Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் வட்டத்தில் 7 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு புதிய அறிவிப்பு!!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டத்தில் 7 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.08.2025 நேர்முகத் தேர்வு தேதி: 15.09.2025 – 23.09.2025 விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்: https://tiruvannamalai.nic.in/notice-category/recruitment/ விண்ணப்பத்தை…

பிஎஸ்எம்எஸ், பிஎம்எஸ், பியுனானி, பிஎச்எம்எஸ் 2025–26 மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடக்கம் – ஆகஸ்ட் 8ம் தேதி கடைசி நாள்

சித்தா ஆயுர்வேத யுனானி ஒமியோபதி (பிஎஸ்எம்எஸ்), பிஎம்எஸ், பியுனானி, பிஎச்எம்எஸ் பட்டப்படிப்புகளுக்கு 2025–26 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.…

ரயில்நிலையங்களில் ரீல்ஸ் எடுக்க தடை – மீறினால் ரூ.1,000 அபராதம்

ரயில்நிலையங்களில் ரீல்ஸ் எடுப்பது தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது. மீறினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆபத்தான ரீதியில் ரீல்ஸ் எடுப்பது விபத்துகளுக்கே வழிவகுக்கிறது. ரயில்வே போலீசார் சி.சி.டி.வி. மூலம் கண்காணித்து வருகின்றனர். புகைப்படம்…

ஆடி அமாவாசை 2025: தர்ப்பணம் செய்ய ஏற்ற நேரம்!

ஆடி அமாவாசை இன்று (ஜூலை 24) முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய இது மிக முக்கியமான நாள். அமாவாசை திதி இன்று அதிகாலை 3.06 மணிக்கு துவங்கி, நாளை (ஜூலை 25) அதிகாலை 1.48 மணி…

QR குறியீடு கொண்ட அடையாள அட்டை கட்டாயம்!!

ரயில்வே உணவுப் பணியாளர்கள் இனிமேல் QR குறியீடு கொண்ட அடையாள அட்டை கட்டாயம். அடையாள அட்டை இல்லாதவர்கள் உணவுப் பொருட்கள் விற்க அனுமதி இல்லை. தரமான உணவு வழங்க முக்கிய முடிவு.    

திருவண்ணாமலையில் இலவச நான்கு சக்கர வாகன ஓட்டுநர் தொழிற்பயிற்சி!!

திருவண்ணாமலை மாவட்டத்தில், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் (RSETI) சார்பில், இலவச நான்கு  சக்கர வாகன ஓட்டுநர் பயிற்சி (30 நாட்கள்) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் மேற்கண்ட முகவரியில் நேரில்…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆடி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (22-07-2025)  ஆடி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள். 

கீ ஆன்ஸர் வெளியீடு!

குரூப் 4 தேர்வுக்கான கீ ஆன்ஸரை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. டிஎன்பிசி -யின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் உரிய ஆவணங்களுடன் வரும் 28ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கலசபாக்கம் அடுத்த சில பகுதிகளில் அத்தியாவசிய பணியின் காரணமாக இன்று (22.07.2025) மின் நிறுத்தம்!

காப்பலூர் – வன்னியனூர் இடையே உள்ள மின்மாற்றி மற்றும் மின்கம்பியில் ஏற்பட்ட தடை காரணமாக, மின்சார ஊழியர்கள் பழுது சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கலசபாக்கம் பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது என கலசபாக்கம்…

மின் கட்டணம் உயர்வு!

ஜூலை 1-ம் தேதிக்கு முன்பு பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு பழைய சேவை கட்டணமும், 1-ம் தேதிக்கு பிறகு பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு உயர்த்தப்பட்ட மின்வாரிய சேவை கட்டணமும் வசூலிக்கப்படும் -மின்வாரியம் உத்தரவு.    

கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை!!

கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (22.07.2025) செவ்வாய்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர், அணியாலை ஆகிய கிராமங்களுக்கும் மின்…

ஆடி மாத பொங்கல் விழா!

கலசபாக்கம் ஏரிக்கரையில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு வரும் (21.07.2025) திங்கட்கிழமை ஏரிக்கரை காளியம்மன் கோவிலில் பொங்கல் வைத்தல் நடைபெற உள்ளது.

ஆடிக்கிருத்திகை விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர்-மோட்டூர் அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில்(நட்சத்திரக்கோயில்), ஆடிக்கிருத்திகை விழா 16.08.2025 அன்று சிறப்பாக நடைபெறும். (20.07.2025) அன்று கிருத்திகை தினத்தில் விழா நடைபெறாது என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கலசபாக்கத்தில் புதிதாக மின் உதவி பொறியாளர் நியமனம்!

கலசபாக்கத்தில் புதிதாக மின் அலுவலக உதவி பொறியாளர் திரு M. விஜயகுமார் (07.07.2025) அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

கலசபாக்கம் புதுப்பேட்டை மாரியம்மன் முதல் ஆடி முன்னிட்டு வீதி உலா!

கலசபாக்கம் புதுப்பேட்டை மாரியம்மன் கோவிலில், இன்று (18.07.2025) ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மாரியம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகின்றது.

தமிழகம் முழுவதும் நாட்டுப்புறக் கலை பயிற்சி சேர்க்கை இன்று தொடக்கம்!!

திருவண்ணாமலை அரசு இசைப் பள்ளியில் கரகம், தப்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைகள் ஓராண்டு சான்றிதழ் பயிற்சியாக வெள்ளி, சனிக்கிழமைகளில் மாலை 4-6 வரை வழங்கப்படும்.விவரங்கள் மற்றும் விண்ணப்பத்திற்கு – www.artandculture.tn.gov.in    

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை (19.07.2025) மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (19.07.2025) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணிவரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின்…

நமது கலசபாக்கத்தில் புதியதாக வெற்றி மாற்றுத்திறனாளிகள் நல வாழ்வு இ சேவை மையம் திறப்பு!

நமது கலசபாக்கத்தில் புதியதாக வெற்றி மாற்றுத்திறனாளிகள் நல வாழ்வு முன்னேற்ற சங்கம் சார்பில் இ சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. முகவரி: எண் 18, அம்மா வணிகம், பஜார் வீதி, கலசபாக்கம், திருவண்ணாமலை மாவட்டம். தொடர்புக்கு:…

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

திருவண்ணாமலை, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிபேட்டை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.    

வார இறுதி விடுமுறைக்கான சிறப்பு பேருந்துகள்!

ஜூலை 18, 19 ஆகிய நாட்களில் சென்னை கிளம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு 1,035 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு.    

ஓட்டுநர்-நடத்துநர் தேர்வு!

போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு ஜூலை 27 அன்று நடைபெறுகிறது. 22,000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். ஜூலை 21 முதல் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.    

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ விழா!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம் கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் திருத்தேர் ஆடி பிரமோற்சவ விழா செவ்வாய்க்கிழமை (29.07.2025) கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழா ஆடி மாதம் 16 ஆம் தேதி (08.08.2025) வெள்ளிக்கிழமை…

மருத்துவ காப்பீடு முகாம்!

கலசபாக்கம் ஊராட்சி மையத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மத்திய அரசின் மருத்துவ காப்பீடு அட்டைக்கான இன்று முகாம் நடைபெற்று வருகின்றது. செயல்பாட்டு செலவு ரூ.80/- மட்டுமே. ஆவணங்கள்: ஆதார், குடும்ப அட்டை, கைபேசி எண்.

இலவச யோகா!

இன்று ஜூலை 17–19, மாலை 5.30-8.30 வரை, கலசபாக்கம் சொர்க்கநாராயண பெருமாள் கோவிலில் ஹார்ட்ஃபுல்னெஸ் இன்ஸ்டிட்யூட் நடத்தும் யோகா, பிராணாயாமம், தியான நிகழ்வில் பொதுமக்கள் இலவசமாக கலந்து கொள்ளலாம். தொடர்பு: 98650 60974, 81489…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி பிரம்மோற்சவ நிறைவு விழா!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா நிறைவையொட்டி நேற்று (16.07.2025) காலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவிலில் சுவாமி சன்னதியில் இருந்து அம்பாளுடன் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி…

திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (17.07.2025) கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.    

அனுமதி இல்லாத கட்டடங்களுக்கு சீல் வைக்க அதிகாரம்!!

கிராம ஊராட்சிகளில் அனுமதி இல்லா கட்டடங்களுக்கு சீல் வைக்க, ஊராட்சி நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவு.    

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம் – பெண்களுக்கு உரிமை தொகை!

முதல்வர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். அரசு சேவைகள் வீடு தேடி செல்லும் இந்த திட்டத்தின் மூலம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள, விடுபட்ட பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.…

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு!

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு வழங்க பள்ளிக் கல்வித் துறையின் மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இந்த உயர்வு ஜூன் 1, 2025 முதல்…

மருத்துவக் கல்விக் கட்டணம் உயர்வு!

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., மேளாண்மை ஒதுக்கீட்டிற்கான கல்விக் கட்டணம் ரூ.13.5 லட்சத்தில் இருந்து, ரூ.15 லட்சமாக உயர்வு. 21 சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.4.5 லட்சம் வரை கட்டணம் நிர்ணயம்.    

சபரிமலை கோயில் நடை திறப்பு!!

ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை மாலை (16-ம் தேதி) திறப்பு. மறுநாள் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். 21-ம் தேதி இரவு 10 மணி அளவில் கோயில் நடை சாத்தப்படும்.    

குரூப் 2 தேர்வு தேதி அறிவிப்பு!

குரூப் 2, 2 ஏ பணியிடங்களுக்கான தேர்வு செப்., 28ல் நடைபெறுகிறது; தேர்வுக்கு இன்று முதல் ஆக., 13 வரை விண்ணப்பிக்கலாம்; சார் பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், வனவர் உள்ளிட்ட 645 பணியிடங்களுக்கு தேர்வு.    

‘ஸ்பீட் போஸ்ட்’வீட்டிலிருந்தே !!!

வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தே ஸ்பீட் போஸ்ட் அனுப்பலாம்.அஞ்சல்காரர் நேரில் வந்து கடிதம் அல்லது பார்சலை பெற்றுக்கொண்டு, ரசீதை வழங்குவார்.விரைவில் இந்த புதிய சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.    

போலி ஆதார் கார்டுகளை தடுக்க அதிரடி.!

புதிய ஆதார் அட்டை விண்ணப்பங்களுடன் பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, பான் எண் மற்றும் 10-ம் வகுப்பு சான்றிதழ் போன்றவற்றை இணைப்பது கட்டாயமாக்கப்படும்.    

சபரிமலை கோவில் நடை திறப்பு!

புதிய நவக்கிரக கோவில் பிரதிஷ்டைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறப்பு; 3 நாட்கள் நடைபெறும் பூஜையையொட்டி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி.    

சிறப்பு ரயில்!!

திருவண்ணாமலையிலிருந்து ஆந்திர மாநிலம் நரசப்பூரிற்கு இன்று முதல் இயக்கப்பட்ட வாராந்திர சிறப்பு ரயில் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.    

ஜூலை 12 – குரூப் 4 தேர்வு!!

தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு வரும் 12.07.2025 (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. www.tnpsc.gov.in இணையதளத்தின் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.    

கிரிவலம் வர சிறந்த நேரம்!!

ஆனி மாத பவுர்ணமி கிரிவலம், இன்று 10ம் தேதி (வியாழக்கிழமை) விடியற்காலை 2:33 மணிக்கு தொடங்கி, நாளை 11ம் தேதி (வெள்ளிக்கிழமை) விடியற்காலை 3:08 மணிக்கு நிறைவடைகிறது.    

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக லட்டுடன் புத்தகம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இனி பக்தர்களுக்கு லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை கோயிலில் குரு பௌர்ணமி சிறப்பு ஏற்பாடுகள் – ஜூலை 10

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஜூலை 10, 2025 (வியாழன்) குரு பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வயதானோர் மற்றும் குழந்தைகள் – 60 வயதுக்கு மேல் மற்றும் 6 வயதுக்கு கீழ்…

கலசபாக்கம் அடுத்த மேல்பாலூர் மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் திருவிழா!

மேல்பாலூர் மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, கூழ் ஊற்றி சாமி தரிசனம் செய்தனர். பூச்சூட்டி, தீபாராதனை, ஊர்வலம் மற்றும் நாடகம் நடைபெற்றது.

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் (11.07.2025) அன்று மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் (11.07.2025) வெள்ளிக்கிழமை அன்று காலை…

வாகன் & சாரதி போர்ட்டலில் மொபைல் எண் புதுப்பிப்பு வசதி!

வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள், தங்களின் மொபைல் எண்ணை வாகன் & சாரதி போர்ட்டலில் புதுப்பிக்கலாம். புதுப்பிக்க: www.vahan.parivahan.gov.in/mobileupdate

ஆனி பவுர்ணமி கிரிவலம் 2025 சிறந்த நேரம்!

ஆனி மாத பவுர்ணமி கிரிவலம், 10ம் தேதி (வியாழக்கிழமை) விடியற்காலை 2:33 மணிக்கு தொடங்கி, 11ம் தேதி (வெள்ளிக்கிழமை) விடியற்காலை 3:08 மணிக்கு நிறைவடைகிறது.

ஆனி பிரம்மோற்சவம் திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில், தக்ஷிணாயன புண்யகாலத்தை முன்னிட்டு ஆனி மாதப் பிரம்மோற்சவம் இன்று (07.07.2025) கொடியேற்ற விழாவுடன் துவங்கப்பட்டது. பிரமோற்சவத்தின் முதல் நாளான இன்று காலை 6.30 மணி முதல் 7.25 மணி வரை, தங்கக் கொடிமரத்தில் கொடியேற்ற விழா பக்தர்கள்…

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று (07.07.2025 – ஆனி 23, திங்கட்கிழமை) திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா ஆன்மிக பிரமிப்புடன் நடைபெற்றது. காலை 06.15 மணிக்கு யாகசாலை பூஜை நடைபெற்று, அதன் பின்னர் காலை 06.50 மணிக்கு திருக்குட நன்நீராட்டு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, காலை…

கலசபாக்கத்தில் இன்று (07.07.2025) விதைத் திருவிழா!

கலசபாக்கத்தில் விதைத் திருவிழா 2025 இன்று (07.07.2025) அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் நடைபெற்று வருகின்றது.

வீட்டுமனை வாங்குங்க!!! காரை பரிசா வெல்லுங்க!!!

சேத்பட்டு – போளுர் நெடுஞ்சாலையில் அனைத்து வசதிகள் கொண்ட பிரம்மாண்டமான சிட்டி. வட்டியில்லா மாத தவணையில் ஒரு மனை ரூபாய் 3 இலட்சம் முன்பணம் மட்டுமே!!!மீதம் ரூபாய் 3 இலட்சம் வட்டியில்லா மாத தவணையில் DTCP…

பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்!!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு, சிறப்புப் பிரிவு மாணவர்கள் இன்று பங்கேற்பு. பொதுப்பிரிவினருக்கு ஜுலை 14ல் தொடங்குகிறது.    

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஆனி பிரம்மோற்சவம் 2025!

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில், ஆனி மாதம் 23 (07.07.2025) திங்கட்கிழமை காலை 6.30 – 7.25 மணிக்குள் பிரம்மோற்சவ தொடக்கமாக கொடியேற்றம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து பத்து நாட்கள் காலை மற்றும் மாலை வீதிவுலா உற்சவம் நடைபெறும்.