்பு வசதி விரைவில் அறிமுகம்!!

Facebook-இல் இருக்கும் மொழிபெயர்ப்பு வசதியை விரைவில் WhatsApp-லும் அறிமுகப்படுத்த இருப்பதாக மெட்டா அறிவித்துள்ளது. Long Press செய்வதன் மூலம் மெசேஜுகளை மொழிபெயர்க்க முடியும். விரும்பும் மொழியை பதிவிறக்கம் செய்தால், ஆஃப்லைனிலும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த புதிய வசதி விரைவில் பயன்பாட்டுக்கு…

திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு ஒத்திவைப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு நிர்வாக காரணங்களால் ஒத்திவைப்பு. டிக்கெட் வெளியீட்டுக்கான புதிய அட்டவணை அறிவிக்கப்படும் என தகவல்

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி முதல் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி முதல் நாள் விழாவில் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று பந்தக்கால் முகூர்த்தம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று (24.09.2025) காலை 6:00 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் ராஐகோபுரம் அருகில் பந்தக்கால் நடப்பட்டது. டிசம்பர் 3-ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை…

H1B விசா கட்டணம் – டாக்டர்களுக்கு விலக்கு!!

அமெரிக்காவில் H1B விசா கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டது இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மருத்துவ ஊழியர்களுக்கு மட்டும் விலக்கு என அறிவித்துள்ளது.    

புதிய நடைமுறை அமல்!

வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் பிப் கணக்கில் ஆண்டுக்கு 6 முறை பணம் எடுக்கும் புதிய நடைமுறை அமலானது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.    

திருவண்ணாமலை – காட்பாடி ரயில் சேவையில் மாற்றம்!

செப்டம்பர் 26 அன்று, கன்னியாகுமரி – ஐதராபாத் ரயில் மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் நிலையங்களை தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி வழியாக இயங்கும். நிலையங்கள்: அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை நிறுத்தப்படும்.

ஜிஎஸ்டி 2.0 – அமலுக்கு வந்தது!

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் இன்று முதல் அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி 12, 28 சதவீத வரி அடுக்குகள் நீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி குறைப்பு நடைமுறைக்கு வந்தது.

ஆவின் பால்பொருட்கள் விலை குறைப்பு!

ஆவின் நிறுவனம் தனது பால்பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பைத் தொடர்ந்து பன்னீர், நெய் போன்ற பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலை குறைப்பு இன்று (22.09.2025) முதல் அமலில் வருகிறது என நிர்வாகம் அறிவித்துள்ளது.    

கலசபாக்கத்தில் நேற்று 47.06 மில்லி மீட்டர் அளவு மழை பதிவு!

கலசபாக்கத்தில் நேற்று (21.09.2025) பெய்த மழையின் அளவு 47.06 மில்லி மீட்டராக பதிவு.