Web Analytics Made Easy -
StatCounter

டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

2024 – 25ம் கல்வியாண்டில் MBA, MCA படிப்பில் சேர்வதற்கான டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். மார்ச் 9ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

பிப்.14 முதல் இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பிப்.14 முதல் மார்ச் 15 வரை தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

மாசி மாத பூஜைக்காக வரும் பிப்.13ல் சபரிமலை நடை திறப்பு!

மாசி மாத பூஜைக்காக வரும் 13-ந் தேதி சபரிமலை நடை திறக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று (09.02.2024) ஆண்டு விழா!

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று (09.02.2024 ) “அரசுப்பள்ளி மாணவர்களின் ஆளுமை வெளிப்படும்” கலைகளின் சங்கமம் என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

மக்களவைத் தேர்தல் மை தயாரிக்கும் பணி தொடங்கியது!

வாக்களித்தவர்களை அடையாளம் காண வைக்கப்படும் அழியாத மை தயாரிக்கும் பணிகள் தொடங்கியது. மைசூரில் உள்ள நிறுவனம் மக்களவைத் தேர்தலுக்கான மை தயாரிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

டான்செட் நுழைவு தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

டான்செட் நுழைவு தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிக்க  அவகாசம் நேற்று முடிய இருந்த நிலையில் வரும் 12ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கலசபாக்கத்தில் ஆற்று திருவிழாவிற்கான பந்தக்கால் நடப்பட்டது!

கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் தை மாதம் ரதசப்தமியில் நடைபெறும் ஆற்று திருவிழாவிற்கான பந்தக்கால் நடப்பட்டு, செய்யாற்றங்கரை பகுதிகளை சுத்தம் செய்யும் ஆயத்த பணிகள் நடைபெற்றன.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தை மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (07.02.2024) தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். 

எட்டிவாடி ரயில்வே கேட் பராமரிப்பு காரணமாக பிப்-22 ம் தேதி வரை மூடப்படும் – இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

வேலூர் – திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் எட்டிவாடி ரயில்வே கேட் பராமரிப்பு காரணங்களுக்காக (08.02.2024 முதல் 22.02.2024 ) வரை மாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை மூடியிருக்கும். அந்த…

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடையில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வுக் கூட்டமும், தண்டராம்பட்டு வட்டம், வானாபுரத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கூட்டுறவு நியாவிலை கடையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்…

தை அமாவாசையை முன்னிட்டு சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தை அமாவசை தினத்தை முன்னிட்டு, சென்னை, சேலம், கோவை, பெங்களூரில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வியாழக்கிழமை (பிப்ரவரி 8) சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள www.tnstc.in என்ற இணைதளம் மூலம் முன்பதிவு…

பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் – சிபிஎஸ்இ அறிவிப்பு..!

10ம் வகுப்புக்கு மார்ச் 13ஆம் தேதி வரையிலும், 12ஆம் வகுப்பிற்கு ஏப்ரல் 2ஆம் தேதி வரையிலும் தேர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பொது தேர்வுக்கான அனுமதிச்சீட்டு http://www.cbse.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தை அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூருக்கு 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தை அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூருக்கு 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வேலூரில் இருந்து 80, திருப்பத்தூரில் இருந்து 40, ஆற்காட்டில் இருந்து 30 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம்…

வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (08.02.2024) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் நாளை (08.02.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம், சோழங்குப்பம்,…

காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (08.02.2024) மின் நிறுத்தம்!

காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காஞ்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர்,…

போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை (08.02.2024) வியாழனன்று கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர்,அணியாலை ஆகிய பகுதிகளில் காலை 09:00 மணி முதல்…