Web Analytics Made Easy -
StatCounter

இயற்கை ஆரோக்கிய உணவுப் பொருட்கள் விரும்புகிறீர்களா? பூங்குயலி Food Products இப்போது உங்கள் வீட்டிற்கு டெலிவரி!

வேலூர், ஓசூர், பெங்களூர், திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் “பூங்குயலி Food Products”, இயற்கை மற்றும் பாரம்பரிய உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. • இங்கு கிடைக்கும் முக்கியமான…

10, பிளஸ் 1 துணைத் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இன்று முதல் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு!

10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் நாளை (மே 23) முதல் 10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்…

குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க மே 24 கடைசி!!

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 24-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

யுபிஎஸ்சி தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் சாதனை!

மத்திய அரசின் இந்திய வனப்பணியில் (IFS) தமிழ்நாட்டிலேயே முதலிடம் பிடித்து, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்த மு.வெ. நிலாபாரதி சிறப்பாக தேர்வாகியுள்ளார். அவரது சகோதரி மு.வெ. கவின்மொழி சமீபத்தில் இந்திய காவல் பணியில் (IPS)…

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம்!

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் திரு. சுபாஷ் சந்தர் தலைமையில், தமிழில் பெயர் பலகை வைப்பது சம்மந்தமாக அனைத்து வியாபாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. உடன் வட்டார…

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான போர்ட்டல் திறப்பதில் சிக்கல்!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான போர்ட்டல் திறக்கப்படாததால் லட்சக்கணக்கானோர் அவதி. வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் பல மாற்றங்கள் செய்யப்படுவதால் போர்ட்டல் திறப்பதில் சிக்கல் என தகவல்.

அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை விஐடி வளாகம், வேலூர் – பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்!!

வேலூர்: பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை வழங்குகிறது.  முக்கிய விவரங்கள்: – தகுதி: வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட மாணவர்கள் – விண்ணப்ப காலம்: 21.05.2025 முதல் 30.05.2025 வரை – நேரம்: காலை 10:00 மணி…

3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.    

புதிதாக உருவாகிறது ‘சக்தி’ புயல்!!

மத்திய கிழக்கு அரபிக் கடல், கர்நாடகா கடலோர பகுதிகளில் மே 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மே 25/26-ல் புயலாக வலுப்பெறும். இதற்கு ‘சக்தி’ என்று பெயரிடப்பட உள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளாவில் மே 24ம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு. –…

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை (20.05.2025) கடலாடி உள்வட்டம் கிராமங்கள் ஜமாபந்தி!

கடலாடி 1, கடலாடி 2, கீழ்பாலூர், மேல்பாலூர், மட்டவெட்டு தென்மாதிமங்கலம், அருணகிரிமங்கலம்,பாணாம்பட்டு, எர்ணாமங்கலம், எலத்தூர்,சோழவரம், மேல்வில்வராயநல்லூர், கச்சேரி மங்கலம், மேலாரணி, சேங்கபுத்தேரி ஆகிய கிராமப் பகுதிகள் நாளை (20.05.2025) நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் இயல்பைவிட 90% அதிக மழை!

தமிழகத்தில் மார்ச் 1 முதல் இன்று வரை இயல்பைவிட 90% அதிக மழை பெய்துள்ளது. மார்ச் 1 முதல் தற்போதுவரை இயல்பாக பெய்ய வேண்டிய மழையின் அளவு 10 செ.மீ ஆனால், 19.2 செ.மீ.…

கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் விரைவில் திறப்பு!

கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படும். ரயில்வே நடைமேடை அமைக்கும் | பணிகள் 80% நிறைவு பெற்றது; ரயில் நிலையத்திற்கான முகப்பு கட்டமைப்பு, பயணிகள் நிழற்குடை, கழிவறை உள்ளிட்டவை…

இன்றும், நாளையும் கனமழை தொடரும்!!

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை தொடரும்.பல்வேறு இடங்களில் 50 கி.மீ. வேகத்தில் காற்று, இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.அரபிக்கடலில் நாளை மறுநாள் உருவாகிறது மேலடுக்கு சுழற்சி மேலடுக்கு சுழற்சி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் – இந்திய வானிலை ஆய்வு…

11ம் வகுப்பு தேர்வில் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை – 96% தேர்ச்சி!

2025ஆம் ஆண்டு 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 96% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. மொத்தம் 147 மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 141 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1.…

காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (17.05.2025) மின் நிறுத்தம்!

காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர், கீழ்பாலூர், வில்வாரணி, தாமரைப்பாக்கம்,…

கலசபாக்கம் அடுத்த பர்வதமலை ஏற புதிய கட்டுப்பாடுகள்!

கலசபாக்கம் அடுத்த பர்வதமலை ஏற புதிய கட்டுப்பாடுகள் சுமார் 4,560 அடி உயரமுள்ள பர்வதமலை மீது பாதுகாப்பு நலன் கருதி 10 வயதுக் குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் மலை…

திருவண்ணாமலை மாவட்டம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 21 வது இடம்!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 92.10% தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் 21 வது இடத்தை பெற்றுள்ளனர்.    

திருவண்ணாமலை மாவட்டம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 21 வது இடம்!!

11ம் வகுப்பு தேர்வெழுதிய 4,03,949 மாணவியரும், 3,39,283 மாணவர்களும் தேர்ச்சி.மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக 6.43% தேர்ச்சி பெற்றுள்ளனர் .    

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கலசபாக்கம், உள்வட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி!

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (16.05.2025) கலசபாக்கம் உள்வட்டம் முதல் நாள் வருவாய் தீர்வாயம் பசலி எண் 1434-ற்கான ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர்களிடம் பொதுமக்கள்…

10ம் வகுப்பு தேர்வில் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை – 98.3% தேர்ச்சி

2025ஆம் ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 98.3% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. மொத்தம் 119 மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 117 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். R.…

10ம் வகுப்பு தேர்வில் கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை – 89% தேர்ச்சி!

 2025 ஆம் ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 89% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது.மொத்தம் 123 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 109 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.…

வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (17.05.2025) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் இன்று (17.05.2025 ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம்,…

10ம் வகுப்பு தேர்வில் மேலாரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை – 90% தேர்ச்சி

கலசபாக்கம் அடுத்த மேலாரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 90% பெற்று சாதனை மொத்தம் 69 பேரில் 62 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

10ம் வகுப்பு தேர்வில் கிடாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை – 100% தேர்ச்சி!

2025ஆம் ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கிடாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. மொத்தம் 49 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 49 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 400க்கு மேல்…

காமர்ஸ் மாணவரும், டிப்ளமோ சேரலாம்!!

பன்னிரெண்டாம் வகுப்பில் வணிகவியல், வரலாறு பாடங்கள் உள்ளிட்ட எந்தப் பாடப் பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றிருந்தாலும் வரும் கல்வி ஆண்டு (2025-2026) முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து பயில அனுமதி.    

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு. 2,006 காலிபணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப் 2 முதன்மை தேர்வை 7,967 பேர் எழுதினர்.    

ROTARY MEANS BUSINESS FELLOWSHIP (RMBF) திருவண்ணாமலை கிளை தொடக்க கூட்டம் – இன்று நடைபெறுகிறது!

அன்புள்ள வணிக நண்பர்களும் தொழில்முனைவோரும், உங்கள் வணிக வளர்ச்சிக்கும் தொழில் முன்னேற்றத்திற்கும் உதவியாக இருக்கக்கூடிய அரிய வாய்ப்பு! ROTARY MEANS BUSINESS FELLOWSHIP (RMBF) திருவண்ணாமலை கிளையின் தொடக்க கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. • தேதி: 15-05-2025…

10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் மே 16ல் வெளியாகுகிறது!!

10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம் முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது.தமிழகத்தில் மே 19ம் தேதிக்கு பதிலாக, முன் கூட்டியே, மே 16ம் தேதி காலை 09:00 மணிக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு…

UPSC-க்கு புதிய தலைவர் நியமனம்!!

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அஜய்குமார் நியமனம். 2027ம் ஆண்டு வரை பதவியில் நீடிப்பார் என அறிவிப்பு.    

6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!!

திருவண்ணாமலை, நாகை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி ஆகிய இடங்களில் 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.    

சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!!

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 19 -ம் தேதி வரை, 5 நாட்கள் இரவு 10:30 மணி வரை கோயில் நடை பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.    

கலசபாக்கத்தின் காயத்ரி தேவி புனே நகரத்தில் +2 தேர்வில் முதல் இடம்! – Kalasapakkam’s Pride: Gayathri Devi Jayachandran Tops Pune City in CBSE Plus Two Exams!

காயத்ரி தேவி ஜெயச்சந்திரன், கலசபாக்கத்தைச் சேர்ந்தவர். தற்போது புனேயில் உள்ள The Orbis School பள்ளியில் கல்வி பயின்று வரும் இவர், 2025 ஆம் ஆண்டின் CBSE பிளஸ் டூ (தொடக்க நிலை உயர்நிலைத்…

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி – அட்டவணை!

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகம் கீழ்காணும் அட்டவணைப்படி ஜமாபந்தி (நில வரி சரிபார்ப்பு மற்றும் உரிமை சரிபார்ப்பு நிகழ்வு) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   • கலசபாக்கம் உள்ளாட்சி – 16.05.2025 (வெள்ளிக்கிழமை) • கடலாடி…

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 10

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (12.05.2025) பத்தாம் நாள் இரவு பஞ்சமூர்த்திகளான விநாயகர் மூஷிக வாகனத்திலும், முருகர் இந்திர விமானத்திலும், பெரிய நாயக்கர் ரிஷப வாகனத்திலும், அம்மன்…

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு!

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். cbseresults.nic.in, results.cbse.nic.in, cbse.gov.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளை அறியலாம்.  

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மே 14-ம் தேதி தரிசனத்திற்காக திறக்கப்படும்!!

மே 19-ம் தேதி வரை பக்தர்களின் தரிசனத்திற்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு இருக்கும். 19-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு.    

பி.எம் கிசான் திட்டம் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்!!

பிரதம மந்திரியின் கவுரவநிதி (பி.எம் கிசான்) திட்டத்தின் கீழ் தகுதி உடைய அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒருங்கிணைந்த வேளாண்மை மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் வருகிற 31-ம் தேதி…

கலசபாக்கம் ஸ்ரீ திருமாமுடீஸ்வர திருக்கோவிலில் பிரம்மோற்சவ தீர்த்தவாரி!

கலசபாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் தேவஸ்தானத்தில் நடைபெற்று வருகின்ற சித்திரை பிரம்மோற்சவ விழாவில் பத்தாம் நாளான இன்று சந்திரசேகர் பெரிய மாட வீதி உலா நடைபெற்றது. பின் சித்ரா பௌர்ணமி…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்!

சித்ரா பௌர்ணமி நேற்று இரவு தொடங்கிய நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்.

எல் ஐ சி யில் WHATSAPP மூலம் பிரீமியம் செலுத்தும் முறை அறிமுகம்!!

எல்ஐசி, வாட்ஸ்அப் மூலம் பிரிமியம் செலுத்தும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. பதிவு செய்த வாடிக்கையாளர்கள் 89768 62090 என்ற எண்ணை பயன்படுத்தி, பணம் செலுத்த வேண்டிய பாலிசிகளை அறிந்து, UPI அல்லது கார்டுகள் மூலம் நேரடியாக செலுத்தலாம்.    

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு போளூர் பேருந்து நிலையத்தில் மக்கள் அலைமோதும் கூட்டம்!

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு திருவண்ணாமலையில் இருந்து போளூர் வருகின்ற பேருந்துகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகின்றது.

சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்கள் பெரும் கூட்டம்!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று அதிகாலை முதலே அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் குவிய தொடங்கிவிட்டார்கள். பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்து, கிரிவலமும் மேற்கொண்டனர். சித்ரா பவுர்ணமி இன்று இரவு 10.48 மணி வரையில் உள்ளதால் பக்தர்கள் தொடர்ந்து…

சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்!!

தமிழகத்தில் உள்ள சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டுகள் பி.ஏ., எல்.எல்.பி., படிப்பில் சேர விண்ணப்ப பதிவு தொடக்கம்; TNDALU.AC.IN என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.    

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 8

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (10.05.2025) எட்டாம் நாள் சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி மாட வீதி உலா நடைபெற்றது. 

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – DAY 10

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள மூன்றாம் பிராகாரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க வலம் வந்து தங்க கொடி மரம் அருகே உள்ள சபா மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார்.மன்மத தகன நிகழ்ச்சிக்காக 20 அடி உயரம்…

திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்ரா பவுர்ணமி நாளை, மே 11 ஆம் தேதி இரவு 08.47 முதல் மே 12ஆம் தேதி இரவு 10.43 வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில்…

பிளஸ்2 துணைத்தேர்வுக்கு வரும் 14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவ மாணவியர், வராதவர்கள், பிளஸ் 1 வகுப்பில் நிலுவைப் பாடங்கள் வைத்திருப்பவர்கள் என தனித் தேர்வர்கள் 14ம் தேதி முதல் துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று…

திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி முன்னிட்டு 73 இடங்களில் கார் பார்க்கிங் வசதி!

பக்தர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு செல்போன் வாயிலாக தற்காலிக பஸ் ஸ்டாண்டுகள், கார் பார்க்கிங் இடங்களை அறிந்து கொள்ள வசதியாக மாவட்ட போலீஸ் துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள 93636 22330 எனும் whatsapp ஹெல்ப்லைன் எண்ணுக்கு “ஹலோ” என மெசேஜ் அனுப்பினால்…

திருவண்ணாமலை சித்திரை வசந்த உற்சவம் – தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை வசந்த உற்சவத்தின் போது, இன்று (10-ம் தேதி) காலை அய்யங்குளம் குளக்கரை மண்டபத்தில் உற்சவர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் எழுந்தருளி தீர்த்தவாரி விமர்சையாக நடைபெற்றது. 

கலசபாக்கம் செய்யாற்றில் மீண்டும் வெள்ளம்!

கலசபாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக பெய்த மழையால், மேலும் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால், செய்யாற்று நீர் செல்கின்றது.

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி இன்று (09.05.2025) ஏழாம் நாள் தேரோட்டம்!

கலசபாக்கம் சித்திரை விழா – 2025 கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி சித்திரை விழாவை முன்னிட்டு இன்று (09.05.2025) ஏழாம் நாள் தேரோட்டம் நடைபெற்று வருகின்றது.

24 மணிநேரமும் கடைககளை திறக்க அனுமதி நீட்டிப்பு!

அனைத்து நாட்களும் 24 மணிநேரமும் கடைகள், நிறுவனங்களை திறந்திருக்க அனுமதி நீட்டித்து அரசாரணை வெளியீடு 10க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இயங்கும் கடைகள் 24 மணிநேரமும் செயல்படலாம். ஜூன் 4-ம் தேதியுடன் அனுமதி முடிவடையும் நிலையில்,…

வேளாண் படிப்புகளுக்கு ஜூன் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் அறிவிப்பு!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை tnau.ucanapply.com என்ற இணையதள முகவரியில் இன்று முதல் 8.06.2025 வரை இணையதளத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.  

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 8

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் (08.05.2025) வியாழக்கிழமை எட்டாம் நாள் உற்சவத்தில் ஒளிவு வைபவம் வான வேடிக்கைகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாமில் திருவண்ணாமலை ரோட்டரி கிளப் RID 3231 இன் ரோட்டரி மாவட்டத் தலைவர் சுகாதார சேவை டாக்டர் கே. சாய் பிரசன்னா சம்பத்குமார் உரை!!

திருவண்ணாமலை ரோட்டரி கிளப் RID 3231 ஐச் சேர்ந்த ரோட்டரி மாவட்டத் தலைவர் (சுகாதார சேவைகள்) டாக்டர் கே. சாய் பிரசன்னா சம்பத்குமார் மேமோகிராமில் நடைபெற்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாமில் தலைமை விருந்தினராக…

கலசபாக்கம் பகுதியில் மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணை மின் நிலையம் சார்ந்த பகுதிகள் மற்றும் கலசபாக்கம் பகுதியில், அத்தியாவசிய பணிகள் நடைபெற்று வருவதால், இன்று 2 மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி இன்று திருத்தேர்!

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் ஏழாம் நாளான இன்று (09.05.2025) மாலை நடைபெறும் திருத்தேர் வீதி உலாவிற்க்கு தயார் நிலையில் உள்ள திருத்தேர்.

ஜூன் 25-ல் துணை தேர்வு!!

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 25.6.2025 முதல் துணை தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.    

கலசபாக்கம் அடுத்த மேலாரணி அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 தேர்வில் 95.52% பெற்று சாதனை!

கலசபாக்கம் அடுத்த மேலாரணி அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 தேர்வில் 95.52% பெற்று சாதனை. மொத்தம் 67 பேரில் 64 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 27 வரை விண்ணப்பிக்கலாம்!!

தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாட பிரிவுகளில் உள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 345 இடங்களில் சேருவதற்கு www.tngasa.in என்ற இணையதளத்தில் மே 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.    

கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நாளை பரதநாட்டிய நிகழ்ச்சி!

கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நாளை (09.05.2025) சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாட்டியம் ஆடுபவர்கள்: R. ஸ்ரீ சாம்பவி S. ஸ்ரீ செண்பா K. பிரகதி இடம்: கலசபாக்கம் சிவன்…

சித்ரா பௌர்ணமி முன்னேற்பாடுகள்!

• பக்தர்கள் மற்றும் கோயில் பணியாளர்களுக்கு என 80 நபர்களுக்கு விபத்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது. • கோயில் மூலம் இலவச மற்றும் சிறப்பு தரிசன வழித்தடங்களில் 114 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு சுத்திகரிப்பு…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் ஏழாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (07.05.2025) புதன் கிழமை ஏழாம் நாள் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

அண்ணாமலையார் கோவில் உண்டியல் வருவாய் ரூ.4 கோடி!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பௌர்ணமி உண்டியல் 2 நாட்களாக எண்ணப்பட்டது. இதில், ரொக்கமாக ரூ.4,00,23,757, தங்கமாக 165 கிராமும், வெள்ளியாக 2740 கிராமும் வருவாயாக கிடைத்துள்ளது.    

பிளஸ் 2 தேர்வில் கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை – 95.15% தேர்ச்சி!

2025ஆம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் கலசப்பாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 95.15% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்: 1ம் இடம்: வீ. சீனிவாசன் – 550…

பிளஸ் 2 தேர்வில் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சாதனை – 98.05% தேர்ச்சி!

2025 பிளஸ் 2 பொதுத் தேர்வில், கலசப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்ச்சி சதவீதம் 98.05% மொத்தம் 114 மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 112 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற…