10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தோ்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதையடுத்து மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியிடப்பட்டன. இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதிய அனைத்து மாணவா்களுக்கும் இன்று (18.08.2023) முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் இன்று (18.08.2023) காலை 10 மணி முதல் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும்.
தனித்தோ்வா்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தோ்வெழுதிய மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Aug 3rd)
Gold Rate Increased Today Morning (02.08.2025)
Auspicious (Nalla Neram) time today (Aug 2nd)
நீட் தேர்வு வெற்றி: கலசபாக்கம் அரசு பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீடு!
திருவண்ணாமலையில் ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா!
Tamil Nadu Tourism Launches One-Day Thiruvannamalai Girivalam Tour from Chennai
Gold Rate Decreased Today Morning (01.08.2025)