Web Analytics Made Easy -
StatCounter

திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2025 – வாகன நிறுத்துமிட ஏற்பாடுகள் வெளியீடு!!

2025-ஆம் ஆண்டுக்கான திருக்கார்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பான மற்றும் சீரான இயக்கத்திற்காக மாவட்ட நிர்வாகம் விரிவான வாகன நிறுத்துமிட ஏற்பாடுகளை வெளியிட்டுள்ளது. பெரும்பான்மை கூட்டத்தை கருத்தில் கொண்டு தற்காலிக…

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

நவம்பர் 22 ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு. தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து வலுப்பெறும் என இந்திய…

சபரிமலை மாலை அணிதல்: தமிழ்நாட்டு பக்தர்கள் விரதம் தொடக்கம்!

இன்று கார்த்திகை மாத பிறப்பை ஒட்டி சபரிமலைக்கு மாலை அணியத் துவங்கிய பக்தர்கள் தமிழ்நாடு முழுவதும் ஐயப்பன் கோயில்களிலும், பிற ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகளுடன் விரதம் தொடங்கினர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர முறைத் திருத்தம் 2025!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்வதற்கும், பூர்த்தி செய்யும் போது ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் தெளிவு பெறுவதற்கும், வாக்காளர்களின் வசதிக்காக இன்று (16.11.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி…

செங்கம் ராஜவீதியில் புதிய E.S. Speciality Clinic – நவம்பர் 16ல் திறப்பு!

செங்கம் ராஜவீதியில் புதிய E.S. Speciality Clinic – நவம்பர் 16ல் திறப்பு செங்கம் ராஜவீதியில் புதிதாக அமைக்கப்பட்ட E.S. Speciality Clinic மருத்துவ மையம் வரும் 16 நவம்பர் 2025, ஞாயிற்றுக்கிழமை காலை…

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை (15.11.2025) மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (15.11.2025) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணிவரை மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்படும். மின் வினியோகம்…

கலசபாக்கத்தில் பள்ளியில் நூலகர் வாரம் கொண்டாட்டம்!

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று 58வது தேசிய நூலகர் வாரம் மற்றும் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. விழாவில் குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் எழுத்துப்பொருள்கள் வழங்கப்பட்டது. நூலகர், வாசகர் வட்டம் பொறுப்பாளர்கள், தலைமை…

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

நவம்பர் 21-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளது. இது நவம்பர் 23-ம் தேதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, சீரமைக்கப்பட்ட பராசக்தி அம்மன் தேர் இன்று காலை வெள்ளோட்டம் நடைபெற்றது. 

கனமழை எச்சரிக்கை!!

தமிழகத்தில் வரும் நவம்பர் 17ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (13.11.2025) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (13.11.2025) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம்…

கலசபாக்கத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை ஆட்சித்தலைவர் ஆய்வு!

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் பார்வையிட்டு  ஆய்வு செய்தார்.

திருப்பதி அங்கப் பிரதட்சண டோக்கனுக்கு புதிய நடைமுறை!

திருப்பதி ஏழுமலையான் கோயில் அங்கப் பிரதட்சண இலவச டோக்கன் வழங்கும் நடைமுறையில் மாற்றம். ஆன்லைனில் வெளியிடும்போது முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் டோக்கன்கள் ஒதுக்க தேவஸ்தானம் முடிவு.  

தெருநாய்கள் அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மருத்துவமனைகள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், விளையாட்டு வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இருந்து தெருநாய்களை உடனடியாக அகற்ற வேண்டும். கருத்தடை மற்றும் தடுப்பூசி பிறகு மீண்டும் அதே இடத்தில் விடக்கூடாது. அவற்றை முறையான தங்குமிடங்களுக்கு…

ஆதமங்கலத்தில் மின்தடை ரத்து !!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று (07.11.2025) வெள்ளிக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது.

பென்ஷன் பெறுவோருக்கு இலவச லைஃப் சான்று வீடு தேடி சேவை!

பிஎஃப் பென்ஷன் பெறுவோர் இப்போது வீட்டிலிருந்தபடியே இலவசமாக ‘லைஃப் சான்று‘ பெறலாம். இதற்காக பகுதி தபால்காரர் அல்லது அருகிலுள்ள தபால் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.  

கலசபாக்கத்தில் வாக்காளர் பட்டியல் பணிகள் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் இன்று (06.11.2025) கலசபாக்கம் தொகுதி விண்ணுவாம்பட்டு ஊராட்சியில் “சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் 2025” பணிகளை ஆய்வு செய்தார். உடன் கலசபாக்கம் வட்டாட்சியர் திருமதி. தேன்மொழி…

கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் ஐப்பசி மாத பௌர்ணமி அன்னாபிஷேகம்!

கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் 4560 அடி உயரம் கொண்ட மலையில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று மல்லிகார்ஜுனசாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருமதி ஆர்.ஏ. பரிமளா திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக பொறுப்பேற்பு!

கலசபாக்கம் அடுத்த மேலாரணி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி R. A. பரிமளா அவர்கள், திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக நேற்று பொறுப்பேற்றார்.

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் (07.11.2025) அன்று மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் (07.11.2025) வெள்ளிக்கிழமை அன்று காலை…

விமான டிக்கெட் மாற்றம் – புதிய விதிகள் அறிவிப்பு!

முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள், கூடுதல் கட்டணமின்றி விமான டிக்கெட்டை ரத்து செய்யவோ மாற்றிக்கொள்ளவோ முடியும் என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.  

சபரிமலை கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி திறப்பு!

மண்டல பூஜைக்காக கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்படும். டிசம்பர் 27ஆம் தேதி இரவு நடை சாத்தப்படும் என தேவசம் போர்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இன்று தொடங்குகிறது S.I.R பணிகள்!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இன்று (நவ.04) தொடக்கம். 234 தொகுதிகளிலும் தேவையான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம். ஒரு மாதகால கணக்கெடுப்பு பணிக்கு பிறகு டிச.9ஆம் தேதி வரைவு…

கலசபாக்கம் ஆலயத்தில் இன்று அன்னாபிஷேகம்!

கலசபாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் ஆலயத்தில் இன்று (04.11.2025) மாலை 7 மணி அளவில் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. மேலும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.

கலசபாக்கம் இந்தியன் வங்கி புதிய கட்டிடம்!

நமது கலசபாக்கத்தில் செயல்பட்டு வந்த இந்தியன் வங்கி தற்போது புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இடம்: அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில்,கலசபாக்கம்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் நாளை தொடக்கம்!

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நாளை தொடக்கம் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள தொகுதிகளில் நாளை முதல் டிச.4 வரை வாக்காளர் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.

திருவண்ணாமலை மகாதீபம்: 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

டிசம்பர் 3-ம் தேதி நடைபெறவுள்ள திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மொத்தம் 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.    

கிராம சபை கூட்டம்!!

கலசபாக்கம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தையொட்டி நவம்பர் 1, 2025 (சனிக்கிழமை) காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறும். இடம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கலசபாக்கம். பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்!

சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு!

சிபிஎஸ்சி 10ம் வகுப்பு தேர்வுகள் 2026 பிப்ரவரி 17 முதல் மார்ச் 10 வரை, 12ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெறும். முழு அட்டவணை cbse.gov.in-ல் கிடைக்கும்.

ஐப்பசி மாத கிரிவலம்!

ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம், 04ம் தேதி (செவ்வாய்) இரவு 9:37 மணிக்கு தொடங்கி, 05ம் தேதி (புதன்) இரவு 7:20 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி…

தரவரிசை பட்டியல் வெளியீடு!

ஜூலை மாதத்தில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு முடிவுகள், மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் நவம்பர் 7க்குள் ஓடிஆர் (One Time Registration) மூலம் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை!!

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை நவம்பர் 10 முதல் 30 வரை நடைபெறும். வீட்டு பட்டியல் மற்றும் சுய கணக்கெடுப்பு நவம்பர் 1 முதல் 7 வரை நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சபரிமலை தரிசன முன்பதிவு நவம்பர் 1 முதல் தொடக்கம்!

சபரிமலை மகரவிளக்கு பூஜை காலத்தில் தினமும் 90,000 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி. நவம்பர் 1 முதல் முன்பதிவு தொடக்கம். 70,000 பேர் ஆன்லைனிலும், 20,000 பேர் ஸ்பாட் புக்கிங்கிலும் முன்பதிவு செய்யலாம்.