Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் ஊஞ்சல் உற்சவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கல்யாணம் உற்சவம் சுவாமி பெரியநாயகர், அம்மனுக்கு நலங்கு மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

திருவண்ணாமலை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

திருவண்ணாமலை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பிற்பகல் 2:30 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு. – வானிலை ஆய்வு மையம்.    

ஏப்.21 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்.21 தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு; சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். – வானிலை ஆய்வு…

தமிழ் புத்தாண்டில் ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாடும் – அமுது இயற்கை அங்காடி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் இயற்கை விவசாயத்தில் பெருமை கொண்ட ஆற்றல் Jc. மு. பிரவீண்குமார் அவர்களின் தலைமையில் இயற்கை விளைபொருள் அங்காடி “அமுது”, தனது 5வது ஆண்டு பயணத்தை இனிய தமிழ் புத்தாண்டு தினத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடியுள்ளது! தொடர்பு விவரங்கள் முகவரி: எண்.34, S.K…

அரசு கணினி சான்றிதழ் தேர்வு – ஆன்லைன் விண்ணப்பம் நாளை முதல் தொடக்கம்!

அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு நாளை (16.04.2025 ) முதல் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. தேர்வு கட்டணம் ரூ.1,030 ஆகும். தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் www.tndtegteonline.com இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வு இன்றுடன் முடிவடைந்தது

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வு இன்றுடன் முடிவடைந்தது. தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்படுகின்றது.    

கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் த. தினேஷ் தேசிய வருவாய் திறனறித் தேர்வில் (NMMS) வெற்றி!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தில் அமைந்துள்ள அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் த. தினேஷ், 2024–25ஆம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய் திறனறித் தேர்வில் (NMMS) சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றுள்ளார்.…

கலசபாக்கத்தில் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்!

கலசபாக்கத்தில் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் பங்குனி உத்திரம் முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் (11.04.2025) அன்று நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் மட்டும் திருக்கல்யாண நிகழ்வும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பங்குனி உத்திரம் முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் (11.04.2025) அன்று நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் மட்டும் திருக்கல்யாண நிகழ்வும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…

கலசபாக்கம் வட்டத்தில் கலவை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டத்தில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் கலவை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர்கள் ஊரக தோட்டக்கலைப் பணியின் ஒரு பகுதியாக அனுபவப் பயிற்சி பெற்று வருகின்றனர்.இந்த பயிற்சியின் ஒரு…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (10-04-2025) பங்குனி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்…

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் – பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம், இந்தாண்டு 11.04.2025 முதல் 16.04.2025 வரை நடைபெற உள்ளது.இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம், அருணாசலேஸ்வரர் மற்றும் அபிதகுசம்பிகையம்மனின் பாவனையான கல்யாணமாக…

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை!!

வேலூரில் பகலில் வெயில் கொளுத்திய நிலையில் தற்போது இடியுடன் கனமழை பெய்து வருகிறது.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், புதுப்பாளையம், ஜவ்வாது மலை பகுதியில் காற்றுடன் கனமழை.    

கலசபாக்கம் அடுத்த காப்பலூர் கிராமத்தில் அமைந்துள்ள பனைமேட்டு ஸ்ரீ முனீஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்!

கலசபாக்கம் அடுத்த காப்பலூர் கிராமத்தில் அமைந்துள்ள பனைமேட்டு ஸ்ரீ முனீஸ்வரர் சுவாமி திருக்கோவில் (20-04-2025) அன்றைய தினம் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. பக்தர்கள் கலந்து கொண்டு முனிஸ்வரன் அருள்பெற கேட்டுக் கொள்கின்றோம்.