Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம்!

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. நாள்: 14.6.2025 சனிக்கிழமை நேரம்: காலை 10:00-2:00 மணி வரை இடம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம்…

பி.டெக் மற்றும் கால்நடை படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பம் அதிகரிப்பு!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவ படிப்பிற்கு 16,339 பேரும், பி.டெக் படிப்புக்கு 3,978 பேரும் விண்ணப்பித்துள்ளனர். ஜூன்-20 வரை விண்ணப்பிக்கலாம்.    

கலசபாக்கம் அடுத்த நட்சத்திர முருகர் கோயிலில் சங்காபிஷேகம்!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோயில் பகுதியில் சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு 27 நட்சத்திரங்களும் வழிபடக்கூடிய கோயில் கும்பாபிஷேகம் 2012ம் ஆண்டு நடைபெற்றது. கும்பாபிஷேகம் செய்யப்பட்டநாள் கோயிலின் ஜென்ம…

திறனாய்வுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

மாணவர்கள் www.dge.tn.gov.in இணையதளத்தில் முடிவுகளை காணலாம். மொத்தம் 1,000 மாணவர்களுக்கு இளநிலை பட்ட படிப்பு வரை, மாதம் 31,000 என்ற அடிப்படையில் 10 மாதங்கள் உதவித்தொகை வழங்கப்படும்.

கலசபாக்கத்தில் அத்தியாவசிய பணி காரணமாக மின் நிறுத்தம்!

கலசபாக்கத்தில் இன்று அத்தியாவசிய பணி காரணமாக, காலை 11 மணி முதல் 12 மணி வரை BDO ஆபீஸ், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது.

மத்திய அரசு துறைகளில் 14,582 காலிப்பணியிடங்களுக்கு SSC CGL 2025 தேர்வு அறிவிப்பு!

மத்திய அரசு துறைகளில் குரூப் B,C பிரிவுகளில் 14,582 காலிபணியிடங்களை நிரப்புவதற்கான SSC CGL 2025 தேர்வு அறிவிப்பாணை வெளியீடு. தகுதி உள்ளவர்கள், ஜூலை 4-ம் தேதிக்குள் ssc.gov.in என்ற இணையதளத்திலும், mySSC என்ற செயலியிலும் விண்ணப்பிக்கலாம்.  

NEET UG 2025 தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியீடு!

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான NEET UG தேர்வு முடிவுகள் வரும் 14-ம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

தட்கல் டிக்கெட்டுகளுக்கு ஆதார் கட்டாயம் !!

ஜூலை 1ம் தேதி முதல் தட்கல் ரயில் டிக்கெட்டுகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் IRCTC செயலி மூலம் ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு.

கான்கிரீட் தயாரிப்பு துறையில் பேட்சிங் பிளாண்ட் இயக்குபவருக்கான அரசின் இலவச பயிற்சி! நீங்களும் சேரலாம்

டிகிரி படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களே லட்சக்கணக்கில் தமிழகத்தில் மட்டுமே இருக்கும் பொழுது, பள்ளி படிப்பு கூட முடிக்கவில்லை. ஆனால் வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசையோடு பலர் இருப்பர். அப்படி இருக்கும் நபர்களுக்கு, தொழில்…

7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்    

கலசபாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காற்றுடன் மழை பெய்தது!

கலசபாக்கம் BDO ஆபிஸ் அருகில் சாலையில் மரம் சாய்ந்தது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிறகு நெடுஞ்சாலைத்துறை மூலமாக மரம் அகற்றப்பட்டது.

திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!

வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம், 10ம் தேதி (செவ்வாய்) பிற்பகல் 12.32 மணிக்கு தொடங்கி, 11ம் தேதி (புதன்) பிற்பகல் 01:58 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி…

கலசபாக்கத்தில் கருட சேவை!

கலசபாக்கத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுகந்தவல்லி தாயார் சமேத ஸ்ரீ சொக்க நாராயண பெருமாள் திருக்கோவிலில் இன்று 09.06.2025 திங்கட்கிழமை கருட சேவையை முன்னிட்டு சொர்க்க நாராயண பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்து வீதி உலா…

பௌர்ணமி சிறப்பு ரயில்கள்!

ஜூன் 10-ம் தேதி காலை 9:25-க்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் ரயில், காலை 11:10-க்கு திருவண்ணாமலை வந்தடைகிறது. ஜூன் 10-ம் தேதி பிற்பகல் 12:40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் ரயில், பிற்பகல் 2:15-க்கு…

அண்ணாமலையார் கோயிலில் ரூ.500 கட்டணத்தில் பிரேக் தரிசனம்!!

தினமும் மாலை 4 மணி வரை, ஒரு மணி நேரம் இடைநிறுத்த தரிசனத்திற்கு அனுமதிக்கவும், அதற்காக ஒரு நபருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கவும் கோயில் நிர்வாகம் முடிவு. மேலும் ஆணி பிரமோற்சவம் 10-நாட்கள், ஆடிப்பூர உற்சவம்- 10…

திருவண்ணாமலை மாவட்டத்தில் மஞ்சள் அலர்ட்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூன் 10-ம் தேதி கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!!

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 மற்றும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1ஏ பதவிகளுக்கான பொதுவான முதல்நிலை தேர்வு ஜீன் 15-ந் தேதி முற்பகல் நடைபெற உள்ளது. தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது    

தட்கள் டிக்கெட்டுக்கு ஆதார் கட்டாயமாகிறது!!

ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு விரைவில் ஆதார் இணைப்பு கட்டாயமாகிறது; போலி IRCTC கணக்குகளை தடுக்கும் வகையில் நடவடிக்கை.    

திருவண்ணாமலை ஐடிஐ சேர்க்கை 2025 ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் 2025-26-ம் ஆண்டு பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சியில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வழியாக ஜூன் 13-ம் தேதிக்குள் விண்ணப்ப கட்டணம் ரூ.50 ஆன்லைனில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பு.

செய்தித்தாளில் பஜ்ஜி தரக் கூடாது!!

செய்தித்தாள் போன்ற அச்சிட்ட காகிதத்தில் உணவுப் பொருள்கள் விற்கக் கூடாது; விற்பனையாகாமல் மீதமான உணவை நுகர்வோருக்கு வழங்காமல் அப்புறப்படுத்த வேண்டும் உணவு நிறுவன ஊழியர்கள் டைபாய்டு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் – உணவு பாதுகாப்புத்துறை.    

ஏழுமலையான் கோவிலில் 23.79 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் 23.79 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் ஒட்டுமொத்தமாக மே மாதத்தில் 23,792,52 பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இது கடந்த ஆண்டு மே மாத எண்ணிக்கையை விட 55 ஆயிரம் அதிகம் ஆகும்.    

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இன்றைய தினம் மாணவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளன.    

மாணவர்கள் பஸ் பாஸ் – அரசு முக்கிய அறிவிப்பு!!

ஜூன்- 2 பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் மாணவர்கள் போக்குவரத்து கழகங்களால் வழங்கப்பட்ட பழைய பயண அட்டை, அல்லது பள்ளியில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பழைய அடையாள அட்டையுடனும் அரசு பேருந்தில் பயணிக்கலாம்..    

செங்குந்த மகாஜன சங்கம் திருவண்ணாமலை கல்வித் திருவிழா!

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டில் +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளைக் பாராட்டி பரிசு வழங்குதல் சாதனைகள் புரிந்தவர்களை பாராட்டி கெளரவித்தல். இடம்: ஆண்டாள் சிங்கராவேலு திருமண மண்டபம், வேலூர் ரோடு,…

கொரோனா பரவல் – முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் . கூட்டம் அதிகமுள்ள இடங்களில் முகக்கவசம் அணிவதால் கொரோனா பரவலை தடுக்கலாம். உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளில் இருக்க, தடுப்பூசிகளை போட அறிவுரை – தமிழக…

திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!!

வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம், 10ம் தேதி (செவ்வாய்) பிற்பகல் 12.32 மணிக்கு தொடங்கி, 11ம் தேதி (புதன்) பிற்பகல் 01:58 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி கிரிவலம் செய்யலாம்.    

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பிரச்சார பயணம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பிரச்சார பயணம்: ஜுன் – 1, 2, 3 – 2025 (மூன்று நாள்) நேரம்: காலை 9.00 மணி பயணம் துவங்கும் இடம் : அறிவொளி பூங்கா, திருவண்ணாமலை…

பத்ம ஸ்ரீ கண்ணப்ப சம்பந்தன்!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தெருக்கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப சம்பந்தனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு.    

சபரிமலை பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு ஜூன் 4ம் தேதி நடை திறப்பு!

சபரிமலையில் வருடாந்திர பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு ஜூன் 4-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 5-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டுபிரதிஷ்டை தின பூஜைகள் தொடங்கும். இரவு 10…

ஐடிஐயில் விண்ணப்பிக்க ஜூன் 13 ஆம் தேதி கடைசி நாள்!

திருவண்ணாமலை அரசு ஐடிஐயில் விண்ணப்பிக்க ஜூன் 13 ஆம் தேதி கடைசி நாள். மாணவர்கள் நேரில் அல்லது www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.  

வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15 வரை அவகாசம்!!

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய செப்டம்பர் 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு. 2025 ஜூலை 31ஆம் தேதியுடன் அவகாசம் முடிவடைய இருந்த நிலையில் கால அவகாசம் நீட்டிப்பு – வருமானவரித் துறை.    

வார விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

கோடை விடுமுறை நிறைவு, வார விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம். கிளாம்பாக்கத்தில் இருந்து 30 -ம் தேதி- 520, 31-ம் தேதி-607, கோயம்பேட்டில் இருந்து 30 -ம் தேதி-100, 31-ம் தேதி -97, மாதவரத்தில் இருந்து 30, 31 தேதிகளில்…

விண்ணப்பப் பதிவு செய்ய இன்றே கடைசி நாள்!!

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவு. இதுவரை 2 லட்சத்து 15 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை பதிவு செய்திருப்பதாகத் தகவல்.    

கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவச பயிற்சி வாய்ப்பு!!

சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகள் மற்றும் இன்டஸ்ட்ரி 4.0 தரத்தில் துவக்கப்பட்ட 5 புதிய தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.…

பள்ளி திறப்புக்கான முக்கிய நெறிமுறைகள்!!

• பள்ளிகள் திறக்கப்படும் அன்று முழுமையாக மாணவர்கள் பள்ளியை பயன்படுத்தும் வகையில் சுத்தப்படுத்தி தயார் செய்ய வேண்டும். • பள்ளி வளாகத்தை முழுமையாக சுத்தப்படுத்திட வேண்டும். வகுப்பறைகளை சுத்தம் செய்து கரும்பலகைக்கு மை பூசி…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு உற்சவமூர்த்திக்கு மகா அபிஷேகம்!

வைகாசி அமாவாசையை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 2-ம் பிரகாரத்தில் உள்ள உற்சவமூர்த்திக்கு மகா அபிஷேகம் மற்றும் பால், சந்தனம், விபூதி மற்றும் வண்ண பூக்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து…

கால்நடை பல்கலை. பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்!!

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. இளநிலை பட்டப்படிப்புக்கு இன்று முதல் மாணவர் சேர்க்கை பல்கலை. இணையதளம் மூலம் இன்று காலை 10 மணி முதல் ஜூன் 20 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். www.adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில்…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (24-05-2025) வைகாசி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு பிரதோஷ நாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள்.   

செய்யாறு ஆலையில் கரும்பு பதிவு அனுமதி – ஆட்சியர் அறிவிப்பு!!

போளூர்-தரணி சர்க்கரை ஆலைய கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பயிரிட்டுள்ள கரும்பு, 2025-26 அரவைக்காக செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் செய்யாறு ஆலையில் பதிவு செய்து கொள்ளலாம் என -மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.    

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு!

பள்ளி திறப்பில் மாற்றம் இல்லை, வரும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், பள்ளிகளை திறப்பதற்கு தயாராக வேண்டும் என தொடக்க கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மே 24-ம் தேதி (சனிக்கிழமை)கடைசி நாள் . விஏஓ, வனக்காப்பாளர், தட்டச்சர் உள்ளிட்ட 3,935 காலி பணியிடங்களுக்கு ஜூலை 12-ல் தேர்வு நடைபெறுகிறது.    

இயற்கை ஆரோக்கிய உணவுப் பொருட்கள் விரும்புகிறீர்களா? பூங்குயலி Food Products இப்போது உங்கள் வீட்டிற்கு டெலிவரி!

வேலூர், ஓசூர், பெங்களூர், திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் “பூங்குயலி Food Products”, இயற்கை மற்றும் பாரம்பரிய உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. • இங்கு கிடைக்கும் முக்கியமான…

10, பிளஸ் 1 துணைத் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இன்று முதல் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு!

10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் நாளை (மே 23) முதல் 10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்…

குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க மே 24 கடைசி!!

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 24-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

யுபிஎஸ்சி தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் சாதனை!

மத்திய அரசின் இந்திய வனப்பணியில் (IFS) தமிழ்நாட்டிலேயே முதலிடம் பிடித்து, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்த மு.வெ. நிலாபாரதி சிறப்பாக தேர்வாகியுள்ளார். அவரது சகோதரி மு.வெ. கவின்மொழி சமீபத்தில் இந்திய காவல் பணியில் (IPS)…

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம்!

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் திரு. சுபாஷ் சந்தர் தலைமையில், தமிழில் பெயர் பலகை வைப்பது சம்மந்தமாக அனைத்து வியாபாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. உடன் வட்டார…

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான போர்ட்டல் திறப்பதில் சிக்கல்!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான போர்ட்டல் திறக்கப்படாததால் லட்சக்கணக்கானோர் அவதி. வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் பல மாற்றங்கள் செய்யப்படுவதால் போர்ட்டல் திறப்பதில் சிக்கல் என தகவல்.

அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை விஐடி வளாகம், வேலூர் – பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்!!

வேலூர்: பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை வழங்குகிறது.  முக்கிய விவரங்கள்: – தகுதி: வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட மாணவர்கள் – விண்ணப்ப காலம்: 21.05.2025 முதல் 30.05.2025 வரை – நேரம்: காலை 10:00 மணி…

3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.