Web Analytics Made Easy -
StatCounter

12 நாள் சிறப்பு கோடை பயிற்சி வகுப்பு தொடக்கம்!

வேதாத்திரி மகரிஷி அறிவொளி அறிவகம் சார்பில் 5 முதல் 18 வயது குழந்தைகளுக்கான 12 நாள் சிறப்பு கோடை பயிற்சி வகுப்பு மே 17 முதல் மே 28 வரை நடைபெறுகிறது. யோகா, தியானம்,…

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை (16.05.2026) மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (16.05.2026) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 02:00 மணிவரை மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்படும். மின் வினியோகம்…

ஆன்லைன் மூலம் நீட் தேர்வு!!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் நடைபெறும். OMR முறையைவிட கணினி வழித்தேர்வு முறை ஒப்பீட்டளவில் சிறந்தது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி

திருப்பதியில் குவியும் பக்தர்கள்..!

கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இலவச தரிசன வரிசையில் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நம்பிக்கை தீர்மானத்தில் முதல்வர் விஜய் வெற்றி!

அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் முதல்வர் விஜய் பெரும்பான்மையை நிரூபித்தார். நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவானது. மேலும், 5 உறுப்பினர்கள் நடுநிலையாக இருந்தனர்.

வைகாசி பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

வைகாசி மாத சிறப்பு பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. மே 19-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. அதன்பின் அன்று இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.  

தங்கத்தின் சுங்க வரி உயர்வு!

தங்கம், வெள்ளி பொருட்கள் மீதான சுங்க வரி 15% உயர்ந்துள்ளது புதிய வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் வேலைவாய்ப்பு உதவித்தொகை விண்ணப்பம் தொடக்கம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மாதாந்திர உதவித்தொகை பெற மே 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்கலாம். அல்லது, தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறையின் www.tnvelaivaippu.gov.in என்ற…

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு!

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் தற்காலிக மதிப்பெண் பட்டியலை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

விபி ஜி ராம் ஜி திட்டம்!!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு பதிலாக விபி ஜி ராம் ஜி திட்டம் ஜூலை- 1 முதல் அமல். 100 நாள் வேலை திட்டம் 125 நாட்களாக உயர்வு என…

கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 98% தேர்ச்சி!

கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 98% தேர்ச்சி பெற்றுள்ளது. 148 மாணவிகளில் 145 பேர் தேர்ச்சி பெற்றனர். ச. தமிழரசி 562 மதிப்பெண்களுடன் முதல் இடம், அ. லோகேஸ்வரி 544…

கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு தேர்வில் 91.2% தேர்ச்சி!

கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் சிறப்பான தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 147 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 134 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 91.2 சதவீத தேர்ச்சி…

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி அறிவிப்பு!

பிளஸ் 2 மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 13ஆம் தேதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் தங்களது பள்ளிகள் மூலம் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.        

12-ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் 92.87% தேர்ச்சி!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 11,583 பேரும், மாணவிகள் 13,280 பேரும், மொத்தமாக 24,863 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 92.87% பெற்று 32 வது இடத்தை பெற்றுள்ளது.  

பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம்!

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 95.20% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.1% மற்றும் மாணவிகள் 97% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in என்ற இணையதளங்களில் பார்த்துக்கொள்ளலாம். மேலும், தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு 1441 என்ற உதவி எண்ணை அழைக்கலாம்.

வணிகர் தினம் 2026

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் வணிகர்களை கௌரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே 5ஆம் தேதி வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை முன்னிட்டு, மாநிலத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களித்து வரும் அனைத்து…

சித்ரா பௌர்ணமி: லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இந்த திருவிழாவை முன்னிட்டு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து பக்தி உணர்வுடன் கிரிவலம் மேற்கொண்டனர்.  

திருவண்ணாமலை சித்திரை வசந்த உற்சவம் – தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை வசந்த உற்சவத்தின் போது, நேற்று (30-ம் தேதி) காலை அய்யங்குளம் குளக்கரை மண்டபத்தில் உற்சவர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் எழுந்தருளி தீர்த்தவாரி விமர்சையாக நடைபெற்றது. 

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 8

திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயில் நேற்று (28.4.2026) செவ்வாய்க்கிழமை வசந்த உற்சவம் எட்டாம் நாள் உற்சவத்தில் மூன்றாம் பிரகாரம் ஸ்தல விருட்சம் அருகே அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர்க்கு காட்சி அளித்து தீபாரதனைக்கு பின்…

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி இன்று திருத்தேர்!

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்று வரும் சித்திரை பிரம்மோற்சவம் விழாவின் ஏழாம் நாளான இன்று (28.04.2026) மாலை நடைபெறும் திருத்தேர் வீதி உலாவிற்காக திருத்தேர் தயார் நிலையில்…

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 6

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (27.04.2026) ஆறாம் நாள் இரவு யானை வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது.  

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் ஏழாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (27.04.2026) திங்கட்கிழமை ஏழாம் நாள் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

திருவண்ணாமலையில் சித்திரை மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை மாத சித்திரா பௌர்ணமி கிரிவலத்திற்கு 30.04.2026 இரவு 9:52 மணி முதல் 01.05.2026 இரவு 11:08 மணி வரை உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 3

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (24.04.2026) மூன்றாம் நாள் இரவு பூத வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட சட்டமன்ற தேர்தல் – 2021 vs 2026 வாக்கு சதவீதம் உயர்வு!

திருவண்ணாமலை மாவட்ட சட்டமன்ற தேர்தல் – 2021 vs 2026 வாக்கு சதவீதம்: தொகுதி 2021 (%) 2026 (%) கூடுதல் வாக்கு (%) திருவண்ணாமலை 72.87 86.78 13.91 செங்கம் (தனி) 81.31…

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 2

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (23.04.2026) இரண்டாம் நாள் இரவு இரண்டாம் நாள் இந்திர விமானத்தில் வீதி உலா நடைபெற்றது.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? முதலில் உறுதி செய்யுங்கள்

வாக்காளர் அட்டை உங்களிடம் இருக்கிறதா இல்லையா என்பதைக் கவலைப்படுவதற்கு முன், முதலில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களும் கவலைப்பட வேண்டாம். voters.eci.gov.in இணையதளம் அல்லது Voter Helpline…

பூத் ஸ்லிப் மட்டும் போதாது – அடையாள ஆவணம் கட்டாயம்!

தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் பூத் ஸ்லிப் என்பது உங்கள் வாக்குச் சாவடியைக் கண்டறிய மட்டுமே; அது அடையாள ஆவணமாகக் கருதப்படாது தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 13 ஆவணங்களில் ஒன்றை எடுத்துச்…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் முதல் நாள்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழாவையொட்டி நேற்று இரவு கோவிலில் மண்டகப்படி நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோவிலில் மகிழமரம் அருகில் சாமிக்கு பொம்மை வடிவிலான சேடிப்பெண் பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.…