Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்ட வாக்காளர் உதவி மையங்கள் 19–23ம் தேதி செயல்பாடு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் வசதிக்காக வாக்காளர் படிவம் நிரப்ப உதவி மையங்கள் இன்று (19.11.2025) முதல் (23.11.2025) வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படுகின்றன.

வாக்காளர்கள், தங்களின் கணக்கெடுப்பு படிவங்களை தன்னார்வலர்களான அரசு அலுவலர்கள் உதவியுடன் சரியாக பூர்த்தி செய்து, தங்களுடைய வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *