Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை ஜமாபந்தி!

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை(19.06.2024 முதல் 21.06.2024) ஜமாபந்தி நடைபெறுகின்றது.பொதுமக்கள் தங்களுடைய தேவைகள் பட்டா பெயர் மாற்றுதல், பல்வேறுபட்ட சான்றிதழ்கள்,ஆகியவற்றை மனுக்களாக கொடுத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வட்டாட்சியர் திருமதி.ராஜராஜேஸ்வரி அவர்கள் கேட்டுக் கொண்டு உள்ளார்.

ஜமாபந்தியில் நடைபெறும் நிகழ்வுகள்:

இந்த வருவாய் தீர்வாயத்தின் போது கிராம மக்கள் தங்களுக்கு சொந்தமான வேளாண் நிலத்தின் உடமைப் பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம். தங்கள் கிராமத்தில் உள்ள குறைகளை நீக்க முறையிடலாம்.

கல்வி, குடிநீர், நீர் பாசன வாய்க்கால், மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம். சொந்த வீட்டு மனை இல்லாதவர்கள் இலவச மனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம். வீட்டு மனை மட்டும் உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம்.

கிராம மக்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஒய்வூதியம், இலவச அரசு காப்புறுதி அட்டை, வறட்சி நிவாரண நிதி கோருதல், நிலப் பட்டா மாற்றம், நிலப்பட்டா சர்வே எண்கள் மாற்றங்கள் தொடர்பாக வருவாய் தீர்வாயத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் நிறைவேற்றப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *