Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் வட்டத்தில் கலவை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டத்தில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் கலவை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர்கள் ஊரக தோட்டக்கலைப் பணியின் ஒரு பகுதியாக அனுபவப் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் திரு. பிரகாசம் கலந்து கொண்டு விழாவை தொடக்கி வைத்தனர். விழாவில் 20 மரக்கன்றுகள் நடப்பட்டு, இயற்கையைப் பாதுகாக்கும் நோக்குடன் மாணவர்கள் உறுதிபூண்டனர். இதில் தோட்டக்கலை நான்காம் ஆண்டு மாணவர்கள் ஷேக் அப்துல் வஹாப், ஷோபன் ராஜ், சௌடேஷ் குமார், சுபாஷ், சுதர்சன் மற்றும் சுனில் சர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில், விவசாயிகளுடன் நேரில் உரையாடி அவர்களின் தேவைகள், சிக்கல்கள் குறித்தும் மாணவர்கள் கவனித்து அறிந்து கொண்டனர். இது ஊரக வளர்ச்சி மற்றும் விவசாய மேம்பாட்டிற்கு ஒரு முக்கிய முயற்சியாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *