Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் திருமாமுடிஸ்வரர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சனம்!

ஆனித் திருமஞ்சனம் முன்னிட்டு கலசபாக்கம் திருமாமுடிஸ்வரர் ஆலயத்தில் இன்று (02.07.2025) நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் விதி உலா நடைபெற்றது.

திருவண்ணாமலை கோவிலில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன சிறப்பு அபிஷேகம்!!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆனி திருமஞ்சனம் (02.07.2025) இன்று காலை அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை அருள்மிகு நடராஜர் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள 1000 கால் மண்டபத்தில் அதிகாலை சிறப்பு அபிஷேகம் அலங்காரம்…

கலசபாக்கம் புதிய கிராம நிர்வாக அலுவலர் செல்வி கிருத்திகா!!

கலசபாக்கம் கிராம நிர்வாக அலுவலராக செல்வி.கிருத்திகா (VAO – Village Administrative Officer) நியமிக்கப்பட்டுள்ளார். நியமனத்திற்குப் பிறகு, அவர் அதிகாரப்பூர்வமாக தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு பணிகளில் செயல்பட தொடங்கியுள்ளார்.கலசபாக்கம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை ஆனி திருமஞ்சனம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி மாதத் திருவிழா விழாவையொட்டி, நாளை (2-ம் தேதி) காலை சிவகாமி சமேத நடராஜருக்கு ஆயிரம்கால் மண்டபத்தில் திருமஞ்சன அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும்.  

கலசபாக்கம் கிராம நிர்வாக அலுவலர் இடமாற்றம்!

கலசபாக்கம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த திரு. M. இனியன் அவர்கள், தற்போது காந்தபாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு!

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.57.50 குறைந்து ரூ.1,823.50க்கு விற்பனை. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.868.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

தொழில் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கு மின்கட்டணம் உயர்வு!!

தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள், ஆலைகள், ஐடி, நிறுவனங்களுக்கான மின்கட்டணம் இன்று முதல் ஒரு கிலோ வாட் ரூ.7.25லிருந்து ரூ.7.50 ஆக உயர்ந்துள்ளது.

ஆதார் இல்லையா?… டிக்கெட் இல்லை!

நாளை (ஜூலை 01) முதல் ஆதார் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகளில் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நமது கலசபாக்கத்தில் ஒரு புதிய தொடக்கம்!!

ஸ்ரீ வேலு எலக்ட்ரிக்கல்ஸ் & பிர்லா பெயிண்ட்ஸ்.. இனிமேல் உங்கள் வீட்டு அலங்காரத்திற்கு தேவையான அனைத்து வகையான எலக்ட்ரிக்கல் பொருட்கள் மற்றும் வண்ணங்களான பெயிண்ட்கள் ஒரே இடத்தில் கிடைக்கும்! முகவரி : மேல்தெரு, கலசபாக்கம்…

வாட்டர் பெல்!

காலை 11 மணி, மதியம் 1 மணி, பிற்பகல் 3 மணிக்கு வாட்டர் பெல் அடித்து தண்ணீர் குடிக்க வைக்க அரசு பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

11ம் வகுப்பு மறு மதிப்பீட்டு முடிவுகள் ஜூன் 30ல் வெளியீடு!

11ம் வகுப்பு விடைத்தாள் மறு மதிப்பீடு முடிவுகள் வரும் 30-ம் தேதி வெளியீடு. விண்ணப்பித்தோர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை பெறலாம்.  

சிறப்பு கிராம சபை கூட்டம்!

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியம் சார்பில், இத்தணிக்கை குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று (27.06.2025) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு திரௌபதி அம்மன் கோவில் அருகில் நடைபெறுகிறது.

அனுமதி இல்லா மனைவசதிக்கு ஜூலை 1 முதல் ஆன்லைன் பதிவு ஆரம்பம்!!

அனுமதி அற்ற மனை பிரிவுகளில் தனி மனைகளை வரன்முறைப்படுத்த ஜூலை 1 முதல் www.tcponline.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மலையிடப் பகுதிகளுக்கான விண்ணப்பங்களும் அதேதளத்தில் 01.07.2025 முதல் 30.11.2025 வரை பதிவு செய்யலாம்.    

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா!!

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், வல்லக்கோட்டை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா ஆனி 23ஆம் நாள் – 07.07 2025 – திங்கள்கிழமை, காலை 9.00-10.30 மணிக்குள் நடைபெறவுள்ளது.

காரப்பட்டு பகுதிகளில் நாளை (26.06.2025 ) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அருகே காரப்பட்டு துணைமின் நிலையத்தில் 26.06.2025 வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சில பகுதிகளில் மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படும். (மாற்றத்துக்கு உட்பட்டது)…

வேலூரில் உயர் சிறப்பு மருத்துவமனை!!

வேலூரில் அரசு உயர் சிகிச்சை சிறப்பு மருத்துவமனையை திறந்துவைத்தார் முதலவர் ஸ்டாலின். 7 தளங்களுடன் 562 படுக்கைகள், 11 அறுவை சிகிச்சை அறைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.    

புதிய செங்கம் ரோட்டரி கிளப்பின் பட்டய விழாவிற்கு அனைவரையும் வரவேற்கிறோம்!!

திருவண்ணாமலை ரோட்டரி கிளப் அமைப்பின் ஏற்பாட்டில், ரோட்டரி கிளப் ஆஃப் செங்கம் (Rotary Club of Chengam) இன் சார்ட்டர் வழங்கும் விழாவும் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழாவும் இன்று மாலை நடைபெறவிருக்கிறது.இந்த விழா, சமூக சேவையின் புதிய அத்தியாயத்தைத் தொடக்கமாகக்…

திருவண்ணாமலையில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கு நேரடி தேர்வு!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கு நேரடி தேர்வு. செய்யாறு அரசு மருத்துவமனையில் வரும் ஜூன் 27-ம் தேதி காலை 10:30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.    

இலவச குடும்ப வளர்ச்சி விழிப்புணர்வு முகாம் – திருவண்ணாமலை!!

‘பாசிடிவ்’ பெருமாள் வழங்கும்: சொத்து உங்கள் கெத்து சொத்துக்கள் சேர்க்கும் சூத்திரம் – உங்கள் தலைமுறைக்கு சுதந்திரம்இப்போது உங்கள் குடும்ப நலனுக்காக மாற்றத்தைத் தொடங்கும் நேரம் முகாம் இடம்:நலா ரெசிடென்சி, 21, அண்ணா சாலை,திருவண்ணாமலை…

திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் நவீன எரிவாயு தகன மேடை துவக்க விழா!

திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நவீன எளிவாறு தகன மேடைதிறப்பு விழா, இன்று மாலை 4 மணிக்கு வைரக்கல் சுடுகாடு, செங்கம் ரோடு அருகில்  நடைபெறவிருக்கிறது.

திருவண்ணாமலை அரசு கல்லூரி மாணவர் விடுதியில் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

திருவண்ணாமலை அரசு கல்லூரி மாணவர் விடுதியில் வசிக்க விரும்பும் மாணவர்களிடமிருந்து புதிய சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சீர்மரபினர், இலங்கை அகதிகள், மற்றும் முகாம் ஆதிதிராவிட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். முக்கிய தகவல்கள்: – உணவு மற்றும் தங்குமிடம்…

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது. முக்கிய நிகழ்வுகள்: யாகசாலை பூஜை ஆரம்ப நாள் தேதி: 01.07.2025 (ஆனி 17 – செவ்வாய்க்கிழமை) திருக்குட நன்னீராட்டு…

திருவண்ணாமலை அஞ்சல் பென்ஷன் அதாலத் கூட்டம் ஜூன் 27ம் தேதி நடைபெறும்!!

திருவண்ணாமலை அஞ்சல் கோட்டத்தில் 2025ஆம் ஆண்டுக்கான 2வது அரையாண்டு பென்ஷன் அதாலத் நேர்காணல் கூட்டம் ஜூன் 27ஆம் தேதி மதியம் 3 மணிக்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.    

RMBF (ரோட்டரி மீன்ஸ் பிசினஸ் பெல்லோஷிப்) திருவண்ணாமலை அத்தியாயம் அதிகாரபூர்வமாக தொடக்கம்!

RMBF (ரோட்டரி மீன்ஸ் பிசினஸ் பெல்லோஷிப்) திருவண்ணாமலை அத்தியாயம் உறுப்பினர்கள் மற்றும் தலைமை மேசைத் தலைவர் Rtn.வின்செட், துணைத் தலைவர் Rtn.தீபக், செயலாளர் Rtn.ராகவ் கார்த்திகேயன் மற்றும் பொருளாளர் Rtn.மணிகண்டன் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஜூன்…

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் (26.06.2025) அன்று மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் (26.06.2025) சனிக்கிழமை அன்று காலை…

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்த நிலையில், இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு…

தட்கல் டிக்கெட் – ஆதார் இணைக்கும் பணி தொடக்கம்!

தட்கல் முன்பதிவுக்கு ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கியது IRCTC நிறுவனம், IRCTC இணையதளத்தில் ஆதார் எண்ணை பதிவேற்ற பயனர்களுக்கு ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தல், ஜுலை 1 முதல் ஆதார் OTP அடிப்படையில் மட்டுமே…

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் ஆனி மாத கிருத்திகை விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு நேற்று (22.06.2025) முருகன் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை…

கலசபாக்கத்தில் புதிய இந்தியன் வங்கி!

இந்தியன் வங்கி, கலசபாக்கத்தில் தற்காலிக கட்டிடத்தில் வருகிற திங்கட்கிழமை (23.06.2025) முதல் செயல்பட உள்ளது. புதிய கட்டடம் தயாராகி வரும் நிலையில், விரைவில் அங்கு மாற்றப்படும்.

தமிழகத்தில் ஆன்லைன் மின்கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை 70% ஆக அதிகரிப்பு!

ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்துவோர் அதிகரிப்பு தமிழகத்தில், ‘ஆன் லைன்’ வாயிலாக மின்கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை 70 சதவீதமாக அதிகரித்து உள்ளது; 2024-25ல், 9.56 கோடி பேர், 58,285 கோடி ரூபாயை, ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தியுள்ளனர்.…

சொத்து வில்லங்க சான்றிதழுக்காக அலைய வேண்டாம் – பதிவு நடந்த அன்றே பெறலாம்!

சொத்து வில்லங்க சான்றிதழ் பெற வீணாக அலைய வேண்டாம். பத்திர பதிவு நடந்த அன்றே பத்திரத்தை வழங்கவும், பதிவு நடந்த சில மணி நேரத்தில் மொபைல் போனில் வில்லங்கச் சான்று அளிக்க பத்திர பதிவுத்துறை…

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை (21.06.2025) மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (21.06.2025) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணிவரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின்…

ஜூலை முதல் ஆதார் கட்டாயம்!!

புதியதாக பான் கார்டு பெற விண்ணப்பிப்பவர்களுக்கு, ஜூலை 1ம் தேதி முதல், ஆதார் எண் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட உள்ளது : மத்திய நேரடி வரிகள் வாரியம்.    

காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (21.06.2025) மின் நிறுத்தம்!

காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர், கீழ்பாலூர், வில்வாரணி, தாமரைப்பாக்கம்,…

பெட்ரோல் பம்ப்களில் வாகன ஓட்டிகள் கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்!!

தினமும் பைக்கிலும் காரிலும் பயணம் செய்பவர்கள் பெட்ரோல் மற்றும் டீசலை அவசியமாக நிரப்புகிறார்கள். பெட்ரோல் பம்பை தேர்வு செய்யும் போது பலர் எரிபொருளின் தரம் மற்றும் தங்களுடைய முந்தைய அனுபவத்தின் அடிப்படையில் முடிவெடுக்கிறார்கள். இந்நிலையில்,…

15 நாளில் வாக்காளர் அட்டைகள் வழங்க புதிய நடைமுறை!

புதிய மற்றும் திருத்தங்கள் செய்யப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் 15 நாட்களில் வழங்கப்படும். புதிய நடைமுறையை அமல்படுத்தியது இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மனுநீதி முகாம்!

கலசபாக்கத்தில் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் இன்று (19.06.2025) மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மனுநீதி முகாம் நடைபெற்று வருகின்றது.

பிளஸ் 2 துணைத் தேர்வு -இன்று நுழைவுச்சீட்டு வெளியீடு!!

பிளஸ் 2 துணைத்தேர்வு எழுத உள்ளோர், நுழைவுச்சீட்டை இணையதளத்தில் இன்று (ஜூன் 19) பதிவிறக்கம் செய்யலாம். www.dge.tn.gov.in-இல் இன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் இதே இணையதள முகவரியில், துணைத் தேர்வுக்கான தேர்வுகால அட்டவணையை அறியலாம் என அரசுத் தேர்வுகள்…

திருவண்ணாமலை-காட்பாடி மார்க்கத்தில் மெமு ரயில்கள் இன்று ரத்து!

திருவண்ணாமலை-காட்பாடி மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் பராமரிப்பு காரணமாக இன்று 18-ம் தேதி சென்னை – திருவண்ணாமலை மெமு பயணிகள் ரயில் இரு மார்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காட்பாடி – திருப்பதி மெமு ரயிலும் அரக்கோணத்தில்…

துணை மருத்துவக் கல்லூரி விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்!

துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியது, ஜூலை 7-ந் தேதி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

6ஆம் ஆண்டு நினைவு தினம்

JB SOFT SYSTEM நிறுவனர் திரு ஜெ சம்பத் அவர்களின் அன்புத் தந்தை மறைந்த திரு.P G ஜெயவேல் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம்!

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. நாள்: 14.6.2025 சனிக்கிழமை நேரம்: காலை 10:00-2:00 மணி வரை இடம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம்…

பி.டெக் மற்றும் கால்நடை படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பம் அதிகரிப்பு!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவ படிப்பிற்கு 16,339 பேரும், பி.டெக் படிப்புக்கு 3,978 பேரும் விண்ணப்பித்துள்ளனர். ஜூன்-20 வரை விண்ணப்பிக்கலாம்.    

கலசபாக்கம் அடுத்த நட்சத்திர முருகர் கோயிலில் சங்காபிஷேகம்!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோயில் பகுதியில் சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு 27 நட்சத்திரங்களும் வழிபடக்கூடிய கோயில் கும்பாபிஷேகம் 2012ம் ஆண்டு நடைபெற்றது. கும்பாபிஷேகம் செய்யப்பட்டநாள் கோயிலின் ஜென்ம…

திறனாய்வுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

மாணவர்கள் www.dge.tn.gov.in இணையதளத்தில் முடிவுகளை காணலாம். மொத்தம் 1,000 மாணவர்களுக்கு இளநிலை பட்ட படிப்பு வரை, மாதம் 31,000 என்ற அடிப்படையில் 10 மாதங்கள் உதவித்தொகை வழங்கப்படும்.

கலசபாக்கத்தில் அத்தியாவசிய பணி காரணமாக மின் நிறுத்தம்!

கலசபாக்கத்தில் இன்று அத்தியாவசிய பணி காரணமாக, காலை 11 மணி முதல் 12 மணி வரை BDO ஆபீஸ், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது.

மத்திய அரசு துறைகளில் 14,582 காலிப்பணியிடங்களுக்கு SSC CGL 2025 தேர்வு அறிவிப்பு!

மத்திய அரசு துறைகளில் குரூப் B,C பிரிவுகளில் 14,582 காலிபணியிடங்களை நிரப்புவதற்கான SSC CGL 2025 தேர்வு அறிவிப்பாணை வெளியீடு. தகுதி உள்ளவர்கள், ஜூலை 4-ம் தேதிக்குள் ssc.gov.in என்ற இணையதளத்திலும், mySSC என்ற செயலியிலும் விண்ணப்பிக்கலாம்.  

NEET UG 2025 தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியீடு!

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான NEET UG தேர்வு முடிவுகள் வரும் 14-ம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

தட்கல் டிக்கெட்டுகளுக்கு ஆதார் கட்டாயம் !!

ஜூலை 1ம் தேதி முதல் தட்கல் ரயில் டிக்கெட்டுகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் IRCTC செயலி மூலம் ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு.

கான்கிரீட் தயாரிப்பு துறையில் பேட்சிங் பிளாண்ட் இயக்குபவருக்கான அரசின் இலவச பயிற்சி! நீங்களும் சேரலாம்

டிகிரி படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களே லட்சக்கணக்கில் தமிழகத்தில் மட்டுமே இருக்கும் பொழுது, பள்ளி படிப்பு கூட முடிக்கவில்லை. ஆனால் வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசையோடு பலர் இருப்பர். அப்படி இருக்கும் நபர்களுக்கு, தொழில்…

7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்